Tags
@arivpr, @baraneee, @dtwdy, @ezharai, @hakkeemCBE, @I_VR, @kaarthikarul, @kameshratnam, @maestrosworld, @manivel, @muthiahrm, @naanillai, @nchokkan, @nom_d_plum, @prasannaR_, @RagavanG, @rajabalanm, @rishan_s, @rmdeva, @sagittarian82, @seevin, @shanthi95, @sicmafia, @StallionStorms, @tcsprasan, @usharanims, @vrsaran, @w0ven
வணக்கம்.
இந்தியாவில் இருந்த போது தமிழ் திரை இசையின் சகாப்தம் ஒன்று நிறைவு பெற்றது.
டி.எம்.எஸ் அவர்களின் மறைவு, அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது என்பது understatement தான்.
ஒவ்வொரு வீட்டிலும் அம்மா, அப்பா தொடங்கி அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்திய செய்தியாக அது இருந்தது. விகடனோ குமுதத்திலோ, கங்கை அமரனின் கட்டுரையில் அவரைப் பற்றி எழுதியிருந்தது என் மனதை வெகுவாக கவர்ந்தது. கங்கை அமரன், தன்னுடைய இசையில் வெளிவந்த “நீதிபதி” திரைப்படத்தில் “பாசமலரே அன்பில் விளைந்த வாச மலரே” என்ற பாடலை டி.எம்.எஸ்-ஐ பாட வைத்து அழகு பார்த்தது குறித்தெல்லாம் சொல்லி இருந்தார்.
டி.எம்.எஸ்-ன் மறைவிற்கு நம் அனைவரின் சார்பாகவும், மரியாதை கலந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்வோம்.
“யார் அந்த நிலவு”, “நான் பேச நினைப்பதெல்லாம்”, “வந்த நாள் முதல்”, “ஆகா மெல்ல நட”, “எங்கே நிம்மதி”, “ஆஹா மெல்ல நட மெல்ல நட”, “எந்தன் பொன்வண்ணமே” என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவரின் முருகன் பாடல்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் மிக குறைவாகவே பாடியிருந்தாலும், ஒவ்வொரு பாடலும் பெயர் சொல்லும் பாடல்கள். அப்படிப் பட்ட ஒரு பாடல் தான் இன்று.
இந்தப் பாட்டின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு வித சோகம் கலந்த contemplative moodல் இசைத்திருப்பார். ஆனால், இன்றளவும் இந்தப் பாடல் பேசப்படுவதற்கு பெருமளவு காரணம், அட்டகாசமான, ஆழமான பாடல் வரிகள், மற்றும் டி.எம்.எஸ்ன் குரல், மற்றும் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கும் இசைஞானியின் natural composition. இந்தப் படத்தில் வரும் இன்னொரு டூயட் பாடலும் பயங்கர ஹிட் அந்தக் காலத்தில்!
ஆனால், இசைஞானியின் இந்தப் பாடலைத் தழுவி வேறு ஒரு இசையமைப்பாளர் இயற்றிய இந்தப் பாட்டும் அந்தக் காலத்து ஹிட் தான் 🙂
மனம் சரியில்லாத போது, அடிக்கடி இந்தப் பாட்டை கேட்பதுண்டு. One of the best philosophical ideas to have been shaped in the form of a song.
பாடலை விடையாக தருவதோடு மட்டுமல்லாமல், டி.எம்.எஸ்-ன் மீதான உங்கள் அபிமானம் கலந்த கருத்துக்களை பகிர்ந்துகொள்ள இதை ஒரு வாய்ப்பாக எடுத்தீர்கள் என்றால், மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.
நன்றி.
Have a nice week ahead.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.This song is about conscience.
Answer: Nallavarkellam ( நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு) from Thyagam (தியாகம்) (1978)