Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

முதலில் இதைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். 58/365.

அப்படியே, இவற்றையும் பார்த்துவிட்டு வந்துவிடுங்களேன்: 55/365 – #365RajaQuiz – காத்திருந்த காதலி, பிறகு 58/365 – #365RajaQuiz – காதலி விடு தூது., அப்புறம் 59/365 – #365RajaQuiz – காதலி விடு (கொலவெறி) தூது, or my favorite 88/365 – #365RajaQuiz – இது, சிறகடித்து பறக்கும் சந்தூர் காதல்!

எத்துணை எத்துணை பெண்களின் காதலன் / தலைவன் பற்றிய ஏக்கப்பாடல்களை அள்ளி அள்ளி தெளித்து இருக்கிறோம். இன்றும் அது மாதிரி ஒரு ஏக்கப்பாட்டு. இது என்னுடைய விருப்பம் 🙂 உங்களில் பலருக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பாடல் விருப்பப் பாடலாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை. பின்னூட்டத்தில் பார்க்கத் தானே போகிறோம். 🙂

This song is a classic case-in-point for what happens, when several legends come together 🙂

  1. இசைஞானி இளையராஜா இசை. குறிப்பாக, இந்தப் பாட்டை அகில இந்திய வானொலி நிலையத்தில் அடிக்கடி காலையில் கேட்ட ஞாபகம். இந்தப் படத்திலேயே இருக்கும் மற்ற பாடல்களும் செம ஹிட் என்பதால், எல்லா பாட்டுமே அடிக்கடி வரும். அப்படி ஒரு ஆல்பம். இருந்தாலும், என்ன பாட்டுய்யா இது. இதுல ஏதோ கர்னாடக ராக சங்கதி செமையா இருக்கப்போகுது — நம்ம @PrasannaR_ மற்றும் @KaarthikArul and other friends கலக்கி அடிக்கப்போறாங்கோ 🙂 !
  2. காலத்தை விஞ்சிய, அந்தக் காலகட்டத்துக்கு மிகவும் முன்னோக்கி இருந்த இயக்குநர்!
  3. கேமராவில் ஓவியங்களைத் தீட்டும் வித்தகர்!
  4. பாடிய பாடல்கள் குறைவு என்றாலும், இவரின் குரலுக்கு இன்றளவும் ரசிகர்கள் லட்சோப லட்சம்!
  5. பல அருமையான பாடல்களை எழுதி குவித்த பாடலாசிரியர்!
  6. இறுதியாக, எனக்கு மிக, மிக பிடித்த நடிகை 🙂 ! வயதில் சிறியவராக இருந்தாலும், அப்போதே உயரிய விருதுகளை வாங்கியதை விடுங்கள், மக்கள் மத்தியில் ஏகோபத்திய பாராட்டை வாங்கியதையும் விடுங்கள், அவரின் emoting capabilityஐ பார்த்து இருக்கின்றீர்களா? பல படங்களைப் பார்க்க வேண்டாம் — இந்த ஒரு பாடல் போதும் 🙂 !

ஒரு சிறிய flashback. டவுசர் போட்ட காலத்தில், இவரைப் பற்றி நிறைய பேர் சிலாகித்து பேசியதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் பார்த்ததுண்டு. ஒரு முறை இவர் நடித்த வேறு ஒரு படத்தை டில்லி தூர்தர்ஷன் வெள்ளி இரவு ஒன்றில் ஒளிபரப்பியது. அப்போதும் அதே போல, ஆகா, இவர போல வருமான்னு பெருசுக முணுமுணுத்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பார்த்தால், சாதாரணமாக அல்லவா இருக்கிறார். இதற்கு போயா இப்படி ஒரு பில்டப்பு என்று நினைத்தது உண்டு.

கல்லூரிக்கு சென்ற பின்னர் தான், நினைவு தெரிந்து, இன்றைய பாடலை படத்தோடு பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படியே ஆடிப்போய் உட்கார்ந்துவிட்டேன். What a brilliant emoting man! அடேங்கப்பா. உடனே எனக்குள் இருக்கும் inquisitive mind பல கேள்விகளை கேட்டு தொலைத்தது! இப்படி தான் முகபாவம் இருக்கணும்னு டைரக்டர் சொல்லி கொடுத்து இவங்க இப்படி எல்லாம் நடிக்கறாங்களோ? அப்படின்னு ஒரு கேள்வி. இல்ல, இந்த கேமராமேன், இயற்கையை பின்புலமா வச்சு இவர நடக்கவும், ஓடவும் வுட்டு இப்படி நல்லா எடுத்து தள்ளி இருக்காரோ? என்றும் ஒரு யோசனை. இல்ல, எடிட்டர் சரியான சீன்களை இணைத்து, இதற்கு ஒரு அருமையான வடிவத்தை தந்திருக்கிறாரோ என்றெல்லாம் பல விதமான யோசனை.

பின்னர் தேடி தேடி ஒரு VCD வாங்குவதற்குள், இங்கு அமெரிக்கா வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் இந்தப் பாட்டையும், இந்தப் படத்தையும் பார்க்கும் போது, நான் டவுசர் போட்ட காலத்தில் பெருசுக சிலாகிச்சத போல நானும் பேண்ட் போட்டு சிலாகிக்க ஆரம்பிச்சேன். இந்த மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமாவில் கண்டிப்பாக இல்லவே இல்லை! (Just my personal opinion :))

There is the extremities of over-acting and no-acting and a larger mass that is of mediocrity in between.

ஆனா, இவங்க இருக்காங்களே..அடேங்கப்பா… Modern lookஆ இருக்கட்டும், கிராமத்துப் பொண்ணு lookஆ இருக்கட்டும், traditional lookஆ இருக்கட்டும், பின்னி எடுப்பாங்க. இத்துணைக்கும் பல கோணங்கள்ல மேக்கப்பும் இருக்காது. குதூகலம், சந்தோஷம், ஒரு வித சோகம் என்று எல்லா உணர்ச்சிகளையும் அவ்வளவு இயற்கையா சிந்துவாங்க.

ஒன்னுல கூட ஓவர்-ஆக்டிங்னு சொல்லவே முடியாத மாதிரி செஞ்சிருப்பாங்க.

இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்களேன். கல்யாணம் ஆகப்போகுதுன்னு உள்ளே ஒரு பரவசம்.அதுவும் அவளின் காதலனையே அவள் மணம் முடிக்கப்போவதாக எண்ணி பூரிக்கிறாள்.

இங்கே தான் என்னுடைய favorite director வர்றார். இவரை மட்டும் நேரில் பார்க்க முடிந்தால் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து வணக்கம் வைத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பேன். அவ்வளவு பிடிக்கும். இவர், இந்த நடிகையிடம் என்ன சொல்லி இந்தப் பாடலில் நடிக்கச் சொல்லி இருப்பார் என்றே தெரியவில்லை. இவருக்கு வாயசைப்பு அவ்வளவாக பிடிக்காது. He strives for realism in his portrayals.

ஆக கல்யாணம்+காதல் ஏக்கத்தை, வாயசைப்பு இல்லாமல் முகபாவத்திலேயே இந்த நடிகை — அந்த இளவயதில் — நடித்து காட்ட வேண்டிய சூழ்நிலை. பின்னி எடுத்திருப்பாங்க. I am sure, she gave way more than what the Director may have even imagined 🙂

குறிப்பாக, இவர் தனது கண்களாலும் உதடுகளாலும் அந்த உணர்ச்சிகளை சிந்துவதை கவனித்துப் பாருங்கள். சிறு துளி ஆபாசம் இல்லாமல், அத்துணை இயற்கையாகவும், பொங்கி வரும் அந்த உணர்ச்சிகளை அடக்க முடியாதவளாக தடுமாறுபவராகவும் நடிப்பில் PhD வாங்கும் அளவுக்கு கொட்டி இருப்பார்.

இங்கே கேமராமேன் இருக்கிறாரே…அவருக்கும் ஒரு பொக்கே கொடுத்தே ஆகவேண்டும். பிடித்தமான ஊட்டி மலையிலும் சிறு கிராமத்திலும் கேமராவை சுழற்றி அடித்து, இயற்கையை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்துவிடுவார். இந்த நடிகையை நடக்கவும், ஓடவும், பூக்களை ஊதவும் விட்டு, அழகு பார்த்து, க்ளிக்கிக் கொண்டார்.

எடிட்டர் வேறு, சரியான விஷுவல்ஸை ராஜாவின் இசைக்கு ஏற்றவாறு தைத்து இருப்பார்.

Brilliant song. ச்ச!

இங்கே இசைஞானி ஜலதரங்கம் போல ஏதோ இசைக்கருவியை உபயோகித்து இருப்பார். புல்லாங்குழலும் Bass Guitarsம் பின்னி எடுக்கும் என்றால், அது என்னடா இந்தப் பாட்டுல மிருதங்கம் அடிச்சு தூள் கிளப்புதுனு பார்க்கும் போது தான் தெரியுது, இதுல கர்னாடக சங்கீதமும் – தெம்மாங்கு பாட்டின் சங்கதிகளும் ஒன்றாக mingle ஆகி பின்னி எடுக்குது என்று.

ஆரம்பத்தில் இருந்தே, இந்தப் பாடலுக்கு இந்த நடிகை கொடுக்கும் முகபாவம் வேறு, பாட்டின் இசை சங்கதிகளுக்கு 100% பொருந்தி போகும். எப்படி தான் இப்படி conceive செய்தார்களோ. அவரின் வாயை அவர் pout செய்யும் அழகு..ஆகா.. கோடியில் ஒருத்தருக்கு தான் பொருந்தி வரும்.

She will sport a melancholic look at several scenes in this song — immediately juxtaposed with absolute frolic and exuberance. Excellent hodgepodge of human emotions. புல் தரையில் படுத்து வானத்தை பார்க்கும் விதமாக இருக்கட்டும். நின்றுக்கொண்டே சிலாகிக்கும் விதமாகட்டும், ஒரு சாதாரண புடவையில், பின்னாடி ஆடுகள் மேயுந்துக்கொண்டும், முன் பக்கத்தில் ஒரு சிறு ஆறு ஓடிக்கொண்டும் இருப்பது எல்லாம் விஷுவல் ட்ரீட்.

மழை பெய்யும் போது, அதில் நனைந்துக்கொண்டே அதை அள்ளி எடுத்து முகத்தில் தெளித்துக்கொள்ளும் போது, குழந்தையாகவும், அந்த சீன் முடிய முடிய ஒரு குக்கிராமத்து சாலையின் ஓரத்தில் சுங்குடிப் புடவையில் ஓடும்போது அந்த கிராமத்துப் பெண்ணுகே உரிய innocenceஆகட்டும், மலர்களின் நடுவே மலர்ந்த முழு நிலவு போல லயித்து நிற்கும் குமரியாக இருக்கட்டும், பூக்களை ஊதி அவற்றை ரசிக்கும் அந்தக் குழந்தைத்தனமாகட்டும், நீராடிக்கொண்டே அதில் அவனின் நினைவுகள் தன்னை சூழ ஒரு புன்சிரிப்பை உதிர்த்துக்கொண்டு ஏதோ ஒரு யோசனையாக அவளின் மயிரை அவளே கோதிவிடும் லாவகம் ஆகட்டும், ne plus ultra! ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

பாடலைப் பாருங்கள்! இந்த டைரக்டர் மற்ற சோதாக்கள் போல இல்லை. இசைஞானியின் இசைக்கு ஏற்றவாறு பாடலை படமாக்குபவர்களில் வல்லவர்கள் குறைவு. ஆனால், அதில் இவர் கண்டிப்பாக மேலே இருப்பார்.

ஒரு இடத்தில் (இரண்டாவது சரணத்தின் இறுதியில்) இந்த நடிகை, நீராடிக்கொண்டே, முடியை எல்லாம் கோதிவிட்டுக்கொண்டு ஒரு rocky movement கொடுப்பார்…Swing ஆடுவது போல — அவர் செய்யும் அந்த மூவ்மெண்டின் போது, அந்த வார்த்தை வரும் பாருங்க…priceless feel. இது மாதிரி எக்கச்சக்க விசயம் இருக்குது, இந்தப் பாட்டுல. ஏரியில் குளித்துவிட்டு தண்ணீர் சொட்ட, அவளின் காதலனை நினைத்துக்கொண்டே முடியை இழுத்துக்கொண்டு ஆஆ என்று வாயை momentaryஆகத் திறந்து புன்முறுவல் பூப்பார் பாருங்க…another priceless feel… அதே போல, ஏரியில் இருந்து வெளியே வந்து ஈரம் காய்ந்த பிறகு மேக்கப் இல்லாமல் இடது கையாலேயே முடியைக் கோதிவிட்டுக்கொண்டு ஒரு மாடர்ன் லுக்கை வீசுவார் பாருங்க..ஆகா.. மங்கலகரமான அழகு!எதார்த்தம் கலந்த அழகு.

இவரின் melancholic முக அமைப்புக்கு இசைஞானியின் இசை 100% பொருத்தம். ஆகா..கூர்ந்து கவனியுங்கள், சரணத்தில் ஒரு விதமான violins வந்துக்கொண்டே இருக்கும். அப்படியே நம் இதையத்தையே சுண்டி இழுக்கும் ஒரு effect இருக்கும். ஆரம்பத்திலும் சரி, பாடல் முழுவதும், தபேலாவும் மிருதங்கமும், இவளுக்குள் நடக்கும் அந்த உணர்ச்சிப் பெருக்கை அட்டகாசமாக காட்டிவிடும். அதே போல, இந்தப் பாடல் முடிவடையும் விதமும் unconventionalஆக இருக்கும். தபேலாவும், மிருதங்கமும் போட்டி போட்டுக்கொண்டு, அந்த ஜலதரங்கம் போன்ற இசைக்கருவியோடு சேர்ந்து பயணித்து முடிவடையும்.

இந்த நடிகைக்கும் சரி, இந்தப் பாட்டுக்கும் சரி, 100% பொருந்தி வரும் பாடகி தான் பாடி இருக்கார். இவரும் இந்த நடிகை மாதிரி தான். குறைந்த அளவே பாடினாலும், நிறைவாக மக்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்து கொண்ட பாடகி. ஒவ்வொரு பாடலும் மணி! அதுவும் இந்தப் பாடலில், இசைஞானியின் உணர்வுகளை, அந்த நடிகையின் வாயசைப்பே இல்லாத emotionsஐ இவரின் குரலில் அட்டகாசமாக கொண்டுவந்துவிடுவார். ஏக்கம்…ஏக்கம்…ஏக்கமோ ஏக்கம்….ஒவ்வொரு legendம் பின்னி இருப்பாங்க…இசைஞானியின் இசை தொடங்கி, இவரின் குரலில் இருந்து, பாடலாசிரியரின் வரிகளில் இருந்து, கேமராமேனின் படமாக்கலில் இருந்து, நடிகையின் அட்டகாசமான நடிப்பு வரை.

இந்தப் பாட்டின் தாக்கம் பல வருடங்களுக்கு பின் வந்தவர்களுக்கு கூட பெண் சோலோ, ஏரிக்கரையில் குளியல், சுற்றி இயற்கை என்று சின்ன சின்ன ஆசையாக வந்தது. அவார்டும் குவித்தார்கள்.

இன்றைய பாடல் அந்தக் காலத்து சின்ன சின்ன ஆசை. என்னுடைய சின்ன சின்ன ஆசையும் கூட. ஆனால், இந்தப் பாட்டை இன்றளவும் கேட்டும், பார்க்கும் கூட்டம் அதிகமோ அதிகம்.

இந்தப் பாட்டை இன்றைக்கு களம் இறக்குவதற்கு காரணம் ரொம்ப சிம்பிள்: ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தின் பாட்டைக் கேட்டாலோ பார்த்தாலோ, முழுப்படத்தையும் பார்க்க ஆவல் வந்துவிடும். நேரமின்மையால் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். இன்று அரங்கேற்றம் செய்ய வேண்டியதாகிவிட்டது 🙂 ஆனால் இதை என்கோட் செய்ததில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

I took some special pains to encode this track, as it is personal and special for me 🙂 I bet, you will like it, as not many good versions of audio are available for this song on the Net 🙂

அதே போல, இவரின் முகபாவங்களை ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு ஆங்காங்கே snag செய்து Vimeoவில் ஏற்றிவிட்டேன். 🙂 அவருடைய பல பாவங்களில், அவரின் கண்ணும் உதட்டு அசைப்பே இல்லாத வாயும், பல மொழிகளைப் பேசும். இவரின் வேகத்துக்கு நம்மால் இடம் கொடுக்க முடியாது. என்றாலும், என்னால் முடிந்த அளவுக்கு snag செய்திருக்கிறேன். Mobile Devicesல் நன்றாகவே இருக்கும். PCல், சற்று ஓகேவாகத் தான் இருக்கும். ஒளியுடன், ஒலியையும் ரசியுங்கள். இரைச்சலை நன்றாக பிரித்து எடுத்துவிட்டேன்.

விடையை சுட்டுவிட்டு முழுக்க பார்த்து enjoy செய்யுங்கள். 🙂 கிண்டல் அடிக்க வேண்டாம். நான் சொன்னது போல, தமிழ் திரையுலகில் உண்மையில் இழப்பு என்றால், இவர் இல்லாதது தான். இவருக்கு பின் யாரும் இல்லை. அதனாலேயே தான் இவரை சிலாகிக்காதவர்கள் வெகு குறைவு.

இவரின் நடிப்பு உங்களுக்கும் பிடிக்குமா? 🙂

How is the audio-quality for this song, given other versions you may have heard? பல முறை noise-reduction and noise-gate செய்து இதை சரியாக கொண்டு வரவேண்டி இருந்தது. அதனால் தான் மிருதங்கம் + தபேலா ஆகியவற்றை நன்கு கொண்டு வர முடிந்தது.

குறைந்தது, இன்று மட்டும் 50 தடவை இந்தப் பாட்டை கேட்டு…சாரி.. பார்த்து இருப்பேன். இதனாலேயே தான், இதை இதற்கு முன்பே பதிவு செய்யவில்லை.

Have a nice weekend.

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Audio is recorded by extensively subjecting to repeated noise-removal and noise-gate passes. Due to poor audio in the LP records, cassettes, and CDs, I went with my VCD source, which relatively had manageable noise. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was a visual portrayal of an award-winning novel.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Adi Penne (அடிப் பெண்ணே) from Mullum Malarum (முள்ளும் மலரும்) (1978)