சில நாட்களாக மனது சரியில்லை. சுற்றி நடக்கும் செய்திகள் மனதை பாதிக்கின்றது. அதற்கு ஒத்தடம் கொடுக்கும் வகையில் என் பார்வை திரும்பியது, இந்த மெலடி பாடலுக்கு.
அதுவே இன்று உங்கள் முன் புதிராக சதிராடுகிறது.
காதலன் காதலியை சந்திக்க முடியாத அளவுக்கு அவர்கள் காதலுக்கு முட்டுக்கட்டை. இதைத் தாண்டி அவன் வந்து அவளைத் திருட்டுத்தனமாக சந்திக்கின்றான். இருவரும் கூடி முயங்குகிறார்கள். இவன் செல்லப் பார்க்கிறான். ஆற்றாமையால், அவள் இவனைக் கட்டித் தழுவி கண்ணீர் சிந்தி பாடுகிறாள்.
இது தாங்க களம்.
இப்ப பாட்டைக் கேளுங்க.. சாரி.. ஐ மீன்..இப்ப துணுக்கைக் கேளுங்கள். உங்களுக்காக 19 இடங்களில் குறியீடுகளைக் குறித்து இருக்கின்றேன். நீங்களும் குறியீடு செய்வது என்றால் go ahead 🙂
Please pay attention to the 1:05 to 1:10 second in the track for the bass-guitars. Nowhere, can this be this clear and palpable as it is here.
அதற்கு முன் ஒரு clarification 🙂 இழுத்துப் பிடிக்க ஆசை என்றாலும், அந்தக் காலத்தில் இந்தப் பாடலை எத்துணை பேர் வானொலியில் கேட்டிருப்பீர்கள் என்ற சந்தேகம் உருவாகும் காரணத்தினால், இதைக் கேட்காதவர்களுக்குகாக ஓரளவுக்கு தேடி கண்டுபிடிக்கும் வகையில் க்ளூக்களைத் தருகிறேன். எப்பவும் விட சற்றே கடினமாகத் தென்பட்டாலும், விடாமல் தேடினால், சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.
இந்தப் புதிரில் வந்த பல அருமையான முத்துக்களில், இந்த முத்துக்கும் ஒரு தனி இடம் கண்டிப்பாக இருக்கும். இதே படத்தில் வந்த இன்னொரு அட்டகாசமான டூயட் பிரபலமான காரணத்தினால், இது சற்று பின் தங்கிப்போனது என்னவோ உண்மை தான்.
ஆரம்பம் guitarல். தேவன் திருச்சபை மலர்களேவை ஞாபகப்படுத்தலாம். சரி தானே? ஆனால், அது சில நொடிகளுக்குத் தான். உடனே தண்டவாளம் மாறிப்போய் வேறு பாதையில் வண்டி போய்விடும். Flute ஆரம்பமாகும் போதே அந்த மாற்றம் தெரியும். இவர்கள் இருவரின் காதலுக்கு தடைகள் உள்ளதை அட்டகாசமாகக் காட்டும் அந்த ஷெனாய் இசையைப் பாருங்கள். அது சொல்லவில்லையா, அந்த இதயத்தின் வலியை? இந்தப் படத்தையும், பாடலையும் கண்டா அந்த உணர்வை நாம் அடைய வேண்டும்? கூடி முயங்கும் ஒரு காட்சிக்கும் எதற்கு இப்படி ஒரு சோக டூயட் என்பவர்கள், மேற் சொன்ன களத்தை நன்கு உணர வேண்டும். இசைஞானி, எப்படி கையாள்கிறார் பாருங்கள். ஏதோ ஒரு டூயட், டமக்கு டக்கா கொங்கக்கா மக்கான்னு போடாம, எப்படி situationஐ உணர்ந்து இசைத்து தனது இசையாலேயே அந்த உணர்ச்சிகளைக் காட்டிவிடுகிறார் என்பதற்கு இந்தப் பாடல் சிறந்த எடுத்துக்காட்டு.
இருவரின் காதலிலும், அன்பிலும் ஒரு தூய்மை இருப்பதை உணர்த்தவே அந்த வீணை interludes. அதற்க்கு மகுடம் சாத்தியது போல சந்தூரும் சேர்ந்துகொள்கிறது. அதே போல வீணையோடு கிடாரும், வீணை + கிடாரோடு fluteஉம் இணையும் அந்த அருமையான climaxஐ என்னவென்று சொல்வது?
Climax என்று தான் சொல்லனும். அதற்காகவே தான் திருக்குறள் 1330ஐ தலைப்பாக கொடுத்து உள்ளேன். எதுவுமே coincidence இல்லை 😉
இந்த டூயட் பாடலின் இசையை ரசித்துவிட்டு யூடியூப் பக்கம் போய்விடாதீர்கள். அங்கு உங்களுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கும். அருமையான பாடல், அருமையான இசை, அருமையான வரிகள். இருந்தும், பாடலை படமாக்கிய டைரக்டர், ஏன் ஒரு மலையாளப் பட ரேஞ்சுக்கு சொதப்பிவிட்டார் என்று தெரியவில்லை. அதில் எமக்கு வருத்தமே. இருந்தும், இசைஞானி பாடல்கள் பலவற்றிற்கு இது தானே கதி. இதில் என்ன ஆச்சரியம். இல்லையா?
இன்னும் 19 புதிர்கள் தான் வரப்போகிறது. இன்னும் எத்துணை முத்துக்களைத் தான் எடுக்க முடியும்? இவரது கடல் மிகவும் ஆழம். ஒரு க்விஸ் அல்ல, 100 க்விஸ் வந்தாலும், எதையாவது ஆழ மூழ்கி எடுத்துக்கொண்டு தான் வர வேண்டி இருக்கும்.
ஏதோ என்னால் முடிந்தது, நான் கேட்டது — குறிப்பாக வானொலியில் கேட்டு, உள் வாங்கியதை, இங்கு சுவாசிக்கிறேன். அவ்வளவே. Again, the intent is to NOT make it purposefully difficult, as that goes against my objective for this Quiz. சரியா?
இந்தப் பாடலை கேட்டு இருக்கின்றீர்களா? இப்போது தான் கேட்கின்றீர்கள் என்றால், உங்கள் அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளுங்களேன்.
நன்றி.
Have a nice day.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Noise-removed from a good source. No tempo was altered, but, volume was maximized. Prelude and 2 interludes were conflated.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
The lyricist — a close friend of Maestro Ilaiyaraaja at that time — has also handled the story and dialogues for this movie, while a disciple of a legendary director handled the screenplay and direction. Title of this movie is one of the 133 chapters (அதிகாரம்) of Thirukkural.
CAUTION: Today you have 2 clues to listen and answer. Very long post. I am sorry for its length. It comes unedited — straight from my heart 🙂
விமர்சனமே எழுதாமல் ஒலித் துணுக்கை மட்டும் கொடுத்துவிடு ஓடிட வேண்டும் என்று நான் நினைத்திருந்தால், இன்றைய புதிர் தான் அதற்கு ஏற்றது. ஏனென்றால், உணர்ச்சிவசப்படாமல் இதற்கெல்லாம் சிந்தனைகளை சிதற விடாமல் இருக்கவே முடியாது 🙂
இத்துணைக்கும் இது சோகப் பாடல் அல்ல. அருமையான காதல் பாடல்.
அட்டகாசமான டூயட் பாடல்.
ஆனால், அதில் நம்மையும் அறியாமல் சிறு வயது நினைவுகள் தைக்கப்பட்டு இருப்பதால், ஏதேதோ, தூரத்து விசயங்கள் எல்லாம் வந்து அழுத்துவது போன்றதொரு சுகமான சுமை, கண் இமைக்கும் நேரத்தில் வந்துவிட்டு ஓடிவிடுகிறது.
நேற்றைய பாடலில் ஒரு மலேசியா வாசுதேவன் அண்ணனின் பாடல் இருந்தாலும், அதை கொடுக்க முடியாத காரணத்தினால் வருந்துகிறேன் என்ற ரீதியில் சொல்லிவிட்டு போயிருந்தேன், அல்லவா? இன்று அதை சரி செய்யும் விதத்தில், மலேசியா அண்ணனின் டூயட் பாடல்களில் வரிசை போட்டால், முன்னணியில் உள்ள பாடல்களில் ஒன்றான இதை களம் இறக்குவதில் ஒரு சுகம்.
அடிக்கடி நான் இங்கு குறிப்பிட்டு சொன்னது போல, மலேசியா அண்ணன், அந்தக் காலத்தில் stereotype and clichesஆல் அடிபட்ட மனிதர். இசைஞானி எப்படி நிறைய ஏசுக்களுக்கும் பாட்டுக்களுக்கும் ஆளானாரோ, அதே போல இவரும்! இன்றைய மக்கள் ஆட்டுக்குட்டி முட்டையிட்டை ஆயிரம் தடவை புகழ்ந்து பேசுகின்றனர். 1970களின் இறுதியில் தொடங்கி 1980களில் எல்லாம் அதே பாடலை மலேசியா அண்ணன் பாடியதாலேயே அவரை நையாண்டி செய்தும், குறைத்துப் பேசியுமே சுகம் கண்டது நம் இனம் என்பதை மிகுந்த வருத்தத்தோடு தான் இங்கு பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. நமக்கே இப்படி என்றால், அண்ணன் எப்படி feel பண்ணி இருப்பார்னு நெனச்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு 😦 ஆக, அந்த generation ஆள் என்பதால் அத்தகைய bias என் ரசனையையும் ரகசியமாகவே அமுத்தி வைத்திருந்தது என்றால், அது மிகை இல்லை. பின்னாட்களில் தான், அண்ணனின் பாடல்களில் என்னையே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அடிக்கடி என்னுடைய நண்பர்களிடம் சொன்னதுண்டு. பரவாயில்ல டா…அந்தக் கால நட்டுக போல்டுக கிரிட்டிசிசத்தை எல்லாம் கண்டுக்காம, மலேசியா அண்ணன், இசைஞானி எல்லாம் பாடினதுனால காலம் பூரா நாம இந்த மாதிரி அட்டகாசனான பாட்டை எல்லாம் கேக்க முடியுதுன்னு குதூகலிப்பேன்.
இவர்கள் இருவரின் குரலில் ஈர்க்கப்பட்டதால், எங்கள் வீட்டு பாத்ரூம் என் ரிக்கார்டிங் செண்டராக மாற ;), அந்தக் கொடுமையை (??) பொறுக்க முடியாமல் வேப்பிலையை அடித்து பேயை விரட்டும் ஆட்டையாம்பட்டியாக என் அக்காள் அதை மாற்றும் வகையில் என் மீது பாய… எல்லாம் இன்னும் நினைத்துப் பார்த்தால் பசுமையோ பசுமை. 🙂
நிற்க.
அடிக்கடி நம் ஜிரா (@RagavanG) சொல்வார் — மலேசியா வாசுதேவன் – சுசீலா டூயட்கள் எல்லாமும் செம என்று. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
நிற்க.
இன்றைய பாடலும் அகில இந்திய வானொலி, கோயமுத்தூர் நிலையத்தாரின் ரசனையால் அடிக்கடி கேட்டு கேட்டு மனத்தில் ஆழமாகப் பதிந்தது. பின்னர் அதிகம் வானொலியில் வரவும் இல்லை, தூர்தர்ஷனிலும் பார்த்ததே இல்லை.
ஆனால், அமெரிக்கா வந்த பின்னர், இந்தப் பாடலை கேட்காமல் ஒரு மாதிரி இருந்தது. புளோரிடாவில் பட்டம் வாங்கின கையோடு விடுமுறையில் இந்தியா சென்றபோது, நேராக ஓடிப்போய் சரண்டர் ஆனது ராயல் எலக்ட்ராணிக்ஸில். அங்கு, இந்தப் பாடலின் முதல் வரியைப் பாடி காட்டி இது என்ன படம்? அந்தப் பாட்டை பதிவு செஞ்சுடுங்கன்னு சொல்லி, பதிவு செய்து வந்தேன் (அந்தக் காலத்தில் Alta Vista and Yahoo search enginesதான். Unicodeம் இல்லை, தமிழ் சார்ந்த தேடலுக்கு எல்லாம் அவ்வளவு மவுசு இல்லை!). அதில் இருந்து தான் இந்த encoding வருகிறது. 🙂
இப்படி ஒரு புதிருக்கு பின்னால் தான் என்னென்ன கதை இருக்கிறது பாருங்கள். 🙂
சரி, மலேசியா + தாயின் மடி + வளர்பிறை யில், மலேசியாவைப் பற்றி சொல்லிவிட்டேன். அதென்ன தாயின் மடி…அதையும் சொல்லிடறேன். பொறுத்துக்கோங்க. நான் தான் சொன்னேன்ல, இந்தப் பாட்டுக்கு எல்லாம் என்னால உணர்ச்சிவசப்படாம இருக்கவே முடியாதுன்னு 🙂 இதுனாலேயே தான் இந்தப் பாட்டை எல்லாம் முதலிலேயே பதிவேற்ற முடியவில்லை 🙂
தாயின் மடி.
ஹும்…..
Wanderlust — இப்படி ஒரு ஆங்கில வார்த்தை உங்களில் பலருக்கு தெரியும். பல நாடு, ஊர், என்று போய் பார்க்க வேண்டும் என்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அந்த உந்துதலுக்குத் தான் wanderlust என்று பொருள் 🙂 ஆனால், பல இடங்களுக்குப் பறந்து, திரிந்து, சென்று, வசித்து என்று எல்லாமும் ஆகி முடிந்தாலும், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அது என்னவோ தாயின் மடியில் வந்து படுத்தால், அது ஒரு தனி ஸ்பெஷாலிட்டி தான். இல்லையா?
உலகத்தின் ஏழு அதிசயங்கள் அது இதுன்னு பட்டியல் போடுற இடத்துல, தாயின் மடியை சேர்க்காமல் விட்டது தப்புன்னு சொல்வேன் 😉
தாயின் மடியில் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்தாலும் சரி, தாயின் முகத்தில் முகம் பார்த்தாலும் சரி, நம்மையே நாம் உணரும் மிகச் சிலத் தருணங்களில் அதுவும் ஒன்று, அல்லவா?
அப்படித் தான், மலேசியா அண்ணனின் பல பாடல்களைப் பார்க்கின்றேன் — குறிப்பாக இந்தப் பாடலை 🙂
அடுத்ததாக வளர்பிறை.
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது
இப்படி ஒரு அருமையான பாடல் ஒன்று உண்டு. அது போல, இசைஞானியும் சரி, மலேசியா அண்ணனும் சரி, இணைந்து பணியாற்றிய போது, இது ஹிட், இது சூப்பர் ஹிட் என்றெல்லாம் பார்க்காமல், வெளுத்து வாங்கினார்கள். It was just as air is blowing, waves are undulating, birds chirping…No special effort was ever needed. நிலவுக்கு ஏது கவலை — அது வளர்கிறதா, தேய்கிறதா என்று? அதை ரசிப்பதில் அல்லவா நம் எண்ணம் என்பது வளர்பிறையாக வளர்ந்து கொண்டே போகிறது?
அது போல இசைஞானியின் இசையில், மலேசியா அண்ணனின் பாடல்கள் ஒவ்வொன்றுமே வளர்பிறை தான். ஒரு கலைஞனின் பெருமையை அவ்வளவாக வெளியில் பேசப்படாமலே ஒரு தலைமுறையை வீணடித்த காரணத்தினால், இவருடைய பாடல்களை கேட்குமட்டும் கேட்குமட்டும், அந்தப் பாடல்களில் உள்ள பாசம், காதல், கோபம், தாபம், கிண்டல், கேலி, நக்கல் என்று சகலமும் நாளுக்கு நாள் வளர்ந்து நம்மை ஆட்கொள்ளும் வளர்பிறை போல. நான் மகான் அல்ல வி.கே.ராமசாமி ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால், என்ன கழுத நான் சொல்றது ;)))
இப்போது வாருங்கள் துணுக்குக்கு.
முதல் துணுக்கு. கேளுங்கள். (3 interludes woven together)
மலேசியா அண்ணன் இறப்பதற்கு முன், ஜெயா டிவியில் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் தனது நினைவுகளை தவழ விட்டார். அதிர்ஷ்டவசமாக கோயம்புத்தூர் சென்றிருந்தபோது பார்க்க முடிந்தது. ஆனால் பதிவு செய்யும் வசதி தான் இல்லை. அதில், இசைஞானியுடனான தனது ஆரம்ப நாட்களை நன்றாக அசைபோட்டார். அதில் ஒரு ஆத்மார்த்தமான wavelength வெளிப்பட்டதை இங்கு நினைவு கூர விரும்புகிறேன். ஏனென்றால், இந்தப் பாடலில் நீங்கள் அதை ஆத்மார்த்தமாக உணர்வு ரீதியாக நன்கு உணரலாம். இந்த sequenceஐயே எடுத்துக்கோங்களேன். முதன் முதலில் காதலியின் மெய்யைப் பற்றியவுடன் அவள் நாணுவதைப் போல இங்கே வீணை தான் எப்படி சிணுங்குகிறது பாருங்கள். சந்தூரும் புல்லாங்குழலும், வீணையின் சிணுங்குதலுக்கு ஏற்றாற் போல துரத்திக்கொண்டே காதல் விளையாட்டை நடத்துகிறது. இது இசைஞானியின் சித்து விளையாட்டு. இந்த விளையாட்டிற்கு, மிக, மிக அருமையாக சுசீலாம்மாவும் மலேசியா அண்ணனும் டூயட்டை பாடி இருப்பார்கள். தேன் குரல் — சுசீலாம்மாவுடையது. இந்தப் பாடலில் அந்தத் தேன் குரல் இன்னும் ரம்மியமாக ஒலிக்கும். ஆனால், மலேசியா அண்ணனோ, subduedஆக, ஒரு shyness கலந்த ஆண், காதல் வயப்பட்டு பாடுவது போல, the man next door 🙂 ஸ்டைலில் பட்டையைக் கிளப்பி இருப்பார். ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற பாடலில் பூமியில் மேகங்கள் கூடியாடும் யோகமேன்னு மூன்றாம் சரணத்துல அதிரடியாக நொழஞ்சு நம்ம மனசுல கப்புன்னு உக்காந்துகிட்ட அண்ணன், இதுல ஆரம்ப பல்லவியிலேயே டேரா போட்டு உக்காந்துக்குவார்.
வயலின்களும், சந்தூரும், கிடாரும், வீணையும், புல்லாங்குழலும் — இவை எல்லாவற்றையும் விட — வீணையுடன் போட்டி போட்டுக்கொண்டு bass guitar வேறு….போதுமப்பா.. மண்டைல இதுக்கு மேல நிறுத்தி வச்சுகிட்டு தட்டச்சு செய்யமுடியல…அப்படி ஒரு பரவசம் வருது, இந்தப் பாட்ட நெனச்சாலே! 🙂
இரண்டாம் துணுக்கு. கேளுங்கள். (prelude)
இதுல பாட்டோட சரணமே வந்துடறது. அதனால பதில் சொல்வதில் குழப்பம் இருக்கக்கூடாது. ஏன் இதைக் கொடுத்தீர்கள் என்று சிலர் கேட்கலாம். அய்யா, இந்தப் பாட்டெல்லாம் எத்துணை சிறந்ததோ, அந்த அளவுக்கு அவை extinctஆக உள்ளது. இணைய காலத்தில் கூட இதெல்லாம் இன்னும் பரவலாக வெளிவரவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம், யார் என்ன நினைத்தாலும், அய்யோ அந்த ரெக்ஸ் ரம்பக் கேஸ் (??) பெருசா ஒரு போஸ்ட் எழுதுச்சே…அந்தப் பாட்டுய்யான்னு 😉 யாரேனும் ஒருவர் நினைத்தாலும் கூட பரவாயில்லை, எனக்கு அதுவே போதும் :). இந்தப் பாடல் இன்னும் பலரை போய் சேர வேண்டும். எப்படி, இந்தப் பாடலை எல்லாம் கேட்காமல் இருந்தோம் என்று யோசிக்கவாவது வேண்டும். இன்னும் இது போல் எத்துணை என்று தேட வேண்டும். இன்னும் பலர் இம்மாதிரி பாடல்களை எல்லாம் தேடி, விமர்சனம், தியானம் என்று அடித்து தூள் கிளப்ப வேண்டும். இப்படி நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே? 🙂
அதற்காகத் தான் இரண்டு நாட்களாக இதை encode செய்ய கஷ்டப்பட்டேன். ஒலியின் துல்லியம் ஒரு பக்கம், சந்தூர் + வீணை + கிடாரின் ஒலியில் ஒரு ஆழம் — இணையத்தில் எங்கும் இதை நீங்கள் காண முடியாது. பெருமைக்காக சொல்லவில்லை… இசைஞானி+ மலேசியா அண்ணனின் பாடல்களை, இப்படியும் கேட்டுப் பாருங்கள் என்பதை மட்டும் தான் சொல்ல வருகிறேன். அது போதும் எனக்கு. ஒரு துளி hissing noise கூட இல்லாத வண்ணம், அணுஅணுவாய் தேடித்தேடி துடைத்துவிட்டேன். மலேசியா அண்ணனுக்கு எனக்கு தெரிந்த விதத்தில் இது ஒரு அஞ்சலி என்று கூட சொல்வேன் 🙂 இசை இசைஞானியுடையது. குரல் மலேசியா அண்ணனுடையது. என்னுடையது? வெறும் தூசு துடைப்பது 😉 வயசான கிழவி, ஊருக்கு போயிருக்கற அவ மவன் படத்த எடுத்து தூசி தொடச்சுட்டு, மவன் எப்ப வருவான்னு ஒக்காந்துட்டு இருப்பா இல்ல? அது மாதிரியான நெலமை தான் நம்மோடதும் 😉 எனக்கு தெரிஞ்சதை தானே நான் செய்ய முடியும் 🙂
இந்தத் துணுக்கில் பாருங்களேன். பாயசத்துல இனிப்பு இருக்கேமா..அப்புறம் எதுக்குமா இந்த முந்திரின்னு சின்ன வயசுல அம்மாவை நச்சரிப்பேன். அப்ப அவங்க சொல்வாங்க, நல்லா இருக்கும் தம்பி..சாப்பிடு. அதாவது, சுவைக்கு சுவை கூட்டும் முந்திரி..அதை ஆராயாமல் பருகிவிட்டு எந்திரின்னு அம்மா சொல்லாம சொல்வாங்க. அதே போலத் தான் இந்தத் துணுக்கு. அத்துணை இசைக்கு மத்தியிலும் 26 நொடிக்கு மேலே அந்த வீணை sequence தேவையா? அது இல்லாமல் இருந்திருந்தால் கூட நன்றாகத் தானே இருந்திருக்கும். இருந்தாலும், நம் இசைஞானி அம்மா மாதிரி. நல்லா இருக்கும் தம்பி..சாப்பிடுன்னு இசையாலேயே சொல்லிவிடும் அந்த அழகு…அந்த பாசம்…
போதும்டா சாமி. நான் போய் படுக்கறேன். நீங்க பதில பதிச்சுடுங்க. நான் கீச்சு பக்கம் கூட வர மாட்டேன். இன்னிக்கெல்லாம் இந்தப் பாட்டு தான்.
மலேசியா அண்ணன் தான் இன்னிக்கு நம்ம கூட முழுசா இருப்பார் 🙂
நன்றி.
Have a nice week ahead. Happy 4th of July to those in America and drive-safe, if you are traveling.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Extensively noise-removed and noise-gate applied. No tempo was altered. Multiple passes to remove hiss noise and LP noise. 3 interludes were conjoined together. 2nd track is just the prelude.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
Movie title comes from the starting line of a very famous Pattukottai Kalyanasundaranar song, tuned by MSV-Ramamurthy duo and sung by the inimitable Late TM Soundarrajan.
Mother’s Day starts early for us, here at #365RajaQuiz. It is a Mother’s Day weekend here 🙂
So, today and tomorrow, we will have Mother’s Day clues, touching the theme of Motherly love.
In today’s clue, I had woven a prelude and an interlude. This song is outright soothing nga. I mean, beyond the melodic value, one comes out as a full person, listening to this song. This singer is known for this kind of songs that she would’ve given her 100% in her emoting of motherly virtues.
My favorite in this song sequence is that gushing violin sequence in the interlude. What a superb accompaniment from Tabla and flute.
May this lullaby soothe our hearts and souls.
Advanced Happy Mother’s Day! Our actual Mother’s Day song will be tomorrow. Keep guessing 🙂
Have a nice week ahead.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
This song was sung by P. Suseela. However, it also has another version sung by Maestro Ilaiyaraaja.
அட்லாண்டா விமான நிலையத்தில் ஒரு இக்கட்டில் இருக்கிறேன். கவலைப்பட ஒன்னும் இல்ல. அதனால இவ்வளவு தான் என்னால type பண்ண முடியும் இன்னிக்கும் நாளைக்கும். தப்பா நெனச்சுக்காதீங்க.
இன்னிக்கு வர்ற பாட்டு செமயான சோக டூயட். எனக்கு மிகவும் பிடிச்சது. இதை கண்டுபிடிக்க ஒரு இசைத்துணுக்கு. இதை கண்டுபிடிக்க உதவும் விதமாக இன்னொரு இசைத்துணுக்கு. சரியா?
போட்டுத் தாக்குங்க. All the very best.
Have a nice week ahead.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
This song’s beginning line is purposefully muted. But, enjoy this Malaysia Annen’s splendor to find out the main clue song. All the very best.
நேற்றைய பாடலுக்கு உங்களின் சிலாகிப்பைக் கண்டு அசந்து போனேன். நல்ல பாடல்களுக்கு என்றும் மவுசு உண்டு!
இன்றும், மேகத்தில் இருந்து வரும் பாடல், அசத்தலான பாடல்.
சிங்கத்துக்கு உடல் நலம் சரியில்லைன்னு கேள்விபட்ட உடனே, கொஞ்சம் கலவரப்பட்டேன்.
இந்தப் பாட்டை பாடினவரை சிங்கம்னு சொல்லலைன்னா, அது தான் அசிங்கம்! என்ன ஒரு வசீகர குரல், எத்துணை பாடல்கள். இன்றும், இவரின் முருகன் பக்திப் பாடல்களை இரு CDகளில் அவ்வப்போது கேட்பேன்.
இந்தப் பாடலில் தாம்பத்தியத்தைப் பற்றியும், குழந்தையைப் பற்றியும் அவ்வளவு அழகாக இரு பாடகர்களும் பாடியிருப்பார்கள்.
இன்று of course breather தான். நேற்றைய பாடல் போல இதிலும் Guitarன் ஆளுமை அட்டகாசமாக இருக்கும். ஆனால், அதனுடன் ஆரம்பத்தில் வரும் flute மற்றும் இறுதியில் வரும் violins. இவை தான் எனக்கு இந்த sequenceஐ மிகவும் சிறப்பாக ஆக்கிக் காட்டுகிறது. மேலும், இந்தப் பாடலை அந்தக்காலத்தில் ஒலிபரப்பு செய்யாத நாள் என்று ஒன்று இருக்கிறதா என்பதை அந்தக் காலத்து யூத்துகளிடம் தான் கேக்கணும். ஏன்னா, நானும் இந்தக் காலத்து யூத் பாருங்க.. Ahem ;))
என்ன கண்டுபிடித்துவிடலாம் தானே?
ஆல் தி பெஸ்டு 😉
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
Legendary lyricist wrote this song for a legendary actor-actress combo, which was sung by a legendary duo.
200 என்னும் மைல்கல்லை ஒரே நாளில் தொட்டுவிட்ட @NChokkan மற்றும் @thachimmammuவிற்கு வாழ்த்துகள். அதற்கு முந்தைய நாள், @ezharai 250ஐயும் @sagittarian82 100ஐயும் தொட்டார்கள். அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள். இங்கு விமர்சனத்தில் சொல்லாமல் விடுபட்டு போனாலும், என்றும் நம் அனைவரின் உள்ளத்திலும் வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும் உண்டு என்பதை அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 🙂
இரண்டு நாட்களாக சற்று கனமான செய்திகளை உள்வாங்கினோம். துக்கம், மகிழ்ச்சி, ஏமாற்றம் என்று சகலமும் கலந்தது தானே வாழ்க்கை?
அதனால், இன்று பாதை மெதுவாக மாறி, வேறு மாதிரி பாடலுக்குள் நுழைகின்றோம். மனதுக்கு ஒத்தடம் கொடுத்த மாதிரி இருக்கும் என்று நம்புகிறேன். கேட்டுவிட்டு சொல்லுங்கள்.
அருமை நண்பர் சுரேஷ் இப்படி சொல்லி இருந்தார் 🙂
Maybe time for @rexarul to change his quiz strategy. I am able to get answers for two consecutive days !!!!
படத்தில் 3 சூப்பர் நாயகிகள். அதற்கேற்றாற் போல 3 பாடல்கள். அந்த 3 பாடல்களிலும், ஒரே 3 பாடகிகளை உபயோகப்படுத்தி இருப்பார் இசைஞானி இளையராஜா. இது மாதிரி ஒரு sui generis க்ளூ எங்காவது பார்த்திருக்க முடியுமா? இதை விடவும் வேறு க்ளூ வேண்டுமோ?
பிரச்சினை இல்லை. அவர்கள் 3 பேரின் குரலைத் தான் இடையிசையில் கேட்டுவிட்டீர்களே. இன்னும் என்ன தாமதம்? ஹும் புறப்படட்டும் விடைக் கணைகள்!
I feel today’s is one of the best clues to ever come in our #365RajaQuiz. It has all the elements in it. You need to be using your critical thinking to recollect, what could be the movie. You may need to recollect, which 3 singers, Raaja could have used for these 3 gorgeous heroines of yesteryear! Besides, you will have to also use your listening skills to spot-out the voices in the track. And if you were able to identify, without any SQL searches, then give yourself a pat in the back. Because, without SQL, I will agree, this can be a tough clue to crack.
மேலும் இதையும் சொல்லியே ஆக வேண்டும். ரிக்கார்டிங் செண்டரில், இந்த Echo இசைத்தட்டின் முன் அட்டையையும், பின் அட்டையையும் பார்க்கவே தனி டிக்கெட் போட்டு வசூல் செய்திருந்தால், செம கலெக்ஷன் ஆகியிருக்கும். நல்ல வேளை! அந்தக் காலத்தில், பேன் அது இது என்று ஹேஷ்டேக் எல்லாம் யாரும் போடாமல் போனார்கள்! 😉
All the best.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Noise-removal done once. Noise-gate was used once. No tempo was changed.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
Title of this movie comprises 5 words and forms a common, idiomatic cliche that many of us will use in everyday parlance, to those who boast about themselves by blowing their own trumpets.
இன்று நம் புதிரில் ஒரு சிறு புதுமை முயற்சி. எப்போதும் போல, நீங்கள் ஆரவத்துடன் பங்கேற்பீர்கள் என்றே நம்புகிறேன்.
சென்ற மாதம் வேகமாக சென்றதால் ஜார்ஜியா காவல்துறையினர் எனக்கு டிக்கெட் கொடுத்தார்கள். இன்று கோர்ட்டுக்கு போய் ஜட்ஜய்யா முன்னாடி வணக்கம் வச்சுட்டு மொய் அழுதுட்டு வந்தேன். ஆனா, போன மாசம் என் மகள் கேட்டாள், அப்பா, ஜட்ஜ் நல்லவரா, கெட்டவரா? அதுக்கு நான் சொன்னென், கேள்வி சரியாடா குட்டி? ஜட்ஜ் நல்லவரா கெட்டவராங்கறத விட, உங்கப்பா செஞ்சது தப்பா, சரியான்னு இல்ல இருக்கணும்? அவள் அதற்கு சிரித்து சரி செய்யப்பார்த்தாள் 🙂 பின்னர் அவள் மீண்டும் கேட்டாள், போலீஸ் அங்கிள் இல்லைன்னா, என்ன ஆகியிருக்கும் அப்பா?. அதற்கு நான் சொன்னேன், என்னை யாரும் பிடிச்சிருக்கமாட்டாங்க. அதற்கு அவள் கேட்டாள், அப்போ மட்டும் நீங்க வேகமா ஓட்டினது தப்பா இருக்காதா அப்பா? என்று போலீஸ் இல்லாவிட்டால் தவறாக என்னுடைய செயல் இருந்திருக்காது என்னும் ரீதியில் அவள் ஆழ சிந்திப்பதை உணர்ந்து, அவளின் கண்ணோட்டத்தில் இருந்த அந்த சந்தேகத்தை திருத்த முனைந்தேன். 🙂 அதற்கு நான் சொன்னேன், ஜட்ஜய்யா முன்னாடி போய் நிக்க வேண்டிய தப்பா இருந்திருக்காது குட்டி, ஆனா, தப்பு தப்பு தான். யாராவது பாத்தா தான், நாம் செய்யறது தப்புன்னு இல்ல. யாரும் பாக்காதப்போ கூட நாமளே நம்ம நடத்தைய சரி பாத்துக்கணும். யாரும் பாக்காதப்போ நாம தப்பு செஞ்சாலும் அது தப்பு தாம்மா. அதுக்கு பேர் தான் ethicsனு சொன்னேன். ஒரு விதமாக பெருமூச்சு விட்டாள். 🙂
இதென்னடான்னு யோசிக்கறீங்களா? காரணம் இருக்கு. கேளுங்க.
இந்த புத்தகம் படிச்சிருக்கீங்களா?
அதாவது, நம்ம #365RajaQuiz ஒரு honor-systemல நடக்குது. இது வரைக்கும் மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடந்துட்டு வந்திருக்கு. கடைசி வரைக்கும் நடக்கும்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு விஷப்பரீட்சையும் இன்னிக்கு இருக்கு.
அதுக்கு முன்னாடி, 5/365க்கு ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடுங்க 🙂
After 230 days, I am giving the voice-clue in 235/365 with a sincere request 🙂 !
This is a favorite song of mine, since childhood, where, despite the musical interludes of Maestro Ilaiyaraaja, the impeccable singing of our beloved Malaysia Vasudevan Annen clearly bowled me over 🙂 சும்மா என்னமா பாடி அசத்தியிருப்பார். அடேங்கப்பா! காதல் ரசம் சும்மா பசிப்பிக் கடல் அளவுக்கு ஆழமா கொட்டியிருப்பார். அந்த சரணத்துல அவர் கொட்டுற காதல் ரசத்துக்கு ஈடு வேற எதுவுமே இல்லை. May be, ஆயிரம் மலர்களேல சரணத்துல entry கொடுக்கும் அவருடைய ததும்பும் காதல் ரசம் தான் கிட்ட வரமுடியும். இந்த பாட்டை, அதுவும், இந்த வரிகளை நான் எப்ப கேட்டாலும், அன்னிக்கு அதுல இருந்து நகரவே முடியாது. இந்த பாட்டும் நமக்கு கோவை அகில இந்திய வானொலி தான் உபயம்.
முதலில் BGM பாத்துடுங்க.
இதுக்கு இன்னும் பதில் தெரியலைன்னா, இதோ மலேசியா அண்ணன் குரலில் பாடலின் சில வரிகள்:
The litmus-test today is, PLEASE see if you can resist your temptation from Googling the lyrics to get the answer. I am boldly challenging you to see your willpower to resist Googling the lyrical lines. And then share your experience of how you felt about it. Try to find the answer, WITHOUT Googling the verse.
மேல நான் காட்டியிருந்த புத்தகத்துல Willpower பத்தி நிறைய சொல்லியிருப்பாங்க. முடிஞ்சா படிச்சுப் பாருங்க. நான் முழுக்க படிச்சதில்ல. ஆனா, கொஞ்சம் படிச்சதுல வச்சு சொல்றேன். அது மாதிரி, இன்னிக்கு you are tempted. I know it is tough to resist. So, give it a shot 🙂 Test yourself.
In today’s test, as it always is the case, you are your own Judge 🙂 There is a lifeline clue as usual too 🙂
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
When the Director approached M.S Viswanathan, he referred Maestro Ilaiyaraaja to score for this movie as it involved a subject that was too dear for Isaignani Ilaiyaraaja. Maestro Ilaiyaraaja himself prefers to sing one song from this movie, almost always 🙂 Besides, a respectable hero of this song will be appearing in a brief, that will remind you a Tweet from @NChokkan
நேற்றைய பாடலைப் போல, இன்றும் சுசீலாம்மா. இங்க அவங்களுக்கு கொஞ்சம் நிறைய ரசிகர்கள் இருக்காங்கன்னு தெரிஞ்ச பிறகும், இன்றைக்கு வரும் இந்த மாதிரி பாட்ட எப்படி கொடுக்காம இருக்க முடியும்?
பல மாதங்களாக இந்த பட பாடாலை கொடுக்கணும்னு இருந்தேன். ஆனா ஒரே dilemma. அந்த அளவுக்கு, இந்த படத்தின் பாடல்கள் அத்துணையும் செம ஹிட். அதனால் மற்ற பாடல்களை பற்றி பேச வேண்டாம் என்று விட்டுவிடுகிறேன்.
இப்படி, இந்த படத்தில் பல பாடல்கள் இருந்தும், இதை நான் தேர்வு செய்ய காரணம்? ஒரே சீரான வேகத்தில் ஒரு கிளப் சாங் கணக்காக போகும் இந்த பாடலில் ஒரு போதை இருந்துகொண்டே இருக்கும். இதில் கூடுதல் சிறப்பே சுசீலாம்மா இந்த பாட்டை அதே போதையூட்டும் குரலில் பாடியிருப்பது தான். ஆரம்பம் முதலே, குரலில் ஒரு டெம்போவை அவங்க மெயிண்டேயின் பண்ணிட்டே வருவாங்க. இன்னொரு தனிப்பட்ட காரணம், இந்த க்ளூவின் இசையில் வரும் Saxன் ஆளுமை தான். கேட்டு பாருங்கள். பிறகு நீங்களே சொல்லுவீர்கள்.
இரைச்சலை அகற்றியிருக்கிறேன். அதனால் salt-and-pepper, hissing noise அறவே இருக்காது. FYI.
அதே போல நடுவில் வரும் அந்த கருவி என்ன? SoundCloudல் நான் குறிப்பாக இந்த கேள்வியை கேட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
இந்த பாடல், மிக குறைவாகவே வானொலியில் கேட்டிருக்கிறேன். இந்த படத்தின் பிற பாடல்கள், பயங்கரமாக பிரபலமானவை. ஆகையால், இந்த பாடலை கேட்கும்போது உங்களுக்கு, அட இந்த பாட்டு தானான்னு தோணலாம். இல்லை என்றால், ஆகா, இப்படி ஒரு பாட்டு இருப்பதே தெரியலையே என்று பெருமூச்சு விடலாம். எதுவானாலும், பின்னூட்டத்தில் சொல்லுங்கள். புரிந்துகொள்ள உதவும்.
நன்றி.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
Song’s Pallavi will have reference to one of the famous Indra’s “Apsara”s, as the female singer will claim she is “Ramba”. This movie, despite having a big star-cast and directed by a legendary ace director, ran into problems and its release was delayed. When it was released, it coincided with another movie by the same legendary director. Due to the difference between the time this movie was started and released finally, the quality of the visual-effects suffered and was widely discussed at the time. I cannot say positively, whether this song suffered — in that, whether it was left out, when the movie was released. Sorry.
We are in the 1980s for today too 🙂 This superb hit will surely light a new work-week for all of us. I literally grew-up, listening to this number, all the time, through All India Radio, Coimbatore station. The energy will be all too evident in this song and I am sure this will be much easier than 4/365 and 8/365. You will fall in love at the very beginning as to how the guitar notes take-off, followed by wonderful violins and flutes to finish it in the end. This was a great hit of the 1980s.
So, please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz. Have a great weekend.
பி.கு:இணையத்தில் இந்தப் பாடலின் ஒலியின் தரம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. கிடாரில் bass இல்லை, அதே போல் கிண்கிணி மணி போன்று வரும் ஒலியில் ஒரு ஆழம் இல்லை. எனவே, இதுவும் encode செய்யப்பட்ட கோப்பு. விடையின் போது, நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.
Answer: Thiru Theril Varum (திரு தேரில் வரும் சிலையோ) from Naan Vaazha Vaippen (நான் வாழ வைப்பேன் ) (1980).