Tags
@anandhame, @appandai, @arivpr, @baraneee, @dtwdy, @ezharai, @hakkeemCBE, @I_VR, @kaarthikarul, @maestrosworld, @manivel, @mavurundai, @muthiahrm, @naanillai, @nchokkan, @nom_d_plum, @npodiyan, @nradhakn, @prasannaR_, @QatarSeenu, @ragavanpandian, @rajabalanm, @rmdeva, @r_inba, @R_Rahini, @sagittarian82, @seevin, @sicmafia, @StallionStorms, @tcsprasan, @usharanims, @ushaTV, @vrsaran, @whoisjagan
வணக்கம்.
முதலில் இதைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். 58/365.
அப்படியே, இவற்றையும் பார்த்துவிட்டு வந்துவிடுங்களேன்: 55/365 – #365RajaQuiz – காத்திருந்த காதலி, பிறகு 58/365 – #365RajaQuiz – காதலி விடு தூது., அப்புறம் 59/365 – #365RajaQuiz – காதலி விடு (கொலவெறி) தூது, or my favorite 88/365 – #365RajaQuiz – இது, சிறகடித்து பறக்கும் சந்தூர் காதல்!
எத்துணை எத்துணை பெண்களின் காதலன் / தலைவன் பற்றிய ஏக்கப்பாடல்களை அள்ளி அள்ளி தெளித்து இருக்கிறோம். இன்றும் அது மாதிரி ஒரு ஏக்கப்பாட்டு. இது என்னுடைய விருப்பம் 🙂 உங்களில் பலருக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பாடல் விருப்பப் பாடலாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை. பின்னூட்டத்தில் பார்க்கத் தானே போகிறோம். 🙂
This song is a classic case-in-point for what happens, when several legends come together 🙂
- இசைஞானி இளையராஜா இசை. குறிப்பாக, இந்தப் பாட்டை அகில இந்திய வானொலி நிலையத்தில் அடிக்கடி காலையில் கேட்ட ஞாபகம். இந்தப் படத்திலேயே இருக்கும் மற்ற பாடல்களும் செம ஹிட் என்பதால், எல்லா பாட்டுமே அடிக்கடி வரும். அப்படி ஒரு ஆல்பம். இருந்தாலும், என்ன பாட்டுய்யா இது. இதுல ஏதோ கர்னாடக ராக சங்கதி செமையா இருக்கப்போகுது — நம்ம @PrasannaR_ மற்றும் @KaarthikArul and other friends கலக்கி அடிக்கப்போறாங்கோ 🙂 !
- காலத்தை விஞ்சிய, அந்தக் காலகட்டத்துக்கு மிகவும் முன்னோக்கி இருந்த இயக்குநர்!
- கேமராவில் ஓவியங்களைத் தீட்டும் வித்தகர்!
- பாடிய பாடல்கள் குறைவு என்றாலும், இவரின் குரலுக்கு இன்றளவும் ரசிகர்கள் லட்சோப லட்சம்!
- பல அருமையான பாடல்களை எழுதி குவித்த பாடலாசிரியர்!
- இறுதியாக, எனக்கு மிக, மிக பிடித்த நடிகை 🙂 ! வயதில் சிறியவராக இருந்தாலும், அப்போதே உயரிய விருதுகளை வாங்கியதை விடுங்கள், மக்கள் மத்தியில் ஏகோபத்திய பாராட்டை வாங்கியதையும் விடுங்கள், அவரின் emoting capabilityஐ பார்த்து இருக்கின்றீர்களா? பல படங்களைப் பார்க்க வேண்டாம் — இந்த ஒரு பாடல் போதும் 🙂 !
ஒரு சிறிய flashback. டவுசர் போட்ட காலத்தில், இவரைப் பற்றி நிறைய பேர் சிலாகித்து பேசியதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் பார்த்ததுண்டு. ஒரு முறை இவர் நடித்த வேறு ஒரு படத்தை டில்லி தூர்தர்ஷன் வெள்ளி இரவு ஒன்றில் ஒளிபரப்பியது. அப்போதும் அதே போல, ஆகா, இவர போல வருமான்னு பெருசுக முணுமுணுத்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பார்த்தால், சாதாரணமாக அல்லவா இருக்கிறார். இதற்கு போயா இப்படி ஒரு பில்டப்பு என்று நினைத்தது உண்டு.
கல்லூரிக்கு சென்ற பின்னர் தான், நினைவு தெரிந்து, இன்றைய பாடலை படத்தோடு பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படியே ஆடிப்போய் உட்கார்ந்துவிட்டேன். What a brilliant emoting man! அடேங்கப்பா. உடனே எனக்குள் இருக்கும் inquisitive mind பல கேள்விகளை கேட்டு தொலைத்தது! இப்படி தான் முகபாவம் இருக்கணும்னு டைரக்டர் சொல்லி கொடுத்து இவங்க இப்படி எல்லாம் நடிக்கறாங்களோ? அப்படின்னு ஒரு கேள்வி. இல்ல, இந்த கேமராமேன், இயற்கையை பின்புலமா வச்சு இவர நடக்கவும், ஓடவும் வுட்டு இப்படி நல்லா எடுத்து தள்ளி இருக்காரோ? என்றும் ஒரு யோசனை. இல்ல, எடிட்டர் சரியான சீன்களை இணைத்து, இதற்கு ஒரு அருமையான வடிவத்தை தந்திருக்கிறாரோ என்றெல்லாம் பல விதமான யோசனை.
பின்னர் தேடி தேடி ஒரு VCD வாங்குவதற்குள், இங்கு அமெரிக்கா வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் இந்தப் பாட்டையும், இந்தப் படத்தையும் பார்க்கும் போது, நான் டவுசர் போட்ட காலத்தில் பெருசுக சிலாகிச்சத போல நானும் பேண்ட் போட்டு சிலாகிக்க ஆரம்பிச்சேன். இந்த மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமாவில் கண்டிப்பாக இல்லவே இல்லை! (Just my personal opinion :))
There is the extremities of over-acting and no-acting and a larger mass that is of mediocrity in between.
ஆனா, இவங்க இருக்காங்களே..அடேங்கப்பா… Modern lookஆ இருக்கட்டும், கிராமத்துப் பொண்ணு lookஆ இருக்கட்டும், traditional lookஆ இருக்கட்டும், பின்னி எடுப்பாங்க. இத்துணைக்கும் பல கோணங்கள்ல மேக்கப்பும் இருக்காது. குதூகலம், சந்தோஷம், ஒரு வித சோகம் என்று எல்லா உணர்ச்சிகளையும் அவ்வளவு இயற்கையா சிந்துவாங்க.
ஒன்னுல கூட ஓவர்-ஆக்டிங்னு சொல்லவே முடியாத மாதிரி செஞ்சிருப்பாங்க.
இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்களேன். கல்யாணம் ஆகப்போகுதுன்னு உள்ளே ஒரு பரவசம்.அதுவும் அவளின் காதலனையே அவள் மணம் முடிக்கப்போவதாக எண்ணி பூரிக்கிறாள்.
இங்கே தான் என்னுடைய favorite director வர்றார். இவரை மட்டும் நேரில் பார்க்க முடிந்தால் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து வணக்கம் வைத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பேன். அவ்வளவு பிடிக்கும். இவர், இந்த நடிகையிடம் என்ன சொல்லி இந்தப் பாடலில் நடிக்கச் சொல்லி இருப்பார் என்றே தெரியவில்லை. இவருக்கு வாயசைப்பு அவ்வளவாக பிடிக்காது. He strives for realism in his portrayals.
ஆக கல்யாணம்+காதல் ஏக்கத்தை, வாயசைப்பு இல்லாமல் முகபாவத்திலேயே இந்த நடிகை — அந்த இளவயதில் — நடித்து காட்ட வேண்டிய சூழ்நிலை. பின்னி எடுத்திருப்பாங்க. I am sure, she gave way more than what the Director may have even imagined 🙂
குறிப்பாக, இவர் தனது கண்களாலும் உதடுகளாலும் அந்த உணர்ச்சிகளை சிந்துவதை கவனித்துப் பாருங்கள். சிறு துளி ஆபாசம் இல்லாமல், அத்துணை இயற்கையாகவும், பொங்கி வரும் அந்த உணர்ச்சிகளை அடக்க முடியாதவளாக தடுமாறுபவராகவும் நடிப்பில் PhD வாங்கும் அளவுக்கு கொட்டி இருப்பார்.
இங்கே கேமராமேன் இருக்கிறாரே…அவருக்கும் ஒரு பொக்கே கொடுத்தே ஆகவேண்டும். பிடித்தமான ஊட்டி மலையிலும் சிறு கிராமத்திலும் கேமராவை சுழற்றி அடித்து, இயற்கையை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்துவிடுவார். இந்த நடிகையை நடக்கவும், ஓடவும், பூக்களை ஊதவும் விட்டு, அழகு பார்த்து, க்ளிக்கிக் கொண்டார்.
எடிட்டர் வேறு, சரியான விஷுவல்ஸை ராஜாவின் இசைக்கு ஏற்றவாறு தைத்து இருப்பார்.
Brilliant song. ச்ச!
இங்கே இசைஞானி ஜலதரங்கம் போல ஏதோ இசைக்கருவியை உபயோகித்து இருப்பார். புல்லாங்குழலும் Bass Guitarsம் பின்னி எடுக்கும் என்றால், அது என்னடா இந்தப் பாட்டுல மிருதங்கம் அடிச்சு தூள் கிளப்புதுனு பார்க்கும் போது தான் தெரியுது, இதுல கர்னாடக சங்கீதமும் – தெம்மாங்கு பாட்டின் சங்கதிகளும் ஒன்றாக mingle ஆகி பின்னி எடுக்குது என்று.
ஆரம்பத்தில் இருந்தே, இந்தப் பாடலுக்கு இந்த நடிகை கொடுக்கும் முகபாவம் வேறு, பாட்டின் இசை சங்கதிகளுக்கு 100% பொருந்தி போகும். எப்படி தான் இப்படி conceive செய்தார்களோ. அவரின் வாயை அவர் pout செய்யும் அழகு..ஆகா.. கோடியில் ஒருத்தருக்கு தான் பொருந்தி வரும்.
She will sport a melancholic look at several scenes in this song — immediately juxtaposed with absolute frolic and exuberance. Excellent hodgepodge of human emotions. புல் தரையில் படுத்து வானத்தை பார்க்கும் விதமாக இருக்கட்டும். நின்றுக்கொண்டே சிலாகிக்கும் விதமாகட்டும், ஒரு சாதாரண புடவையில், பின்னாடி ஆடுகள் மேயுந்துக்கொண்டும், முன் பக்கத்தில் ஒரு சிறு ஆறு ஓடிக்கொண்டும் இருப்பது எல்லாம் விஷுவல் ட்ரீட்.
மழை பெய்யும் போது, அதில் நனைந்துக்கொண்டே அதை அள்ளி எடுத்து முகத்தில் தெளித்துக்கொள்ளும் போது, குழந்தையாகவும், அந்த சீன் முடிய முடிய ஒரு குக்கிராமத்து சாலையின் ஓரத்தில் சுங்குடிப் புடவையில் ஓடும்போது அந்த கிராமத்துப் பெண்ணுகே உரிய innocenceஆகட்டும், மலர்களின் நடுவே மலர்ந்த முழு நிலவு போல லயித்து நிற்கும் குமரியாக இருக்கட்டும், பூக்களை ஊதி அவற்றை ரசிக்கும் அந்தக் குழந்தைத்தனமாகட்டும், நீராடிக்கொண்டே அதில் அவனின் நினைவுகள் தன்னை சூழ ஒரு புன்சிரிப்பை உதிர்த்துக்கொண்டு ஏதோ ஒரு யோசனையாக அவளின் மயிரை அவளே கோதிவிடும் லாவகம் ஆகட்டும், ne plus ultra! ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
பாடலைப் பாருங்கள்! இந்த டைரக்டர் மற்ற சோதாக்கள் போல இல்லை. இசைஞானியின் இசைக்கு ஏற்றவாறு பாடலை படமாக்குபவர்களில் வல்லவர்கள் குறைவு. ஆனால், அதில் இவர் கண்டிப்பாக மேலே இருப்பார்.
ஒரு இடத்தில் (இரண்டாவது சரணத்தின் இறுதியில்) இந்த நடிகை, நீராடிக்கொண்டே, முடியை எல்லாம் கோதிவிட்டுக்கொண்டு ஒரு rocky movement கொடுப்பார்…Swing ஆடுவது போல — அவர் செய்யும் அந்த மூவ்மெண்டின் போது, அந்த வார்த்தை வரும் பாருங்க…priceless feel. இது மாதிரி எக்கச்சக்க விசயம் இருக்குது, இந்தப் பாட்டுல. ஏரியில் குளித்துவிட்டு தண்ணீர் சொட்ட, அவளின் காதலனை நினைத்துக்கொண்டே முடியை இழுத்துக்கொண்டு ஆஆ என்று வாயை momentaryஆகத் திறந்து புன்முறுவல் பூப்பார் பாருங்க…another priceless feel… அதே போல, ஏரியில் இருந்து வெளியே வந்து ஈரம் காய்ந்த பிறகு மேக்கப் இல்லாமல் இடது கையாலேயே முடியைக் கோதிவிட்டுக்கொண்டு ஒரு மாடர்ன் லுக்கை வீசுவார் பாருங்க..ஆகா.. மங்கலகரமான அழகு!எதார்த்தம் கலந்த அழகு.
இவரின் melancholic முக அமைப்புக்கு இசைஞானியின் இசை 100% பொருத்தம். ஆகா..கூர்ந்து கவனியுங்கள், சரணத்தில் ஒரு விதமான violins வந்துக்கொண்டே இருக்கும். அப்படியே நம் இதையத்தையே சுண்டி இழுக்கும் ஒரு effect இருக்கும். ஆரம்பத்திலும் சரி, பாடல் முழுவதும், தபேலாவும் மிருதங்கமும், இவளுக்குள் நடக்கும் அந்த உணர்ச்சிப் பெருக்கை அட்டகாசமாக காட்டிவிடும். அதே போல, இந்தப் பாடல் முடிவடையும் விதமும் unconventionalஆக இருக்கும். தபேலாவும், மிருதங்கமும் போட்டி போட்டுக்கொண்டு, அந்த ஜலதரங்கம் போன்ற இசைக்கருவியோடு சேர்ந்து பயணித்து முடிவடையும்.
இந்த நடிகைக்கும் சரி, இந்தப் பாட்டுக்கும் சரி, 100% பொருந்தி வரும் பாடகி தான் பாடி இருக்கார். இவரும் இந்த நடிகை மாதிரி தான். குறைந்த அளவே பாடினாலும், நிறைவாக மக்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்து கொண்ட பாடகி. ஒவ்வொரு பாடலும் மணி! அதுவும் இந்தப் பாடலில், இசைஞானியின் உணர்வுகளை, அந்த நடிகையின் வாயசைப்பே இல்லாத emotionsஐ இவரின் குரலில் அட்டகாசமாக கொண்டுவந்துவிடுவார். ஏக்கம்…ஏக்கம்…ஏக்கமோ ஏக்கம்….ஒவ்வொரு legendம் பின்னி இருப்பாங்க…இசைஞானியின் இசை தொடங்கி, இவரின் குரலில் இருந்து, பாடலாசிரியரின் வரிகளில் இருந்து, கேமராமேனின் படமாக்கலில் இருந்து, நடிகையின் அட்டகாசமான நடிப்பு வரை.
இந்தப் பாட்டின் தாக்கம் பல வருடங்களுக்கு பின் வந்தவர்களுக்கு கூட பெண் சோலோ, ஏரிக்கரையில் குளியல், சுற்றி இயற்கை என்று சின்ன சின்ன ஆசையாக வந்தது. அவார்டும் குவித்தார்கள்.
இன்றைய பாடல் அந்தக் காலத்து சின்ன சின்ன ஆசை. என்னுடைய சின்ன சின்ன ஆசையும் கூட. ஆனால், இந்தப் பாட்டை இன்றளவும் கேட்டும், பார்க்கும் கூட்டம் அதிகமோ அதிகம்.
இந்தப் பாட்டை இன்றைக்கு களம் இறக்குவதற்கு காரணம் ரொம்ப சிம்பிள்: ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தின் பாட்டைக் கேட்டாலோ பார்த்தாலோ, முழுப்படத்தையும் பார்க்க ஆவல் வந்துவிடும். நேரமின்மையால் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். இன்று அரங்கேற்றம் செய்ய வேண்டியதாகிவிட்டது 🙂 ஆனால் இதை என்கோட் செய்ததில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
I took some special pains to encode this track, as it is personal and special for me 🙂 I bet, you will like it, as not many good versions of audio are available for this song on the Net 🙂
அதே போல, இவரின் முகபாவங்களை ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு ஆங்காங்கே snag செய்து Vimeoவில் ஏற்றிவிட்டேன். 🙂 அவருடைய பல பாவங்களில், அவரின் கண்ணும் உதட்டு அசைப்பே இல்லாத வாயும், பல மொழிகளைப் பேசும். இவரின் வேகத்துக்கு நம்மால் இடம் கொடுக்க முடியாது. என்றாலும், என்னால் முடிந்த அளவுக்கு snag செய்திருக்கிறேன். Mobile Devicesல் நன்றாகவே இருக்கும். PCல், சற்று ஓகேவாகத் தான் இருக்கும். ஒளியுடன், ஒலியையும் ரசியுங்கள். இரைச்சலை நன்றாக பிரித்து எடுத்துவிட்டேன்.
விடையை சுட்டுவிட்டு முழுக்க பார்த்து enjoy செய்யுங்கள். 🙂 கிண்டல் அடிக்க வேண்டாம். நான் சொன்னது போல, தமிழ் திரையுலகில் உண்மையில் இழப்பு என்றால், இவர் இல்லாதது தான். இவருக்கு பின் யாரும் இல்லை. அதனாலேயே தான் இவரை சிலாகிக்காதவர்கள் வெகு குறைவு.
இவரின் நடிப்பு உங்களுக்கும் பிடிக்குமா? 🙂
How is the audio-quality for this song, given other versions you may have heard? பல முறை noise-reduction and noise-gate செய்து இதை சரியாக கொண்டு வரவேண்டி இருந்தது. அதனால் தான் மிருதங்கம் + தபேலா ஆகியவற்றை நன்கு கொண்டு வர முடிந்தது.
குறைந்தது, இன்று மட்டும் 50 தடவை இந்தப் பாட்டை கேட்டு…சாரி.. பார்த்து இருப்பேன். இதனாலேயே தான், இதை இதற்கு முன்பே பதிவு செய்யவில்லை.
Have a nice weekend.
நன்றி.
Have a nice week ahead.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Audio is recorded by extensively subjecting to repeated noise-removal and noise-gate passes. Due to poor audio in the LP records, cassettes, and CDs, I went with my VCD source, which relatively had manageable noise. No tempo was altered.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.This movie was a visual portrayal of an award-winning novel.
Answer: Adi Penne (அடிப் பெண்ணே) from Mullum Malarum (முள்ளும் மலரும்) (1978)
Anonymous said:
@seevin MULLUM MALARUM -ADI PENNE
Arun rajendran said:
பாடல்: அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
படம் : முள்ளும் மலரும்..
🙂
Arun Rajendran said:
மன்னிக்கனும் மாஸ்டர்..இந்தப் பாட்ட பத்தி நீங்களே எல்லாத்தையும் இரசிச்சு உருசிச்சு எழுதீட்டீங்க…அதனால தான் நான் எதுவும் எழுதாம விட்டுட்டேன்…
வரலாற்று சுவடுகள்ல (தினத்தந்தி) நம்ம கடவுள், இந்தப் படத்தப் பத்தி எழுதியிருந்தார்..இந்தப் படம் வெளியான சமயம் முதல் பத்தோ இருபதோ நாட்கள்ல எதிர்ப்பார்த்த ஓட்டம் இல்லையாம்..ஒரே ஒரு திரையரங்குல மட்டும் housefull-ஆ ஓடுச்சாம்.. நம்ம கடவுளும் இயக்குநரும் என்ன காரணமா இருக்கும்-னு அந்தத் திரையரங்கத்துல ஒரு காட்சிக்கு வந்தாங்களாம்.. படம் ஆரம்பிச்சப்போ இவங்க இரண்டு பேரும் கொழம்பிட்டாங்களாம்..ஏன்னா operator படத்தோட முதல் பகுதிய இரண்டாவதாவும் இரண்டாம் பகுதிய முதலாவதாவும் மாத்தி ஓட்டுனாராம்..அந்த operator இயக்குநரும் தாயாரிப்பாளருமான திரு. இராமநாரயணன் அவர்கள்.. அதன் பிறகு அனைத்துத் திரையரங்குலயும் இதே மாதிரி மாத்தி வச்சு ஓட்ட படம் ஹிட்டோ ஹிட்…
நம்ம மக்கள் யாரவது இந்தப் பகுதிய படிச்சிருந்தா தயவு செய்து உறுதி செய்ய வேண்டுகிறேன்… 🙂
tcsprasan said:
மாஸ்டர் இந்தப்பாட்டுக்கு நான் பதில் சொல்லலைன்னா நான் ஜென்ஸி ரசிகன்னு சொல்லிக்கொண்டு இருப்பதில் அர்த்தமேயில்லை. உங்க விவரிப்பை படிச்சதுமே இந்தபாட்டாத்தான் இருக்கணும்னு நெனச்சேன். இசை தொடங்கியவுடனே தெரிஞ்சுபோச்சு
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை. ஜென்ஸி பாடிய அருமையான பாட்டு. நான் இவங்க ரசிகனானதுக்கு இந்த பாட்டும் ஒரு முக்கிய காரணம். வேறயாரும் இந்த பாடியிருந்தா எப்படியிருக்கும்னு என்னால் யோசிச்சுக்கூட பாக்கமுடியலை. இந்த குரலை கேக்கும் போதெல்லாம் உள்ளே என்னவொ செய்யும். யார் என்ன வேணா சொல்லட்டும் ஜென்ஸி ஜென்ஸிதான்.
இந்தபாட்டைக் கொடுத்து உணர்ச்சிவசப்பட வெச்சுட்டீங்களே!!! நன்றி மாஸ்டர்
tcsprasan
ரிஷி(@i_vr) said:
ஆஹா…படுப்பதற்கு முன்னால் கொஞ்சம் இங்கே எட்டி பார்ப்போமே என்று நினைத்தால் இன்ப அதிர்ச்சி… 🙂 என்னுடைய all time favorite பாடல்களில் ஒன்று…குறிப்பாக நடிகைக்காக பிடிக்கும் பாடல்….மாஸ்டர், என் தூக்கத்தை கெடுத்து விட்டீர்கள் :-)….பாடலை பார்த்து கொண்டேயிருக்க தோன்றுவது குழந்தைத்தனம் மிகுந்த இவர் தோன்றுவதால் மட்டுமே….வடையை சீக்கிரம் சுட்டு விட்டு…பாடலை CLல் கண்டு ரசித்து காலையில் விரிவாக எழுதுகிறேன் 🙂
ரிஷி(@i_vr) said:
”அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை…” ஜென்சியின் வசீகரிக்கும் குரலில் “முள்ளும் மலரும்” படப்பாடல். பசுமரத்தணி போல் நெஞ்சில் பதிந்த பாடலய்யா இது…இப்பாடலின் சிறு துணுக்கை கேட்டால் கூட தூக்கத்தில் எழுந்து சொல்லலாம்… 🙂
[μsic]மாபியா (@sicmafia) said:
+1 this song still gives me goosebumps, Thanks a lot M@ster
Sholavandan (@Naanillai) said:
+1000.. Indru urakkam nandraga varum.
[μsic]மாபியா (@sicmafia) said:
Adi Penne………
vrsaran said:
பாடல் ” அடி பெண்ணே, பொன்னூஞ்சல் ஆடும் இளமை, வண்ணங்கள் தோன்றும் இயற்கை “. படம் முள்ளும் மலரும் (1978). ஜென்ஸி பாடிய அருமையான சோலோ !
Sholavandan (@Naanillai) said:
Adi Penne from Mullum Malarum.
As you have well said this is a master piece in every aspect from concept to execution.
Raja will lift the whole song even the concept is lost in the execution. But this one as you have put it is to the T.
Srinivasan said:
பாடல் : அடி பெண்ணே
படம் : முள்ளும் மலரும்
அருமையான பாடல், என்ன ஒரு குதூகலமான இசை….இந்த இயக்குனர் எல்லா மேடையிலும், பேட்டியிலும் தவறாமல் ராஜாவை பற்றி சிலாகிப்பார். என்ன ஒரு டீம் இது….மகேந்திரன், ராஜா, பாலு மகேந்திரா, அன்றைய நல்ல நடிப்பு ரஜினி, ஷோபா, நல்ல கதை…வாவ்…
எனக்கும் மிகவும் பிடித்த நடிகை ஷோபா அவர்கள். அவர் நடித்த எல்லா படங்களுமே தேடி தேடி பார்த்திருக்கிறேன், இவரை மாதிரி ஒரு நடிகை, தோன்றவே இல்லை. அவருடைய மறைவும் ஈடு செய்ய முடியாத இழப்புதான். என்ன செய்வது….Life is Cruel sometimes .
Plum said:
When you said “my favourite actress”, everyone was guessing Sivaranjani or Roobini. But, andha tweet pArthavuNE indha nadigai dhAnnu kaNdu pidichuttEnE 🙂
nAn unga manasAtchi mAdhiri. unga words-la irukkaRa ovvoru uLLarthamum upside-downA solluvEn
idhukkappuRam enna LL clue, enna text clue. Adi pEnne from Mullum Malarum.
Baranee (@Baraneee) said:
Adi Penne – Mullum Malarum
ஏழர said:
அடி பெண்ணே……முள்ளும் மலரும்
எப்பேர்பட்ட பாட்டுண்ணே இது. மிக்க நன்றி
Muthiah (@muthiahrm) said:
பாடல் – அடிப் பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே
பாடியவர் – ஜென்சி
படம் – முள்ளும் மலரும்
இந்த படமும் இதன் பாடல்களும், இதில் நடித்த அனைவரும் குறிப்பாக ஷோபா மறக்க முடியாத படம். இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என நினைவில்லை. நீங்க சொன்ன அனைத்தும் மிகச் சரி
இதில் ரஜினி காந்த் சொல்லும் வசனம் எனக்கு மிகவும் பிடித்தது. ”ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லன்னாலும் பொழச்சுக்குவான் சார் இந்த காளி”
செந்தாழ்ம் பூவில்
நித்தம் நித்தம் நெல்லு சோறு…
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்….
அந்த கடைசி க்ளைமாக்ஸ் மறக்க முடியாத ஒன்று ஷோபா, ரஜினி கையை விலக்கிவிட்டு சென்று திரும்பி வந்து ரஜினியை கட்டி பிடித்து அழும் வரை வரும் இசை,
எனக்கு உங்களை மாதிரி சொல்ல தெரியவில்லை. ஒரு வரியில் சொல்லனும் என்றால் அழுதுடுவேன். எத்தனை முறை பார்த்தாலும்./கேட்டாலும்
அது தானே படத்தின் தீம் ம்யூசிக்? அது மனதை என்னமோ செய்யும்.
இதே போல் இன்னொரு படத்திலும் ராஜா பிண்ணனி இசையில் என்னை கொல்வார், அது இந்த புதிரில் இன்னும்…….
இந்த 365RajaQuiz பல நாட்கள் இப்படி என்னை ஆட்கொள்கிறது.
Arun Rajendran said:
” ஒரு வரியில் சொல்லனும் என்றால் அழுதுடுவேன். எத்தனை முறை பார்த்தாலும்./கேட்டாலும்
அது தானே படத்தின் தீம் ம்யூசிக்? அது மனதை என்னமோ செய்யும். ”
— அப்படியே வழிமொழிகிறேன்
Anonymous said:
” இந்த மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமாவில் கண்டிப்பாக இல்லவே இல்லை! ” – very true
முள்ளும் மலரும் (1978) – அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்
@manivel
இராதாகிருஷ்ணன் said:
அடிப்பெண்ணே பொன்னூஞ்சலாடுது இளமை…. தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்! இப்படியான இசை எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை.
Prasanna Venkatesan (@prasannaR_) said:
பாடல்: அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
படம்: முள்ளும் மலரும்
Goosebumps!
என்னவொரு பாடல்! என்னவொரு படம்!
நேற்றுதான் நமது IRMR http://myradiostream.com/irmafia வானொலியில் ‘ஜானி’ படத்தின் பின்னணி இசைத் தொகுப்பு ஒலிபரப்பப்பட்டது.
அதற்காக ஒரு பதிவையும் எழுதியிருந்தேன்.
அதை எழுதும்போதே மகேந்திரன்-இளையராஜா கூட்டணியின் உன்னதத்தைத்தான் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்.
அதில் ஒரு வரி எழுதியிருந்தேன், ”பாடல்களிலும் பின்னணி இசையிலும் எல்லாப் படங்களுக்கும் ராஜா எந்தப் பாரபட்சமுமின்றி ஒரே நியாயத்தைதான் செய்கிறார். ஆனால் அந்த இசைக்கு ஓரளவேனும் நியாயம் செய்ய முயன்ற படங்கள் வெகு குறைவே.”
அதில் மகேந்திரன் நிச்சயம் இசைஞானியின் இசைக்கு அதற்கு உரிய மரியாதையைக் காட்சிகள் மூலம் அளிக்கக் குறைந்தபட்சம் முயற்சியாவது செய்தவர்.
’முள்ளும் மலரும்’ கூட அப்படித்தான். அதன் ஒவ்வொரு காட்சியும் இசையும் ஒன்றை ஒன்று பிரிக்க இயலாதவாறு பின்னிப் பிணைந்து எப்போது பார்த்தாலும் அதே poignancyயை வழங்கும் படம்.
நீங்கள் சொன்னது சரிதான், இந்தப் பாடல் மிகவும் ஸ்பெஷல். என்றென்றைக்கும் நமது இதயத்திற்கு நெருக்கமான பாடல்களில் ஒன்று. மத்யமாவதி ராகத்தில் அமைத்திருப்பார். ஏற்கனவே நமது புதிரில் வந்த இதே போன்று ஒரு பெண்ணின் திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு உணர்வுகளைச் சொல்லும் ‘என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்’ (அழகே உன்னை ஆராதிக்கிறேன்) பாடல் கூட இந்த ராகத்தில் அமைந்ததுதான். ஜென்சியின் குரலும், அந்த unique தாளக்கட்டும், இசைக் கோர்ப்பும் சேர்ந்து வழங்கும் உணர்வு அலாதியானது.
ஷோபாவைப் பற்றியும் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த நடிகை. அவர் மூலமாகத்தான் பின்னர் எனக்கும் மிகவும் பிடிக்க ஆரம்பித்தது. என்ன ஒரு இழப்பு 😦
இந்தப் படத்தில் நடித்த மற்றொரு திறமையான நடிகையான ‘படாபட்’ ஜெயலட்சுமியும் கூட சோகமான முடிவைத் தேடிக் கொண்டது துயரம் 😦
ஷோபா பற்றி பாலுமகேந்திரா இங்கே எழுதியிருக்கிறார்.
http://filmmakerbalumahendra.blogspot.in/2012/12/blog-post.html
@npodiyan said:
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
Vijay said:
adi peNNE ponnoonjal aadum iLamai – muLLum malarum by Jency
Rex,
Is this the pinnacle of #365RajaQuiz? Amaaaaaazzzzzzzzzzzzinggggggggg! I have never read such a write-up for an actress in the whole of internet. I have never read such a glorious tribute to an actress anywhere like this. This should be your best write-up ever and greatest narration ever on the song. Please take all adjectives and honors for this superb-piece of work. Truly delighted to read this article. Hat’s off!
Again another fanstastic tribute to Dir. Mahendran. The way you wrote made my eyes wet. He could have directed more films. A big fan of his films.
Who would not like her acting? She is the icon of our industry. Top most actress of all time. Sad that he didn’t live long. Great that you reminded her rightly during this quiz’s peak time. Thanks a lot, you made my day!
The song right from the prelude we can be assured that we are close to the nature without even watching the visuals. With visuals we are the nature. The choice of instruments; The frequent change of instruments alternating between one group (synthesizers, jalatharangam, violins) and second group (tribal percussion, flute) is so haunting. It takes us to the water falls and to a hilly village alternatively. This is like mimic’ing the mind which is not constant, it wavers aimlessly and randomly. Maestro has truly brought out the girl’s ecstatic mind who has fallen in love, just with the instruments alone, the singing has not even started.
What a tune! It flows freely like a water stream which adjusts and adapts its flow according to the nature of the land. Stunning to say the least!
Jency’s innocent singing even with her pennE instead of peNNE sounds innocent rather than a mistake. This song will never leave me even after I leave this world, it will carry to my soul, such a composition.
Last but not the least, excellent encoding, shows the amount of hard work, passion and interest you did/have to make us listen to an excellent quality. Thanks a lot!
Best of #365RajaQuiz!
தேவா.. said:
Adi Pennae from mullum malarum.
goods visuals and I likes the actress too just because of simplicity
ராஜா said:
முள்ளும் மலரும் படத்திலிருந்து அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை பாடல்.
ஆஹா என்ன ஒரு அருமையான பாட்டு & இந்த ஆல்பமே அருமையான ஆல்பம்தான். நீங்க குடுக்குற ஆடியோ க்ளுவோட தரத்தைப் பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு, எப்பவும் போல சூப்பர்.
இவங்கதான் உங்க டீஸண்ட் லிஸ்ட்ல வர்ற ஃபேவரைட் நடிகையா? 😉 . படங்கள் அவ்வளவா பாத்தது/பாக்குறது இல்லங்கிறதுனால, இவங்க நடிச்ச எந்தப் படத்தையும் பாத்தது இல்ல.
@rajabalanm
Usharani M (@usharanims) said:
அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை… – ஜென்சி – முள்ளும் மலரும்
Usha said:
S. Shoba…. wat a innocent face… Innocent expressions……….
adi pennae.. ponnunjal aadum ilamai…… The Best song …………..
ariv said:
@arivpr Adi Penne from Mullum Malarum
Very nice song selection 🙂
Rahini (@R_Rahini) said:
Majestic creativity in all its virtue is what this song is! Thank you saar for putting an entry for this beauty on the blog and thank you Raja saar for such a timeless composition! It’s Adi Pennae from the film Mullum Malarum 🙂
And, heartfelt thanks for all the effort that you put into encoding these tracks! The quality completely shows in these clippings 🙂
Anonymous said:
@hakkeemCBE…Adi Penne…Mullum Mallarum
@sagittarian82 said:
அடி பெண்ணே – முள்ளும் மலரும்
அருமையான போஸ்ட். One of your very best. எனக்கும் மிகவும் பிடித்தமான இயக்குனர் + நடிகை. நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர். அது போக தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் நடித்ததிலேயே ஆகச்சிறந்ததாக நான் (ஏன், அவரும் தான்) கருதும் திரைப்படம்.
இந்தப் பாடலுக்கு நன்றி. ராமன் ஆண்டாலும் / செந்தாழம் பூவில் / நித்தம் நித்தம் போன்ற மெகா ஹிட் பாடல்கள் மத்தியில் இதுவும், மானினமேவும் அமுங்கிப் போனது வருத்தத்திற்குரியதே. இசைஞானிக்கு எதிரி / போட்டி எல்லாம் இசைஞானியே .
ரிஷி(@i_vr) said:
மாஸ்டர் இப்பாட்டை பற்றி விலாவாரியாக நீங்கள் எழுதி விட்டீர்கள், இதற்கு மேல் என்ன வார்த்தைகளில் எழுதினாலும் அது வெறும் கேக்கின் மேல் வைக்கும் Icing தான் :-).
சமீபத்தில் கேமரா கவிஞர் இந்த படத்தைப் பற்றி எழுதியிருந்தார் – http://filmmakerbalumahendra.blogspot.com/2013/04/1969.html
//மகேந்திரன் இயக்கத்திலான முள்ளும் மலரும் படத்தில் முழுமையாக ஈடுபடுகிறேன். மகேந்திரனுக்கு இது முதல் படம். வசனகர்த்தாவான அவர் அதற்குமுன் உதவி இயக்குனராகப் பணியாற்றியோ அல்லது ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றோ திரைப்பட இயக்கத்தைக் கற்றவரல்ல. எனவே அவரது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற வகையில் எனது பொறுப்பு, (Responsibility) மிக அதிகமானது.
ஒரு படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற எல்லைக்குள் இருந்துகொண்டே முள்ளும் மலரும் படத்தின் திரைக்கதை அமைப்பிலும் உரையாடலிலும் திரைப்பட இயக்கத்திற்கு உட்பட்ட லென்சிங், ஷாட் டிவிஷன்ஸ், கெமராக் கோணங்கள் தேர்வுசெய்வது, நடிகர்களைக் கதாபத்திரங்களாக மாற்றுவது போன்ற அனைத்து பணிகளிலும் நான் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திகொள்கிறேன். படப்பிடிப்பின் பின் படத் தொகுப்பிலும் நான் கூடவே இருக்கிறேன்.
இந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் உணர்ந்திருப்பீர்கள்//
//முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உண்ர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார். “செந்தாழம் பூவில்” என்ற
அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்துகொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது…
இந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப் பட்டிருந்தது. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மொண்டாஜ் (Montage) உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு பட்டது. இதை மகேந்திரனிடம் சொன்னேன் அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குதான் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம்.
1976-ல் எனது முதல் படமான கோகிலாவில் நான் ஆரம்பித்த இந்த லவ் மொண்டாஜ் என்ற உத்தியை இன்றய இளம் இயக்குனர்கள் பலர் அழகாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்//
இவரின் இந்த கூற்றுகள் உண்மையெனில், இன்றைய பாடலிலும் “செந்தாழம் பூவில்” பாடலிலும் மகேந்திரனின் பங்களிப்பை விட கேமரா கவிஞரின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்(இதிலும் montage shots மட்டும் தானே).
ஆனால் தமிழ் திரைப்பாடல்களின் வரலாற்றில் அற்புதமாக படமாக்கப்பட்ட பாடல்களில் இவ்விருப்பாடல்களும் அடங்கும்… ராசா, ஷோபா, கேமரா கவிஞர், , மகேந்திரன்,D.வாசு(எடிட்டிங்) எல்லோரும் தான் அதற்கு காரணம்.
”பாசமலர்” அண்ணன் தங்கையை விட எனக்கு பிடித்தது காளியும் வள்ளியும்தான்… ரஜினியும் ஷோபாவும் நடிக்காமல் வாழ்ந்ததுதான் காரணம். ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு:
ரிஷி(@i_vr) said:
ஒரு சின்ன clarification… மகேந்திரன் அவர்களின் திறமை மீதும் அவர் எடுத்த கலைப் பொக்கிஷங்கள் மீதும் எனக்கும் சிறு துளியளவு கூட அவநம்பிக்கையில்லை. நிச்சயம் அவர் தமிழ் திரை உலக வரலாற்றில் பாதைகளை மாற்றியமைத்த அபூர்வமான geniusகளில் ஒருவர்தான். முன்பிட்ட commentன் சாரம் கேமரா கவிஞரின் ஆதிக்கம் இப்படத்திலும் பாடல்களிலும் இருந்திருக்கலாம் என்ற ஊகமே (அதுவும் அவரின் கருத்துகளின் அடிப்படையில்…உண்மை மகேந்திரன் அவர்களின் versionஐ கேட்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்). கேமரா கவிஞர் இல்லாமலும் பின்னர் வந்த பலப் படங்களில் வரும் காட்சிகளையும் பாடல்களையும் அற்புதமாக தந்தவர் மகேந்திரனே, ராசாவின் ஜீவயிசை பலத்துடன்..அதில் மறுபட்ட கருத்தே இல்லை.. அஷ்டே!! 🙂
ரிஷி(@i_vr) said:
ஷோபா…என்ற தேவதையைப் பற்றி என்ன எழுத..
“மூடு பனி” படத்தின் “என் இனிய பொன் நிலாவே” பாடல் வழிதான் இவரை கண்டு கொண்டேன் முதலில்… என்ன அற்புதமான முக பாவனைகள் அப்பாடலில்…சரணாகதிதான்!
அதன் பின் இவர் நடித்த நிறைய பாடல்கள் மட்டுமே (ஒளியும் ஒலியும்) அதிகம் பார்த்திருக்கிறேன் சிறு வயதில்…
கொஞ்சம் வளர்ந்தபின் “முள்ளும் மலரும்” படம் பார்த்து…அட நமக்கு இப்படி ஒரு தங்கச்சி இருந்தா எப்படியிருக்கும்…
”அழியாத கோலங்கள்” பார்த்து நமக்கு இப்படி ஒரு டீச்சர் இருந்திருந்தா எப்படியிருந்திருக்கும்…
”பசி” படம் பார்த்து என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை…என் தேவதை பசியால் ஏழ்மையால் வாடி வதங்குவதை காண சகியாமல் இன்றுவரை அப்படத்தை முழுமையாக பார்த்ததேயில்லை..
மகேந்திரன், கேமரா கவிஞரின் படங்களில் பார்த்த குழந்தைத்தனம் மாறாத தேவதையின் பிம்பம் கலைந்து போவதை நான் விரும்பவில்லை.. “ நிழல் நிஜமாகிறது” கூட அதிகம் பிடிக்காமல் போனதற்கு கூட அதுவே காரணம்… இதெல்லாம் நிழல்தான் நிஜமல்ல எனப் புரிந்தும் புரியாத வயது.. 🙂
அதிர்ச்சியூட்டும் அவரின் முடிவைப்பற்றி பின் படித்து அறிந்தபோது உண்டான உணர்வுகளை எழுத்தில் கொண்டு வரவே முடியாது… “லேகயுடே மரணம் ஒரு flashback”படம் அவரின் கதை என சொல்லப்பட்ட போதும் என்னால் 1% கூட நம்ப முடியவில்லை…
என் தேவதை ஏமாற்ற பட்டிருக்கவே மாட்டாள்…அவரின் குழந்தை முகத்தின் நேரே நல்ல ஆன்மா உள்ள எவனும் துரோகமோ துவேஷமோ செய்திருக்கவே முடியாது என நம்பினேன்… இன்றுவரை எனக்கு புரியாத புதிர்…அவரின் முடிவு… 😦
அவரின் குழந்தமை நடிப்பல்ல..அவரின் இயல்பு…அதை அற்புதமாக அவரின் எல்லா பாத்திரங்களிலும் கொண்டு வந்திருக்கிறார்… அதே மாறா விடலைத்தனத்துடன் “வெளுத்ததெல்லாம் பால்” என நம்பி வாழ்வை தொலைத்து விட்டாரோ 😦
ஆனாலும் வள்ளியாக குப்பம்மாவாக டீச்சராக ரேகாவாக அவர் நிழலில் வாழ்ந்தாலும் நிஜமாக நம் மனதில் வாழ்ந்து கொண்டேயிருப்பார்!.
கோவில்பட்டிக்காரன் (@ragavanpandian) said:
அடி பெண்ணெ – முல்லும் மலரும் – ஜென்சி
mavurundai said:
முள்ளும் மலரும் – அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
Kaarthik Arul said:
Wow! What a song and what an album!
adi peNNE from muLLum malarum sung by Shreya Ghoshal of the 80s, Jency. Directed by Mahedran and picturized beautifully by Balu Mahendra. All legends.
I have been expecting this song in our Quiz for quite some time. I expected that the postlude of this song wud be given.
The song is based on Madhyamavathi ragam. Already we have seen sevvandhi pookkaLil seidha veedu, Anandha thEn sindhum, en kalyANa vaibOgam unnOdudhAn in our Quiz. It’s a mangaLagaramAna rAgam. Generally it’s sung at the end of a concert (mangaLam). Even in the song ‘ enna samaiyalO’, the last part ‘ilaiyai pOdadi peNNE’ is based on Madhyamavathi like the ending of a kachEri.
Some other gems are thuLLi thuLLi nee pAdamma, AagAya gangai poonthEnmalar, needhAnE endhan ponvasandham, thAzham poovE vAsam veesu, thanga nilavukkuL nilavonRu, azhagAna manjappuRA, kuyilE kuyilE poonguyilE. I guess alli iLam poovO from mangaLam nErunnu http://www.youtube.com/watch?v=nCaJ5RGaVPA is also based on MadhyamAvathi. Want @prasannaR to confirm.
Even peppy songs like O mAnE mAnE unnaithAnE, kavidhai pAdu kuyilE kuyiLE ini vasanthamE, yAva shilpi kaNda kanasu neevu (from Janma Janma Anubhandana) are based on Madhyamavathi.
Raja has used this mangALagaramAna rAgam even for erotic songs Even some erotic songs like ponmEni urugudhE, nilA kAyudhu nEram nalla nEram and our most recent veNNilavu kodhippadhenna from Chinna mApLE.
Kaarthik Arul said:
Shobha! What an extraordinary actress! One of the finest heroines Tamil Cinema ever had. Her death is a great loss to Film Industry. She didn’t possess any qualities/physical beauty of a conventional heroine. She was like a girl next door. Her great assets are her childishness, innocence, simplicity and gracefulness. She looks so beautiful even without make up and she looked like an angel through the lens of Balu Mahendra. She has done 200% justice to the song with her expressions. Not only for this but also in songs like poovaNNam (though music not by IR), en iniya pon nilAvE (esp in the montages in the interludes), sendhAzhampoovil.
Balu Mahendra on Shobha and this song
http://balumahendras.blogspot.fi/2011/10/blog-post_5542.html
//அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ பாடல். இது ஷோபா மட்டும் தனிமையில் பாடகின்ற பாடல் .இயற்கையை நேசிக்கின்ற எந்தப் பெண்ணும் அந்தப் பாடலோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.தனக்கான ஆணின் முகம் தெரியாது,அவனுக்கான அன்போடவும் தாபத்தோடவும் இருக்கின்ற பெண்ணோட உணர்வை வெளிப்படுத்துகின்ற பாடல். ஒரு ஏரிக் கரையில தண்ணீரில் முழ்கி தன் கூந்தலை லேசாக அசைத்து தன் முகம் தெரியாத காதலனுக்காக தவிக்கின்ற தவிப்பை மிக நுட்பமாக கலை உணர்வோட வெளிப்படுத்தியிருப்பார். அந்த உணர்வு அந்த நீரோடையோடு கலந்திருக்கும் ஒரு தூய்மையான அன்பின் ,ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும்.//
//ஒரு ஆண் இயற்கையை வர்ணித்துப் பாடுகின்ற பாடல்தான் ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா’ பாடல். படத்தில் சரத்பாபுதான் பாடுவார். இடையிடையே சின்னச்சின்ன குளோசப் காட்சிகளில் ஷோபாவின் முகம் காட்டப்படும்.அந்த சின்னச்சின்ன காட்சிகள்தான் அந்த பாடல் காட்சிக்கு ஒரு ஜீவனைத்தரும் .அந்த பாடல் காட்சியிலிருந்து ஷோபாவோட குளோசப் காட்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் அந்தப் பாடல் ஒரு முழுமையற்ற தன்மையோடு இருக்கும்.//
என். சொக்கன் said:
அடி பெண்ணே from முள்ளும் மலரும்
Jagan T said:
அடிப்பெண்ணே பொன்னூஞ்சலாடுது இளமை. – முள்ளும் மலரும்.
@whoisjagan
மெயில் சப்ஸ்கிரிஸ்சனில் இந்த பதிவை படித்து, யாரைக்குறித்து இப்படி உருகியிருக்கிறார் என்று ஆச்சரியத்தில் பதிவுக்கு வந்தபின்புதான் தெரிந்துகொண்டேன்.
நீங்கள் எழுதிய அனைத்தும் வார்த்தைக்கு வார்த்தை சரி. நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்திய தேவதை அவர்.
சண்டே இந்தியன் பத்திரிக்கையில் தமிழ் திரையின் நினைவில் நின்ற கதாநாயகிகள் வரிசையில் ஷோபா குறித்து பாலு மகேந்திரா எழுதியது:
http://filmmakerbalumahendra.blogspot.in/2012/12/blog-post.html
@appandai said:
Adi penne
dtwdy said:
Adi Pennae – Mullum malarum
Prem Anandh P (@anandhame) said:
பாடல்: அடி பெண்ணே
படம்: முள்ளும் மலரும்
plum said:
gningal ithrEyum paranju pOya pinnE, gnangaLukku endhANU parayAnuNdu?
Brilliant tribute to a brilliant movie, with a brilliant combination. Twitter bAshaiyila sollittu odhungikkaREn
#rajadA
mAdhiri
#365quizdA
#RexAruldA
@r_inba said:
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை!
(முள்ளும் மலரும், ஜென்சி ; நடிகை ஷோபா)