Tags
@Anandraaj04, @arivpr, @baraneee, @dhanasekharjp, @dtwdy, @ezharai, @isaiyalan, @JMR_CHN, @maestromagic, @mavurundai, @maya_twit, @mnkavitha, @nchokkan, @nradhakn, @prasannaR_, @rajabalanm, @rmdeva, @rozavasanth, @R_Rahini, @seevin, @sundar140, @tcsprasan, @thachimammu, @tmbabu_78, @vrsaran, @vsandhiyaa, @whoisjagan
வாழ்க்கையின் பெரும் பங்கு காத்திருத்தலில் அல்லவா செல்கிறது? ஒரு குழந்தை பிறப்பதில் இருந்து, வரன் பார்த்து மணம் முடிக்கும் வரை ஆகட்டும், காதலிக்கு கடிதம் கொடுத்துவிட்டு பதில் வரும் வரைக்கும் பொறுப்பதிலிருந்து கோயம்புத்தூர் வாசிகள் இன்றைய நாளில் 12 மணி நேர மின்வெட்டு முடிந்து மீண்டும் மின்விசிறி சுழல காத்திருப்பதாகட்டும், everything in life is one of patient awaiting. அண்டை மாநிலமான தென் கரோலினாவின் motto கூட இலத்தீனில் “dum spiro, spero“. அதாவது, “என் உயிர் மூச்சு உள்ள வரை, நான் நம்பிக்கையோடு இருப்பேன்” என்று பொருள்.
அத்தகைய நம்பிக்கை உடைய காதலி, தன் நாயகன் வரும் நாளை எதிர்பார்த்து ஆற்றாமல் இருக்கும் நேரத்தில், டைரக்டர் நுழைத்துவிடும் அருமையான காதல் களம் கொண்ட கனவுப்பாடல் தான் இது. இந்தப் பாடலில், நாயகன் பல நாட்களுக்குப் பிறகு வரவிருக்கின்றான். அவன் ஊருக்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடுவதற்கு முன்னர் வரை இவர்கள் இருவரும் ஓடி ஆடி விளையாடி பூரித்ததை எல்லாம் நினைவு கூறும் வகையில் ஆரம்பிக்கிறது, இந்தப் புதிரின் ஆரம்ப புல்லாங்குழல் இசை. அந்த innocent ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், ஆரம்ப இசையில் துல்லியம்.அந்த வயலின்கள், பழைய நினைவுகளை அள்ளி வருகிறது. இவளின் ஆற்றாமை பொறுக்காமல் ஓடும் இவளின் நினைவுகளை திரையில் காட்ட, டைரக்டர் இந்த 21-markerல் ஒரு அழகு வெள்ளாட்டுக் குட்டியை துள்ளி ஓட வைத்திருப்பார். அதை இவள் துரத்த, இவளை அவன் துரத்த, பார்க்கவே மிக அருமையாக இருக்கும். (புகைப்படங்களிலும், திரைப்படங்களிலும், சித்திரங்களிலும், எனக்கு ஆட்டுக் குட்டிகள் என்றால் அலாதி பிரியம். பிரியாணி வைக்க அல்ல. அவற்றின் innocence என்னை மிகவும் கவர்ந்த ஒன்று 🙂). ஆக இவளின் மனமோ அந்த ஆட்டுக்குட்டி போலத் துள்ளி ஓட, நடக்கவிருக்கும் இடி போன்ற பயங்கரத்தை அசாத்தியமாக இசையில் காட்டிவிடுகிறார் இசைஞானி — ஒரு வித eeriness கலந்த percussion-based drums and trumpets மூலமாக. அதென்ன பயங்கரம்? வெள்ளித்திரையில் காண்க. 🙂
இந்தப் படம் வந்த பொழுது, ஆல் இந்திய ரேடியோ, சிலோன் ரேடியோ என்று எல்லாத்திலும் இந்தப் படத்தின் பாடல்கள் தான். A-Center, B-Center, C-Center என்று வசூல் அள்ளியதோடு மட்டுமல்லாமல், எல்லா தர மக்களும் காதல் வயப்பட வைத்தது என்றால் அது மிகையாகாது. நாகரீகம், மட்டை, மண்ணாங்கட்டி என்று பாசாங்கு காட்டிகிட்டு இருக்கும் நவீன காலக்கட்டத்தில் இந்தப் புதிரின் படம் போல ஒரு அருமையான கதைக் கொண்ட சில படங்களை இன்றும் பண்ணிக்கொண்டு இருந்தாலும், அன்று அனைத்து தர மக்களையும் ஆட்கொண்ட மாதிரி ஏன் இன்று அம்மாதிரி படங்கள் ஓடுவதில்லை என்று என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த டைரக்டரின் படங்களில், பாடல்கள் கேரண்டி! இவரின் படங்களும், அதற்கு ராஜாவின் இசையும் காலத்தால் அழிக்க முடியாதவை. பொன்னால் பொதிக்கப்பட்டவை. இந்தப் பெருமைமிகு கூட்டணிக்கு என்னைப் போலவும், உங்களைப் போலவும் பல விசிறிகள் உண்டு. 🙂
Have a nice weekend 🙂
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
Actress Gandhimathi’s role in this movie, received equal if not more accolades than the the lead actors in this movie.
Answer: Aanandha Then Sindhum (ஆனந்தத் தேன் சிந்தும்) from Man Vaasanai(மண் வாசனை.) (1983)
@rmdeva said:
Aanantham Then sindum poojolai from man vasanai. I felt today you left too much description abt the song..alomst fig out the song without listening it.
Rex Arul said:
@rmdeva – Yes. You’re right. Will make sure clues aren’t giveaways. Thanks for letting me know how you felt :-))
என். சொக்கன் said:
Aanandha Then Sindhum Poonjolaiyil From MaN Vaasanai
Sridhar (@maya_twit) said:
Film:Manvasanai Song:Anantha then sinthum poonjolayil
Baranee (@Baraneee) said:
ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில் – மண்வாசனை
Ariv said:
@arivpr Anantha Thaen sindhum from Man Vaasanai
Jagan T said:
ஏங்க… நாலாவது வரிய படிக்கறேன், கரெக்டா கரண்ட் போயிடுச்சு..
நாளைக்கு நீங்க விடைய போடுறதுக்குள்ள கரண்ட் வருதா பாக்கலாம்.
R. Saravanan (vrsaran) said:
பாடல் ” ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையே “. படம் மண் வாசனை !
dhanasekhar said:
aanandha then – man vasanai
Thanks sir
GiRa ஜிரா said:
எந்தவிதக் குறிப்பும் தேவைப்படாத பாடல் இது.
இப்படிப் பாடல்கள் அரிதாகிப் போன சூழலில் நாம் இருக்கிறோம் என்பதே கொடுமை.
இசையமைப்பாளர்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. அப்படிப் பட்ட கதைகளும், அந்தக் கதைகளுக்குப் பொருத்தமான இயக்குனர்களும் இல்லாமல் போனார்களே.
அதனால்தான் ”ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர்கொண்டு வரமுடியவில்லை”
இந்தப் படத்தில் காந்திமதி பாத்திரம் மிகமிக அருமையானது. என்னைக் கேட்டால் தேசியவிருது கொடுத்திருக்கப்பட வேண்டிய பாத்திரம். திறமையா இன்றெல்லாம் விருதுகளைத் தீர்மானிக்கிறது! போகட்டும்.
ஒவ்வொரு காட்சியிலும் அப்படியே எங்க ஊருக்குப் போனது போல இருக்கும்.
பாரதிராஜா இயக்குனராக வருவதற்கு முன்பு கன்னடத்திரை இயக்குனர் சாம்ராட் புட்டண்ணா கனகல் அவர்களிடம் உதவியியக்குனராக இருந்தார்.
புட்டண்ணா ஒரு பல்கலைக்கழகம். ஒவ்வொரு படங்களும் இன்றும் அருமை. தமிழில் டீச்சரம்மா என்ற படத்தை இயக்கினார். அதில்தான் அம்மா என்பது தமிழ் வார்த்தை என்ற அழகான பாடல் இடம் பெற்றது. அதற்கு இசை கே.ஜி.லிங்கப்பா. சுடரும் சூறாவளியும் என்றொரு காலத்தைத் தாண்டிய படத்தைத் தமிழில் எடுத்தார். மெல்லிசை மன்னர் அதற்கு இசை. படம் ஓடவில்லை. அடுத்து கப்பு பெளுப்பு (கருப்பு வெள்ளை) என்ற கன்னடப்படத்தைத் தமிழில் இருளும் ஒளியும் என்று வாணிஸ்ரீயை வைத்து எடுத்தார். படம் பெருவெற்றி. இதற்கு இசை கே.வி.மகாதேவன்.
தமிழோ கன்னடமோ இவரது படத்தில் இசையரசி பி.சுசீலா பாடும் மிக அற்புதமான சிச்சுவேஷனல் சாங் இடம்பெறும்.
மைசூர்க்காரராகிய இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் பாரதிராஜா. அதனால்தானோ என்னவோ.. அன்னக்கிளி தொடங்கி பல படங்களை மைசூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வைத்து எடுத்தார். தமிழின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான முதல்மரியாதை படம் அந்தப் பக்கத்தில்தான் எடுக்கப்பட்டது. மண்வாசனையும் அப்படியே. புது நெல்லு புது நாத்து படத்திலிருந்து அவரது காமிரா அம்பாசமுத்திரத்துக்கு மாறிவிட்டது, காவிரிப் பிரச்சனையினால்.
GiRa ஜிரா said:
ஒரு சிறிய தகவல்பிழை. அன்னக்கிளி தொடங்கி என்று எழுதியிருப்பதை 16வயதினிலே தொடங்கி என்று படிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும். நன்றி.
Rex Arul said:
திருத்தியமைக்கு மிக்க நன்றி, ஜிரா. எப்போதும் போல நல்ல பல அரிய தகவல்களைத் தந்து அனைவரையும் ஊக்குவிப்பதற்காக நன்றிகள் பல 🙂
Jagan T said:
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலை, மண் வாசனை.
40 விநாடிகளே வரும் இதில் என்னென்ன மாயாஜாலங்களை செய்திருக்கிறார்.
கிலுகிலுப்பை போன்ற ஆரம்ப புல்லாங்குழல், பின் ஜகஜகவென வயலின் மெதுவாக ஆரம்பித்து அதுவே கோபித்துக்கொண்டது போல் ஹைபிட்சில், அதை சமாதானப்படுத்துவதுபோல் வரும் புல்லாங்குழலும் இன்னும் இரு வாத்தியங்களும், பின்புலத்தில் டுகுடுகுடுகு என தபேலா(?)வும்.
ச்சே இந்த ஆள் மனுசனே இல்லைங்க.
@whoisjagan
(எப்படியோ கமெண்ட் போட்டுட்டேன் – இதோ இப்ப கரண்ட் போயிடும்)
dtwdy (@dtwdy) said:
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
Anonymous said:
@seevin Mann Vaasanai – Aanantha Then Sinthum
Anonymous said:
Mann Vaasanai – Aanantha Then Sinthum Mud smell @seevin
Prasannaa PMP (@tcsprasan) said:
55/365 :::Once again my favorite song. “Anandha Then sindhum Poonchaliyil” from Manvasanai
மகிழ்வரசு (@Anandraaj04) said:
இப்பத்தான் நீங்க நம்ம பக்கம் வந்திருக்கீக..,
மண்வாசனை படத்தின் “பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு ..”
இந்த பாடல் வரிகள் எனது காதலை வளர்க்க உதவியது.
அப்புறம்.., பாடலைக்கேட்டு நொய்நொய்னு அர்த்தம் கேட்டாக்கா.. !! இன்றும் தனது கைபேசியில் என்னவள் பதிந்து வைத்திருக்கும் பாடல் இது.
ஆதலாலே என் மனதிலும் பதிந்த பாடல்.
இந்த மண்வாசனை படப்பாடல் என் மனம் கொண்ட பாடல்..!!
மாவுருண்டை said:
மண்வாசனை – ஆனந்த தேன் சிந்தும்
ராஜா said:
பாடல்: ஆனந்த தேன் சிந்தும்
படம்: மண் வாசனை
@rajabalanm
மகிழ்வரசு (@Anandraaj04) said:
மண்வாசனை படப் பாடல் என்றாலே.. தாவுது மனம்..!! முதல்ல தப்பா சொல்லி.. அப்புறம் திருத்தி..!!
….ஆனந்த தேன்
சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் தேர்கொண்டு வந்தேனம்மா.. .. !!
Subtle_Sandya (@vsandhiyaa) said:
Anantha thEn sindhum from maNN vaasaNai?
Rahini said:
@r_rahini Aanandham Thaen Sinthum from Mann Vaasanai! A trip to the villages of India and back when you listen to this song! The heavy orchestration at the beginning of the song always make me wonder though! 🙂
இசையாளன் (@Isaiyalan) said:
“ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்” படம்: மண் வாசனை
Murugesh Babu T said:
Anantha Then Sindhum- Mann Vasanani
Venkatesh said:
Anandha then – Mann Vasanai
@rmdeva said:
Aanatham pongidum from man vasanai
Rex Arul said:
It is too late. I will reply to your detailed feedback later today. Thank you for all the precious, detailed comments. Much appreciated.