Tags
@baraneee, @dhanasekharjp, @dhivyadn, @dtwdy, @ezharai, @hakkeemCBE, @himsini, @its_my_wish, @kaarthikarul, @maestrosworld, @manivel, @mavurundai, @mayilSK, @mrajaiah, @nchokkan, @paval, @prasannaR_, @RagavanG, @rajabalanm, @rmdeva, @rozavasanth, @R_Rahini, @seevin, @soundparty, @StallionStorms, @sundar140, @tcsprasan, @thachimammu, @umakrishh, @vrsaran
Greetings everyone. I hope, everyone along Sandy and Nilam’s ways are safe and sound here in the USA and India. For those, who celebrate spookiness, wish you Happy Halloween.
IMPORTANT: Due to inclement weather and power-outages, DEADLINE for this quiz is extended by ANOTHER 24 hours. This deadline is extended to match 96/365’s. So answer for this will be published on November 2nd, 2012.
Let us go straight into the clue as time may be of the essence for the clue today, especially with looming power-outages 🙂 This song is one of the most fantastic songs of Maestro Ilaiyaraaja. It is a Period song. 🙂
இந்த பாடலில் இசைஞானி முழுக்க முழுக்க ஒரு disco themeல் ஒரே rock and roll சகிதம் பட்டையைக் கிளப்பியிருப்பார். இசையைக் கேளுங்களேன். ஆரம்பமே heavy strumming of the guitar. அடேங்கப்பா! முனகல் ஒலிகூட ஆணின் குரலில் சற்றே வித்தியாசமான அசத்தல். அங்கே ஆரம்பமாகும் Sax கண்டிப்பாக அந்தக் காலத்துக்குப் புதுசு. அதை வாசித்திருக்கும் styleஏ தனிதான். இந்த sequenceமுழுக்க the strumming of the guitar strings will be trying to dominate everything else. இருந்தாலும், இந்த Saxophone notes காட்டும் அந்த dominationஉம் ஒரு தனி சுகம்தான். இரண்டும் எந்த அளவுக்கு domination என்றால், அந்த light percussion drumsஐயே மறைக்கும் அளவுக்கு!
ஒன்றை கவனித்தீர்களா?
மிரட்டும் கிளப் சாங்கில் மெலடி தூக்கலாக இருக்கும். ஆனால் மெலடி இசைக்கருவி வயலினே எங்கும் காணோம் 🙂
ஆமாங்க, இந்தப் பாட்டும் கோயம்புத்தூர் வானொலி நிலையத்துல கணக்கிலடங்கா முறை கேட்டுப் பழகியது. ஒருமுறைகூட onlineல கேட்டதும் இல்லை, CDயும் இல்லை; வெறும் ஒலி நாடாதான் என்றாலும், கேட்டே பல ஆண்டுகள் ஆகிறது. புதிருக்கு ஒரு நல்ல disco பாடலாக எடுக்கலாமே என்றபோது, இந்த interlude மூளையில் சம்மனங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டது.
இனி இது உங்க தலைவலி. என்ன, கண்டுபிடிச்சுடலாம் இல்ல?
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.Wish movies like these are made for children, with animals-based themes.
Answer: Nilavu Neram (நிலவு நேரம்) from Annai Oru Aalayam (அன்னை ஒரு ஆலயம்) (1979)
Baranee (@Baraneee) said:
Nilavu Neram – Annai Oor Aalayam.
Kaarthik Arul said:
1st interlude of நிலவு நேரம் – அன்னை ஓர் ஆலயம்
இன்று விடையைக் கண்டு பிடித்ததில் ஒரு விசேஷம் உண்டு.
இந்தப் பாடலைக் கேட்டதில்லை, வழக்கம் போல் க்ளூவை வைத்துதான் கண்டு பிடித்தேன். Thanks to http://www.thiraipaadal.com ராம் லக்ஷ்மன் அல்லது அன்னை ஓர் ஆலயம் படங்களில் இருந்துதான் இருக்கும் என நினைத்தேன். Club song என்றதும் வாலிபமே வா வா பாடலாக இருக்கும் என்று நினைத்து ஊர்ஜிதப் படுத்த அந்தப் பாடலைக் கேட்டேன். ஆனால் அது இல்லை என்று தெரிந்ததும் அன்னை ஓர் ஆலயம் படத்தில் ‘அப்பனே அப்பனே’ பாடலாக இருக்கும் என்று நினைத்து அதுவும் இல்லாமல் போனது.
அப்படத்தில் அப்பனே அப்பனே, நதியோரம், அம்மா நீ சுமந்த பிள்ளை பாடல்களைத் தவிர வேறு பாடல்கள் கேட்டதில்லை. ல் நிலவு நேரம் என்று பி.சுசீலா பாடிய பாடல் இருந்ததால் க்ளிக்கினேன். அருமையாக ஆரம்பித்து கேட்டுக் கொண்டிருந்தபோது இன்றைய புதிருக்கான இசைத் துணுக்கைக் கேட்க நேர்ந்தது. மேலும் ஒரு முறை புதிரைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்
GiRa பாஷையில் சொன்னால் சுசீலாம்மாவுக்கு ஜே!
Thanks a lot again for introducing another gem 🙂
Here’s the video http://www.youtube.com/watch?v=tzKF1KLnpoE
GiRa ஜிரா said:
நான் என்ன நெனச்சேனோ அதே மாதிரிதான் நீங்களும் நெனச்சிருக்கிங்க. விடையக் கண்டுபிடிச்சிருக்கிங்க 🙂
இசையரசி சுசீலாம்மாவுக்கே ஜே 🙂
umakrishh said:
நிலவு நேரம் -அன்னை ஓர் ஆலயம் படத்திலிருந்து (இன்றுதான் கேட்டேன் முதன் முதலா )நீங்க கொடுத்த க்ளூ வச்சு முதலில் ராம் லக்ஷ்மணா இருக்குமோன்னு சந்தேகம் வந்தது.அதில் இல்லை என்றதும் இது உடனே கண்டுபிடிச்சது இரட்டிப்பு மகிழ்ச்சி மாஸ்டர் :))
Anonymous said:
அன்னை ஓர் ஆலயம் – நிலவு நேரம்.. இரவு காயும் ; பாடியவர்: பி.சுசீலா ;1979 @manivel
dtwdy (@dtwdy) said:
Nilavuneram – Annai oru aalayam
Nemkal Sanjheevi said:
Megam kottatum
Rex Arul said:
@nemkals – No boss. Please try 😦
sundar (@Sundar140) said:
அன்னை ஒர் ஆலயம் படத்தில் சுசீலா பாடும் ‘நிலவு நேரம்’ பாடல். மெலடி பாடலில் இந்தளவு வாத்தியங்களை வைத்து மிரட்டியவர் யாருமில்லை இது வரை என்றே நினைக்கிறேன் தெய்வமே என்னா அடி ஒவ்வொண்ணும் இடி மாதிரி
மயில்செந்தில் said:
நிலவு நேரம் – அன்னை ஓர் ஆலயம்.
ஏழர said:
நிலவு நேரம் – அன்னை ஓர் ஆலயம்
mavurundai said:
அன்னை ஒரு ஆலயம் – நிலவு நேரம்
Anonymous said:
@seevin……..Nilvau Neram Nilav Kayaum………Annai Oru Alayiam
Anonymous said:
@hakkeemCBE, Nilavu Neera…Annai Oru Alayiam.
@rmdeva said:
Nilavu Neram from Annai Oru Alayam. Today completly your hidden clue helped me to identify this song. this is the movie which I liked very much and due to animals shown on this movie. still its link fresh memory of watching this movie and I was in calicut (kozhikode) during that period.
ராஜா said:
அன்னை ஓர் ஆலயம் படத்திலிருந்து நிலவு நேரம் பாடல்.
இன்னைக்கு கொஞ்சம் பெரிய கமென்ட் போடலாம்னு பாத்தா கரன்ட் சதி பண்ணிடுச்சு :))
@rajabalanm
ராஜா said:
“பீரியட் பாட்டு”ங்கறத பாத்ததுமே இன்னைக்கு தேடுறதுக்கு நிறைய வேலை இருக்குமோனு நினைச்சேன். ஆனா ஆடியோவ கேட்டதும் கமல் படத்துல வர்ற பாட்டு மாதிரி தெரிஞ்சது. அந்த பாட்டு புதிரா வருமானு தெரியல, அதனால அது என்ன பாட்டுனு இங்க சொல்லல 🙂
டெக்ஸ்ட் க்ளூவ படிச்சதும் இந்த படத்துல வர்ற அப்பனே அப்பனே பாட்டோ இருக்குமோனு நினைச்சேன். கரன்ட் வந்ததும் அந்த பாட்டை ஒரு தடவ கேட்டுட்டு கன்பர்ம் பண்ணலாம் வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன். அப்பதான் நீங்க @kaarthikarul ட்வீட்டை RT பண்ணீங்க, அத வச்சு அப்பனே அப்பனே பாட்டும் இந்த படத்துல எனக்கு தெரிஞ்ச இன்னும் ரெண்டு பாட்டும்(நதியோரம், அம்மா நீ சுமந்த பிள்ளை) இல்லனு முடிவு பண்ணியாச்சு.
அப்புறம் கரன்ட் வந்துட்டு போன 20 நிமிஷ gapல இந்த படத்துல வர்ற மத்த பாட்டை கேட்டு புதிருக்கான விடையை கண்டுபிடிச்சாச்சு 🙂
பொதுவா மூன்று interlude இருக்குற பாட்டு அதிகம் வர்றதில்ல, அப்படி வந்தா அது நீள்ள்ள்ளமான பாட்டாதான் இருக்கும். இந்த பாட்டு 3 நிமிஷம் 55 நொடி தான். அதுல 3 interlude, மூனுமே ஒன்னுக்கொன்னு சளைச்சது இல்லனுதான் சொல்லனும். ராஜா ராஜாதான், இதுக்கு மேல எதுவும் இந்த பாட்டை பத்தி சொல்லத் தெரியல 🙂
ராஜா said:
இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், இது நமக்கு 25வது தொடர்ச்சியான சரியான விடை 🙂
dhanasekharjp said:
nilavu neram – annai or alayam
Vijay said:
Second interlude of Nilavu NEram from Annai Oor Aalayam. Fantastic pick Arul. Great description about the interlude. Every interlude is kickass! Club and Disco songs like these are by biggest favorites starting from Vaa NaaLukku NaaL, Baby o Baby, RasiganE, Kholapurase, Aadalil Paadalil, Disco King, Disco Sound, Adi Raani Mangamma, Pon VaanilE, PaattengE and this is a big list. What a variety and versatility even in this genre!. Every note has surprises! Most of all, these songs are very very Indian. These songs came before the Information era with no help from internet/technology. Songs like this are a big challenge to beat for any composer even in this techo world. Great job Rex for picking up these fantastic ludes to showcase our dearest genius!
GiRa ஜிரா said:
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ.. அட்டகாசமான பாட்டு. ராஜா எத்தனை விதமா டி.எம்.எஸ்சை பயன்படுத்தியிருக்காருன்னு இந்தப் பாட்டைக் கேட்டாப் புரியும்.
Arun Rajendran said:
Nilavu neram from Annai oru Aalayam…frankly speaking i do not even remember hearing this song before let alone this interlude….Life line gave way to identify the film pretty easily…but had to actually listen to couple of songs before stumbling upon this rare gem…
@paval said:
நிலவு நேரம் – அன்னை ஓர் ஆலயம்
how could GiRa miss this
GiRa ஜிரா said:
கண்டுபிடிச்சிட்டோம்யா. ரெக்சு குளுவே குடுக்கலைன்னா ஒடனே கண்டுபிடிச்சிருப்பேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு
Meera (@himsini) said:
Nilavu neram from Annai Oru Aalayam.
Udhayakumar Durai said:
அன்னை ஒரு ஆலயம் – நிலவுநேரம் .
என். சொக்கன் said:
நிலவு நேரம் from அன்னை ஓர் ஆலயம்.
இந்தப் பாட்டை அதிகம் கேட்டதில்லை. ஆனால் இந்த இசை இதே படத்தில் வரும் ‘அப்பனே அப்பனே’ பாட்டைக் கொஞ்சம் நினைவுபடுத்தியதாலும், டெக்ஸ்ட் க்ளூவினாலும் அதிர்ஷ்டவசமாக இந்தப் பக்கம் வந்தேன். கண்டேன் 🙂
R. Saravanan (vrsaran) said:
பாடல் ” நிலவு நேரம் “. படம் அன்னை ஒரு ஆலயம் !
. (@dhivyadn) said:
நிலவு நேரம் – அன்னை ஒர் ஆலயம்.
க்ளூ வெச்சு தான் கண்டுபிடிச்சேன்.
As you said, nice melody in a club song!!
. (@dhivyadn) said:
நிலவு நேரம் - அன்னை ஒர் ஆலயம்.
க்ளூ வெச்சு தான் கண்டுபிடிச்சேன்
As you said, nice melody in a club song!!
Maheswaran Rajaiah (@mrajaiah) said:
நிலவு நேரம் — அன்னை ஓர் ஆலயம் — sax கேட்டுட்டு அப்பனே song னு நினைச்சுட்டேன்…அப்புறம் பாத்தா இல்ல.ஆனா அதே படத்திலே தேடினா சிக்கிருச்சு
Kamal (@its_my_wish) said:
Nilavu neram iravu kaayum from Annai Oor Aalaiyam 😉
GiRa ஜிரா said:
நிலவு நேரம்
இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
ஏங்குது மல்லிகைப் பள்ளி
அன்னை ஓர் ஆலயம் படத்திலிருந்து இசையரசி பி.சுசீலா பாடியது.
இந்த இசைத்துணுக்கைக் கேட்டதும் நினைவுக்கு வந்தது இந்தப் பாட்டுதான். ஆனால் குறிப்பில் விலங்கு என்று சொன்னதும் குழம்பி விட்டேன். ஏனென்றால் இந்தப் பாட்டை நான் இதுவரை பார்த்ததில்லை. முதலில் தோன்றியது வாலிபமே வா வா பாட்டு ராம்லக்ஷ்மணிலிருந்து. ஆனால் அந்தப் பாட்டு இல்லை என்பது புரிந்தது. தூங்கி எழுந்ததும் பாலகன் முருகன் அருள் செய்து விட்டான்.
பொதுவாகப் பலர் சொல்வது…. சுசீலாம்மா கிளப் சாங் பாடுனா நல்லாருக்காது.
ஆனா அது உண்மையல்ல. அதைப் பலமுறை அவர் நிரூபித்து விட்டாலும் மக்களுக்கு ஒரு சந்தேகம்.
ஏன் அந்தச் சந்தேகம்?
ஆபாசத்துக்கும் ஆனந்தப்பரவசத்துக்கும் ஒரு இழைதான் இடைவெளி. கொஞ்சம் அந்தப் பக்கம் போனால் அது ஆபாசமாகிவிடும்.
பி.சுசீலா அந்த வகையில் கோடு தாண்டாத பாடகி. ஆனால் பாட்டுக்குத் தேவையான உயிரைக் கொடுத்த பாடகியும் கூட.
ஜிஞ்சினக்கு ஜினக்கு பாட்டைத் தெலுங்கில் பாடியது சுசீலாம்மாதான். தெலுங்கில் அது டூயட் பாடல். மிக அழகாக இருக்கும்.
மெல்ல மெல்ல என்னைத் தொட்டு என்னும் சிலுக்கு பாட்டும் சுசீலாம்மா பாடியதுதான். சிலுக்குக்கே காதல் டூயட் பாட்டு வைக்க வேண்டிய நிலையில் பாடியதும் சுசீலாம்மாதான்.
1. காளிதாசன் கண்ணதாசன் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி
2. பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் – அடுத்தவாரிசு
இதையெல்லாம் விட…. ஜெயமாலினி என்ற ஒரே காரணதுக்காக பெருவெற்றி அடைந்த ஜகன்மோகினியில் பலபாட்டுகளைப் பாடியவர் சுசீலாம்மாதான்.
ஏக்கத்தையும் தாபத்தையும் முக்காமல் முனகாமல் குரலில் காட்டிய பாடகி சுசீலாம்மா.
இந்தப் பாட்டையே கேளுங்கள்… அவனை அழைத்தேன் வாரானோ…ஹ்ஹா.. அந்த ஹ்ஹாவில் பாட்டின் மொத்த உணர்வும் தெறித்துத் தெரிந்து விடுகிறது.
இந்தப் பாட்டைப் பற்றிச் சொல்லி விட்டு ஜெயமாலினியைப் பற்றிச் சொல்லாமல் போகமுடியுமா?
கவர்ச்சி நடிகைகளில் எனக்குப் பிடித்தவர்கள் சிலுக்கும் ஜெயமாலினியும்தான் J
ஜெயமாலினி ஆடும் அட்டகாசமான ராஜா பாட்டு ஒன்று உள்ளது. அந்தப் பாட்டையும் ரெக்ஸ் புதிர்ல சேப்பாருன்னு ஆவலாயிருக்கேன். J
ஜெயமாலினி ஆடும்போது அடவுகள் அட்டகாசமா இருக்கும். அவங்க மட்டும் பரதநாட்டியம் ஆடியிருந்தா….அடவுக்கே ஆயிரம் சபா கூப்பிடும். இதை ஏற்றுக் கொள்ளச் சிலருக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் ஆடல் என்ற கலையை மட்டும் மனதில் வைத்துப் பார்த்தால் உண்மை புரியும். பரதக்கலையே தேவதாசிகள் வளர்த்ததுதானே. பரதநாட்டியத்துக்கு 19ம் நூற்றாண்டில் தேXXயா கச்சேரி என்றே பெயரும் இருந்தது. ஆகையால் புனிதம் என்று பார்ப்பதை விடக் கலையைக் கலையாக ரசிப்பது நல்லது.
இப்படி எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் எனக்குப் பிடித்த ஆடலரசி ஜெயமாலினியே! J வேறுயார் எனக்குப் பிடித்த மாதிரி ஆடினாலும் ரசிப்பேன் என்று இந்தத் தருணத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். J
இந்தப் பாட்டில் ஒரு வரி… ஏங்குது மல்லிகைப் பள்ளி. அதென்ன மல்லிகைப் பள்ளி?
பள்ளி என்றால் படுக்கை. மல்லிகை மலர்களைக் கொட்டியும் கட்டியும் அழகுபடுத்தப்பட்ட படுக்கைதான் மல்லிகைப்பள்ளி.
கடைசியாக ஒரு செய்தி. தேவர் பிலிம்ஸ் பற்றி.
சாண்டோ சின்னப்பாத்தேவருக்கு மெல்லிசை மன்னர் நண்பர். அவர் முதல் படம் எடுத்த போது அதற்கு எம்.எஸ்.விசுவநாதன் இசையமைக்க வேண்டும் என்று விரும்பினாராம். பலவித காரணங்களால் முடியாமல் கே.வி.மகாதேவன் இசையமைத்திருக்கிறார்.
இரண்டாம் படம் எடுக்கும் போது மெல்லிசை மன்னரிடம் போய் அட்வான்ஸ் குடுத்திருக்கிறார். அவரும் வாங்கி அம்மாவிடம் குடுத்திருக்கிறார். விவரம் கேள்விப்பட்டு மெ.மன்னரை அவரது அம்மா அறைந்திருக்கிறார்.
முன்பு எம்.எஸ்.வி பெட்டி துடைத்துக் கொண்டிருந்த காலத்தில் ரெக்கார்ட் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்த கே.வி.எம் தீபாவளிக்குக் கொஞ்சம் பணமும் வேட்டியையும் வாங்கித் தந்ததை நினைவு படுத்தி… அவருக்கா துரோகம் பண்ற என்று கடிந்து கொண்டாராம். பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டாராம் எம்.எஸ்.வி.
நல்ல நண்பர்களாக இருந்தும் தேவர் பிலிம்ஸ் படத்துக்குக் கடைசி வரை எம்.எஸ்.வி இசையமைத்ததே இல்லை. முதலில் கே.வி.எம், பிறகு குன்னக்குடி, பிறகு சங்கர்-கணேஷ், பிறகு இளையராஜா என்றுதான் இசையமைப்பாளர்கள் தொடர்ந்தார்கள்.
இதையெல்லாம் இந்தக் காலத்தில் யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
R. Saravanan said:
இந்தப் பாடலை நான் இது வரை கேட்டதில்லை. நேற்று புதிருக்கு வந்த பிறகே கேட்டேன்.
சுசீலா அவர்களை கிளப் / டிஸ்கோ பாடல் பாடவைத்ததன் மூலம், நிறைய மரபுகளை அப்போதே ராஜா உடைத்து எறிந்திருக்கிறார் என்பது கண்கூடு !
கேட்க கேட்க ஆச்சர்யம். 80களிலேயே இது போல் கலக்கல் டிஸ்கோ பாடலில் (மூன்றும் அதிரடி interludes) பிய்த்து உதறி இருப்பதை பார்க்குபோது, இப்பாடலின் வடிவாக்கத்தின் போது அவர் கொஞ்சம் ” ஜிகர்தண்டா ” கூட அருந்திட்டாரோ என்று தோன்றுகிறது !
ராஜாவின் இசை கிராமிய இசை, nativity அதிகம் என்று குறை கூறுபவர்களுக்கு இந்த ஒரு பாடலைக் கேட்டால் போதும் !
This song is distilled rock at its best and country-made too. You do not need any other item for a high !!
Rahini said:
@R_rahini finally got this song! The extra day definitely helped! 🙂 Answer is Nilavu Naeram from Annai Oar Aalayam! 🙂