Tags
@amas32, @anandhame, @appandai, @baraneee, @chilledbeers, @dtwdy, @ezharai, @gopi37, @isai_, @I_VR, @kaarthikarul, @maestrosworld, @manivel, @mavurundai, @muthiahrm, @naanillai, @nchokkan, @nom_d_plum, @npodiyan, @nradhakn, @prasannaR_, @QatarSeenu, @RagavanG, @rajabalanm, @rmdeva, @r_inba, @R_Rahini, @sagittarian82, @sathishvasan, @seevin, @sicmafia, @sriivl, @StallionStorms, @sundar140, @tcsprasan, @tekvijay, @usharanims, @vasukrishnan, @vicks__, @vrsaran, @w0ven, @_Drunkenmunk
வணக்கம்.
புது வாரம் மலரும் இத்தருணத்தில், #365RajaQuizன் 365 நாள் பயணத்தில், இன்று இறுதி வாரமும் தொடங்குகிறது. இது வரை #365RajaQuizன் ஆதரவாளர்களாக வலம் வந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன். இன்னொரு வாரம் புலர்ந்துவிட்டது என்று இனிமேல் இந்த #365RajaQuizன் தளத்தில் இருந்து வாழ்த்த முடியாவிட்டாலும், என்றும் மனதளவில் வாழ்த்திக்கொண்டு தான் இருப்பேன். 🙂 தமிழும் இசைஞானியின் இசையும் உள்ள வரையில் முடிவு என்பது ஏது.சரி தானே?
இன்று வரும் பாடலும், 358/365 போல என் வாழ்வோடு ஒன்றிவிட்ட பாடல். It is deeply and intensely personal. அதனால், இதனை நேற்றைய பாடலை விடவும் சிரத்தை எடுத்துக்கொண்டு encode செய்து முடித்தேன். நீங்கள் இந்தப் பாடலை YouTubeலோ, இணையதளத்தில் வேறு இடங்களில் கேட்டிருந்தாலும், இந்தப் பாடலின் கொடுமையான இரைச்சலில் மூழ்கிப் போன அருமையான சந்த ஒலிகளை ரசிக்கமுடியாமல் போய் இருக்கலாம் 😦 . அதனால் இதை encode செய்ய இன்னும் challengingஆக இருந்தது. என்னுடைய இந்தத் துணுக்கில், இந்த இடையிசையில் வரும் சந்தூர் டிங்டிங்டிங்ங்ங்ங்ங்ங் என்று ஆழமாக ஒலிப்பதைக் கவனிக்கலாம். அதே போல, தபேலா மற்றும் மத்தளம் வரும் இடங்களில் டும்டும்டும்டும் (~ 13 to 30 second marker) தெளிவாக கேட்கலாம். அதே போல நாயனத்தையும், நாகஸ்வரத்தையும் முன்னிலைப்படுத்தி வரும் பாடலில் இவர் எங்கே bass guitar எல்லாம் உபயோகித்திருக்கப்போகிறார் என்று நினைப்பவர்கள், சற்றே நிற்க. Encoding செய்துள்ள இந்த ஒலிப்பேழையைக் கேளுங்கள்……என்ன…bass-guitar clearஆ இருக்கா? இப்ப போய் வேறு எங்க வேணும்னாலும் கேளுங்க.
My point? Do NOT avoid old, ‘period’ songs! 🙂 With additional effort and careful noise-removal, such songs can give an out-of-the-world experience to a modern, headphones generation! That is the simple message, I want to submit to the audience, in this final week of our 365-day journey! 🙂
இந்தப் பாடலை என் மகளுக்கு 2 முதல் 3 வயது வரை தாலாட்டு பாடலாக ஒவ்வொரு இரவும் இசைத்ததுக் காட்டியது உண்டு. என்னுடைய iPhoneல் இருந்த ஒரே பாடல், அப்போது, இது மட்டும் தான். இதில் நகைச்சுவையான விசயம் என்னவென்றால், என்னை அறியாமல் இரண்டாம் சரணம் வரும்போதே நான் உறங்கிவிடுவேன். மகளோ, அப்பா…அப்பா..once more என்பாள். இந்தப் பாடலை நான் சிறுவயதில் நிறைய ரசித்துக் கேட்டது உண்டு.
அகில இந்திய வானொலி, கோயம்புத்தூர் வானொலி நிலையத்தில் அடிக்கடி இதை ஒலிபரப்புவார்கள். நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி நாட்களில் எல்லாம், இதை வெகுவாக ரசித்து, உள்வாங்கி internalize செய்தே விட்டேன். இந்தப் பாடலைக் கேட்டால் பிணத்துக்கு கூட தமிழ் மீது ஒரு பற்று வரும்! பாடல் வரிகளையும், இசையையும் பிரிக்க முடியாத organic கலவையான இந்தப் பாடலுக்கு அம்மாதிரியான inspirational power உண்டு 🙂 அந்தக் காரணத்தினால், எப்போதுமே இந்தப் பாடல் எனக்கு கொள்ளைப் பிரியம்.
அதை ஒரு நாள் தனியாக நான் கேட்டுக்கொண்டிருக்க மகளுக்கும் இந்தப் பாட்டு பிடித்துவிட்டது. தனிக்காட்டு ராஜாவில் I want அக்கா song என்று எப்படி ராசாவே உன்னத்தான் எண்ணித்தான் பாடலை கேட்டு ரசிப்பாளோ, இந்தப் பாட்டை, I want தம்பி song (பாடலில் ஒரு இடத்தில் “தம்பி” என்று ஒரு சொல் வரும் :)) என்று கேட்டு ரசிப்பாள். அதுவே தாலாட்டு பாடலாக மாற, அவளுக்குள்ளும் இந்தப் பாடல் ஒருவித சுகத்தையும், ஆறுதலையும் தந்து இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். என்ன விந்தை இது என்று. அதுவும், ஒரு முறை இந்தப் பாடல் பாடி முடிக்கும் முன்பே என்னையும் அறியாமல் அது என்னை உறங்க வைத்துவிடும். என் மகளோ, இந்தப் பாட்டை repeatல் கேட்டே ஆகவேண்டும் என்று பல முறை பாட வைப்பாள். அப்போது தான் முதன்முறையாக iPhoneல் எப்படி அந்த loop modeல் பாட வைப்பது என்று கூட கற்றுக்கொண்டேன். (I do not listen to songs on mobile and PC devices, normally :))
Music may be in the genes. Does musical-appreciation also flow through the genes? That is what my daughter made me realize, at several levels. 6 years after, when I played the original CD that was recorded for her as a 3-month old baby was Kuyil Paatu (Ilaiyaraaja version). She immediately latched on to it. She did NOT want to play any other song. When I played the joyful version of Swarnalatha, she asked me to just keep playing IR’s version in repeat mode. இம்மாதிரி பல அனுபவங்கள். சுகமானதும் கூட.
அப்படி என் வாழ்வில் ஒரு தகப்பன் – மகள் பாடல் என்ற அந்தஸ்தைப் பெற்ற பாடல் தான் இது, albeit, it has nothing to do with filial theme 🙂
Today’s song is pedagogical in nature!
பாடலில் குருவாக ஒருவர் பாட, சிஷ்யர்(or சிஷ்யை) பாடிக்கொண்டே வருவது போல முழு பாடலும் போகும். இதில் நாகஸ்வரம் வருகிறதே….இது ஏதோ, போட்டு ஆகவேண்டும் என்று இசைஞானி போடவில்லை. படத்தைப் பார்த்தோருக்கு இது ஏன் என்று நன்கு விளங்கும்! ஒவ்வொரு இசைக்கருவியையும் அளந்து அளந்து போட்டிருப்பார். ராகமும், இசையும்,மெலடியும், தாளமும், இந்தப் பாடலை evergreen classicஆக ஆக்கி இருக்கிறது.
நிற்க.
இசை எந்த அளவுக்கு ஒரு ரசிகனை கட்டி இழுத்துப்போடுமோ, அதே அளவு, அருமையான பாடல் வரிகளைக் கொண்ட பாடல்கள் பாடலாசிரியர்களை முன் கொண்டு வந்து நிறுத்திவிடும்.
இந்தப் பாடலை எழுதியவர், சந்தக் கவி என்று சொந்தம் கொண்டாடும் அளவுக்கு சந்தத்துக்கு சிறப்பாக எழுதக் கூடிய புலவர் புலமைப்பித்தன்.
இந்தப் பாடலைக் கேட்டால் தமிழ் மொழி மீது பீடும், பெருமையும், உவகையும், காதலும், அன்பும், பற்றும், ஏன் வெறியே கூட வந்தே விடும். தமிழ் இசையின் பெருமையையும், தமிழின் அருமையையும், இரண்டே சரணத்தில் அணுகுண்டு அளவுக்கு ஆற்றலை ஒளித்து வைத்தாற் போல எழுதி தள்ளிவிட்டு போய் இருப்பார் புலவர் புலமைப்பித்தன். அதற்கு ஏற்றவாறு இசைஞானியின் 2nd half of each Saranamஐ கவனியுங்கள்…உச்ச ஸ்தாதிக்கு இழுத்துக்கொண்டு போக போக, அதற்கு பதிலடியாக புலமைப்பித்தனின் strong words of love for Tamil அங்கு வெளிப்படும்.
சுருக்கமாக சொன்னால், பாடலைக் கேட்டு உவகை அடையலாம். மகிழலாம். பெருமைப் படலாம். ஆனால் நான் குறியீடு செய்துள்ள இடத்தில் வினவியது போல, இரண்டு இடையிசையின் இறுதியில் வரும் அந்த சொற்ப வினாடிகளில், புல்லாங்குழலும் சந்தூரும் இசைக்கும் அந்தத் தருணங்களில் உங்களையும் அறியாமல் கண்கள் பனிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் பார்ப்போம். 🙂
அது தான் இந்தப் பாட்டின் சிறப்பே.
அது தான் இந்தப் பாட்டின் சந்தத்துக்கும், இசையின் மெலடிக்கும் உள்ள சிறப்பே.
A song like this, that is palatable to a child, clearly vouches for its pristine purity.
Soulful!
தமிழும் இசை(ஞானி)யும் இருந்தால் மரணம் ஏது?
நன்றி.
Have a nice week ahead.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Very extensively noise-removed, as the original sound for this track is very limited in its quality. Several passes at multiple locations had to be done before noise-gate could be applied. Audio quality on YT and other sites are poor for this entire album. Please let me know, if a better source exists.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.Nathaswaram legends M.P.N Sethuraman and M.P.N Ponnuswamy played the Nadhaswaram for this song, while Pulavar Pulamaipithan penned all the lyrics for this movie!
Answer: Amudhe Thamizhe (அமுதே தமிழே) from Koyil Puraa (கோயில் புறா) (1981)
ஏழர said:
அமுதே தமிழே – கோயில் புறா
ஏழர said:
எங்கே இடம்பெறாமல் போய்விடுமோ என்று அஞ்சினேன், மிக்க நன்றி அண்ணே இப்படி ஒரு ஒலித்தரத்தில் இதைக்கேட்டதே இல்லை ஆனந்தமாக இருக்கிறது, உங்கள் கடும் உழைப்புக்கு நாங்கள் கைமாறு செய்யவே முடியாது!
Rex Arul said:
அந்தக் குறையே வராத மாதிரி முடிச்சுட்டோம் ஏழர 🙂 மிக்க நன்றி 🙂
R. Saravanan said:
பாடல் ” அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே “. படம் கோவில் புறா (1981). பி. சுசீலா & உமா ரமணன் பாடிய அட்டகாஷ் பாட்டு !
Rex Arul said:
:)))
இராதாகிருஷ்ணன் said:
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே…. வாவ்.
Rex Arul said:
அதே தான். வாவ் 🙂
Baranee (@Baraneee) said:
Amuthey Thamizhe – Koil Pura
Kaarthik Arul said:
amudhE thamizhE azhagiya mozhiyE enadhuyirE from kOvil puRa sung by P.Suseela and Uma Ramanan.
One of the most beautiful songs based on the raga Rasika Ranjani. Another famous song in this raga is neelakkuyilE unnOdudhAn paNpAduvEn from magudi.
Other songs sangeethamE and vEdham nee from this album are also classical gems
Rex Arul said:
ஆமாம் அருள். அதையும் தருவதாக இருந்தேன். இடம் இல்லை 😦
Kaarthik Arul said:
//A song like this, that is palatable to a child, clearly vouches for its pristine purity.// – Very True Rex!
Rex Arul said:
Thanks a lot, Arul. I truly believe so too 🙂
R. Saravanan said:
நான் அடிக்கடி கேட்டு மகிழும் பாடலிது. புலமைப்பித்தன் அவர்களின் அளவற்ற திறமைக்கு இந்த ஒரு பாடல் போதும் சான்றாக !!
Rex Arul said:
ஆமாம் சரண் 🙂
என். சொக்கன் said:
அமுதே தமிழே from கோவில் புறா
tcsprasan said:
அடடா மாஸ்டர் உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்ல.. இன்னிக்கும் எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டுத்தான். ஒவ்வொருமுறை கேட்கும்போதும் அப்படியே உருகிப்போயிடும். எனக்கு ரொம்பபுடிச்ச 5 ராசா பாட்டுகளை பட்டியலிடச் சொன்னா, இந்த பாட்டு கண்டிப்பா முதலிரண்டு இடத்திலிருக்கு. நேந்துப்பாட்டும் 5ல இருக்கும்.
இந்த லேஸ் சிப்ஸ் விளம்பரத்துல் சொல்றா மாதிரி, ஒன்னோட நிப்பாட்ட முடியாது. ஒரு தடவை கேட்டா கண்டிப்பா மறுபடி மறுபடி தொடர்ந்து என்னைக் கேட்க வைக்கும் இந்த பாட்டு. இந்தப் பாட்டில் ஒரு நாள் ஒன்றிப்போய் நாள் பூரா கேட்டும் சலிக்காம சிஙக்ப்பூரிலிருந்து சென்னைக்கு தேவாவுக்கு போன் செஞ்சு இதைப் பத்தி ரொம்ப நேரம் பேசி/பாடிட்டு இருந்தேன்
எனக்கும் இந்தப்பாட்டுக்கும் ஏதோ பல ஜென்மத் தொடர்பு இருப்பதுபோல எனக்கு எப்பவுமே தோணும்.
“இசையிருந்தால் மரணமேது”ன்னு சொல்லும்போது அப்படியே ஜிவ்னு எங்கயோ தூக்கிட்டுபோயிடும். அப்படியொரு உருக்கம் இந்தப் பாட்டுல. இந்த கமெண்டை டைப் பண்ணும்போதே கண்ணெல்லாம் கலங்குது. ஆனந்தக் கண்ணீர்தான்
இதெல்லாம் குவிஸ்ல வரும்னு சத்தியமா எதிர்பாக்கலை. ஆனந்த அதிர்ச்சி. அதுவும், அடி பெண்ணே நேத்திக்கு, இன்னிக்கு அமுதே தமிழே. இதுக்கு மேல நான் உங்களை எதுவுமே கேட்க முடியாது. என்னவோ தெரியலை
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ் பா
சுவையோடு கவிதைகள் தா – தமிழே நாளும் நீ பாடு
ஹைய்யோ ஹைய்யோ எப்படி இந்தாளு இப்படியெல்லாம் பாட்டு போடுறாரு. அவருக்கு மட்டும் இதெல்லாம் எப்படித் தோணுது..
இதுக்கு மேல முடியல.
@tcsprasan
Rex Arul said:
ஆகா. டிசிஎஸின் மிக நீண்ட பின்னூட்டம் என்னும் போதே, அதில் எத்துணை உணர்ச்சிவசப்பட்ட கருத்துகள் இருக்கும் என்று யூகித்தேன். யூகம் தவறவில்லை. ஆன்மாவை அலசிப்போடும் பாடல் ஆச்சே. அதிலும் ஆச்சரியமில்லை. மிக்க நன்றி டி.சி.எஸ் 🙂
Prasanna Venkatesan (@prasannaR_) said:
பாடல்: அமுதே தமிழே அழகிய மொழியே
படம்: கோயில் புறா
”கலை பலவும் பயில வரும் ,அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய, தமிழே நாளும் நீ பாடு!”
சிலாகிக்க வைக்கும் வரிகள், மெய்சிலிர்க்க வைக்கும் இசை!
இந்த ஆல்பமே தேனிசைத் தெள்ளமுது என்றுதான் சொல்ல வேண்டும்.
புலமைப்பித்தனும் ராஜாவும் இணைந்து தந்த அமுதம் இது.
கோயில் புறா படத்தின் கதை,திரைக்கதை, வசனம் நடிகர் வினு சக்கரவர்த்தி.
இந்தப் படத்தின் கதாநாயகன் பி.யு.சி.ராஜாபாதர், அந்தக்கால சூப்பர்ஸ்டார் பி.யு.சின்னப்பாவின் மகன்.
இந்தப் படம் தோல்வியடைந்து பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்து இளம் வயதிலேயே அகாலமாக மறைந்து விட்டார். 😦
இந்த ‘அமுதே தமிழே’ பாடல் ரசிகரஞ்சனி ராகத்தில் அமைந்தது.
என்ன விந்தை என்றால், இந்தப் பாடல் அந்த ராகம் இந்த ராகம் என்று ஆளாளுக்குத் தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதைப் பற்றி ராஜாவே இங்கு சொல்கிறார்.
பிறகு இந்தப் பாட்டை அவர் குரலில் பாடுகிறார் பாருங்கள். நமக்கான தருணம் அது. 🙂
Rex Arul said:
மிக்க நன்றி பிரசன்னா. இந்த வீடியோவை முதலிலேயே பார்த்து இருக்கிறேன். பியூ சின்னப்பாவின் மகன் நடித்த இந்தப் படத்தை நான் தூர்தர்ஷனில் பார்த்து இருக்கேன். சிறு வயதில் பார்த்தது. புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. May be I should try to get the DVD to watch it now 🙂
@npodiyan said:
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
Anonymous said:
@seevin Amuthey Thamizhe அமுதே தமிழே – YouTube….Kovil Pura…
Srinivasan said:
பாடல் : அமுதே தமிழே
படம் : கோயில் புறா
அருமையான பாட்டு மாஸ்டர், அருமையான ஆல்பமும் கூட. உங்க ஒலியின் தரம் சத்தியமா வேற எங்கு தேடியும் கிடைக்கல மாஸ்டர். சில பாட்டுங்க அந்த இசை கேட்ட உடனே கண்டுபிடிக்கக்கூடும், அது மாதிரியான ஒரு செம பாடல்தான் இன்று.
@Qatarseenu
Rex Arul said:
மிக்க நன்றி, சீனு. நல்லது 🙂
Muthiah (@muthiahrm) said:
பாடல் –
ச ரி க ச ரி க ச ரி ச ரி க ப க ரி ச ரி க
ச ரி க ச ரி க ச ரி ச ரி க ப க ரி ச ரி க
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு..
பாடியவர்கள் – பி. சுசீலா & உமா ரமணன்
படம் – கோவில்புறா
amas32 said:
எனக்கு இன்று இருக்கும் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை :-))))))
இசை துணுக்கைக் கேட்டவுடன் பாடலைக் கண்டுபிடித்துவிட்டேன். இங்கு க்விசில் பங்குபெறும் அனைவருக்கும் இது தினப்படி நிகழ்ச்சியாக இருக்கலாம். எனக்கு இது மாபெரும் மகிழ்ச்சித் தருணம். நன்றி ரெக்ஸ்!
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – கோவில் புறா படத்தில் இருந்து 🙂
Rex Arul said:
உங்களுடைய பயணம் சாதாரணமானது அல்ல. பிடியுங்கள் பாராட்டை. என்னால் எல்லாம் உங்க க்விஸில் பங்கேற்க முடியாது. ஒன்னுமே தெரியாது என்று சொன்ன நீங்கள், உங்கள் மதிப்பெண் விபரத்தை இடப்பக்கம் கொஞ்சம் பாருங்கள் 🙂 Kudos 🙂
@tekvijay said:
அமுதே தமிழே
கோவில் புறா
Rex Arul said:
இன்றைய பாடலுக்கு Twitterல் அதகளம் தான். ஒவ்வொருவருக்கும் இந்தப் பாட்டு எப்படி நிறைவையும் அமைதியையும் தந்து இருக்கிறது என்பதை உங்கள் வார்த்தைகளால் கேட்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.
எழுதுங்கள்…எழுதுங்கள்…அதையே காலத்துக்கும் அழியாமல் இருக்க வேண்டி, இங்கே பின்னூட்டமாக இட்டு விடுங்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இம்மாதிரி பாடல்கள் நம் #365RajaQuizல் வருவது, அதுவும் நல்ல ஒலித்தரத்தில் வருவது, ரசித்தும், ருசித்தும், அதைப் பற்றி கருத்துக்களை ஆழமாக பதிக்கவும் கண்டிப்பாக நமக்கும் நமக்கு பின் இங்கு, இந்தத் தளத்தைக் கடந்து போகும் பலருக்கும், இப்படி எல்லாம் கூட மக்கள் சிலாகித்தும், உருகியும், உரையாடிக்கொண்டு போனார்களா. அந்த அனுபவம் தான் எப்படி இருந்து இருக்கும்? என்று ஒரு ஆச்சரியக்குறியுடன் கடந்து செல்ல வழிவகுக்கும். 🙂
அதுவே, இந்த #365RajaQuiz போல பல நல்ல Projects உருவாக தூண்டுகோளாகவும் அமையலாம். இல்லையா? அதனால், உங்கள் கருத்துக்களை, இந்த இறுதி வாரத்தில், நிறையவே பதித்துவிட்டுச் செல்லுங்கள்.
மிக்க நன்றி.
என்றும் அன்புடன்,
— Rex Arul
Quiz-Master, #365RajaQuiz
dtwdy said:
Amuthey thamizhe – Kovil pura
ராஜா said:
கோயில் புறா படத்திலிருந்து அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே பாடல்.
நம்ம @nchokkan போட்ட ட்வீட் மூலமாதான் இந்தப் பாட்டு நமக்கு அறிமுகமாச்சு. கேட்டவுடனே ரொம்ப பிடிச்சுடுச்சு. இந்த ட்வீட் வந்த கொஞ்ச நாள்லயே, இந்தப் பாட்டு “நாலு வரி நோட்டு”லயும் ( http://4varinote.wordpress.com/2013/04/10/130/ ) வந்துச்சு.
ஆன்லைன்ல இருக்குறத விட உங்க ஆடியோ க்ளு பல மடங்கு தரமா (எப்பவும் போல) இருக்கு. க்விஸ் முடிஞ்சதும் முழுப்பாடலையும் இந்த தரத்துல எங்களுக்கு குடுத்தா, நாங்களும் நல்ல தரத்துல இந்தப் பாட்டை அடிக்கடி கேட்டுப்போம் ;).
@rajabalanm
Rex Arul said:
மிக்க நன்றி, ராஜபாலன் 🙂
srinivasan (@sathishvasan) said:
Amuthe thmizhe
Usharani M (@usharanims) said:
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே… – பி சுசீலா & உமா ரமணன் – கோவில் புறா
இந்த 365RajaQuiz ல் இன்று தான் முதல் முறையாக இசைத் துணுக்கை கேட்ட சில நொடிகளிலேயே கண்டுபிடித்தேன்.
Rex Arul said:
அருமை. மிக்க நன்றி 🙂
@appandai said:
அமுதே தமிழே
[μsic]மாபியா (@sicmafia) said:
Amudhe Thamizhe
M@ster indha paatukellam bathil poduvathu kadamayilum kadamai Raja Kadamai
Rex Arul said:
கண்டிப்பா. சீனத்து பட்டு மேனிக்கே விடை போட்டுட்டு இதுக்கு போடலைன்னா? #சிவகுமார்பாறைகள் விவிசி ;)))))
sundar (@Sundar140) said:
என்ன சொல்ல எதை விட …..காலத்தால் அழிக்க முடியாத இசைக் கோர்வை பற்றியா ? தமிழின் அழகை தமிழின் அழகான சொல்லாடலில் சொல்லிச் சென்ற பாடலாசிரியர் பற்றியா ? பாடலை அழகாகப் பாடியவர்கள் பற்றியா ? அடடா !! என்ன ஒரு பாட்டு
அப்ப்டி இல்லம்மா தம்பி எவ்வளவு அழகா பாடறான் பாரு என்று சொல்லிவிட்டு
தமிழே நாளும் நீ பாடு என்று பாடும் வரி அழகே அழகு தான்
\
கோவில் புறா படத்தில் அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே என்ற பாடல்
Rex Arul said:
அந்த இடம் தான் என் மகளுக்கு மிகவும் பிடித்த இடம். மிக்க நன்றி,சுந்தர் 🙂
ரிஷி(@i_vr) said:
#365RajaQuizன் இறுதி வாரத்தை “தமிழ்த்தாய்” வாழ்த்துடன் தொடங்கியிருக்கும் மாஸ்டருக்கு நன்றி முதலில்…இந்த வாரம் முழுக்க உணர்ச்சி குவியல்களின் பெட்டகமாக இருக்கும் என்பது உறுதி 🙂
“அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே…” சுசீலாம்மா & உமா ரமணன் குரல்களில் காலத்தால் அழியாத “கோயில் புறா” படப்பாடல்.
ரிஷி(@i_vr) said:
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் சேர நன்னாட்டிலிருந்து வந்த எனக்கு தேந்தமிழை அள்ளி அள்ளி பருக தந்த என் தமிழய்யாக்கள்தான் நினைவுக்கு வருவார்கள்..தமிழ் இலக்கணங்களின் நெளிவு சுளிவுகளை வாய்ப்பாடு போல மனனம் செய்ய விடாமல் புரியும்படி சொல்லிக்கொடுத்தார்கள்.
தமிழய்யாக்கள் மொழியை மட்டும் சொல்லித்தராமல் பாடல்களின் பின்புலத்தை கலாச்சாரத்தை பெருமைகளை மாண்புகளை எல்லாம் சொல்லி கொடுத்தார்கள். இன்றும் முடிந்தளவு பிழையில்லாமல் எழுத முயற்சி செய்து அவர்களுக்கு செலுத்தும் நன்றியாகவே கருதுகிறேன்.
இன்றும் சகாக்கள் @nchokkan & @elavasam அடிப்படைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கொண்டேயிருக்கிறார்கள், நாம் தாம் அதைப் பின்பற்றாமல் தப்பும் தவறுமான தமிழிலும் தங்கிலிஷிலும் எழுதி பேசிக் கொண்டிருக்கிறோம்.
“ஜனனி ஜனனி” கேட்டு உருகாதவர்கள் இருக்கமுடியாது (இறை நம்பிக்கையில்லாதவர்கள் கூட), அது போல் தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் கூட இப்பாடலை கேட்டு உருகாமல் இருக்க இயலாது.
தமிழிசைப் பற்றி உருகி எழுதிய புலமைப்பித்தனின் வரிகளைப்பற்றி என்ன எழுத…
“ஊன் மெழுகாய் உருகும் கரையும்.. அதில் உலகம் மறந்து போகும்”
“பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே… இசையிருந்தால் மரணமெது”
எத்துணை சத்தியமான வார்த்தைகள்!!
இந்த வார்த்தைகளை உறக்கத்தில் கூட ரசிக்க வைத்தது ராசாவின் இனிய வியத்தகு தமிழ் இசை.
+365 தமிழும் இசை(ஞானி)யும் இருந்தால் மரணம் ஏது?
ராசா… வாழ்க நீ எம்மான்!!
Rex Arul said:
சேர நாட்டில் இருந்து வந்தாலும், உங்களின் தமிழ் அப்பழுக்கற்று இருக்கிறது ரிஷி. பெருமையாக இருக்கிறது. பிடியுங்கள் நமது பாராட்டை. #inspired
ரிஷி(@i_vr) said:
இப்பாடலின் இசைத்துணுக்குகள் கேரளத்தில் புகழ் பெற்ற பாண்டி மேளத்தின் இசைக்கோர்வையை நினைவுப்படுத்தும்..குறிப்பாக நாதஸ்வரங்கள் இணைந்து மயக்கும் இடையிசை
கேட்டு கொண்டே இருக்கலாம்… 🙂
ரிஷி(@i_vr) said:
15:37லிருந்து கேட்டுப்பாருங்கள்..
Rex Arul said:
அருமையாக இருக்கிறது, ரிஷி. தரவுக்கு மிக்க நன்றி. நீங்கள் சுட்டின இடத்துக்கு கொஞ்சம் முன்னாடி இருந்தே கேட்டேன். எனக்கு உங்களின் பாண்டி மேளம் பிடிக்கும். கோவையிலும் திருச்சூரிலும் கேட்டு இருக்கிறேன். அய்யப்பன் பூஜை காலத்திலும் போடுவார்களே. அது தானே?
ரிஷி(@i_vr) said:
அதுதன்னே! 😉 என்டே ”ரிஷி மூலம்” திருச்சூராக்கும்… 🙂
Rex Arul said:
அப்படியா? அப்படிப்போடு 🙂
Chilled Beers (@chilledbeers) said:
சே…இவ்ளோ நேரம் உள்ளே ஓடிட்டு இருந்த பாட்டு இப்ப வாயிலேயே…எவ்ளோ சிம்பிளான க்ளூ..அதை விட்டுப்புட்டு… ;))) ராஜா ராஜாதான்…இதையெல்லாம் இளம் இசையமைப்பாளர்கள் கூர்ந்து-வியந்து கேட்பார்களா? கேட்டால் தேவைப்படும் உழைப்பின் அளவு தெரியும் என்று நினைக்கிறேன்… #அமுதே தமிழே எனதுயிரே… – எனதுயிரே என்பது ராஜாவேதான்…!
Rex Arul said:
ஹஹஹா. சரியோ சரி 🙂
Isai said:
@isai_ விழிகசியும் உயிருருகும் பித்தனின் புலமையில் வித்தகனின் விளையாட்டில். தமிழுள்ளவும் நிலைத்திருக்கும் இப்பாடல் #359 அமுதே தமிழே
Rex Arul said:
மிகச் சரி 🙂
Eswar (@w0ven) said:
‘அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ – கோயில் புறா
Rex Arul said:
சரியான விடை.
Vijay said:
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – கோவில் புறா
அடேங்கப்பா! Another amazing song with amazing write-up. From every word of your writing I can feel how this song has intruded you and sat at every deepest node of your cell unable to come out even if you wish to. Same way, இந்த பாட்டெல்லாம் உடலுள் உயிருள் கரைந்து போன ஒன்று. என்னையும் இந்த பாடல்களையும் பிரித்து எடுக்க முடியாது.
Rex, But for the first time I hearing those subtle bass chords which you highlighted. That was a stunner! Thanks a lot for bringing that forward. Huge applause to you!. Maestro keeps on throwing surprises like this. No one would have even conceived such a thought to bring in bass guitar for this semi-classical number.
As you highlighted the interludes are top class. Many songs (I mean the melody and singing) can bring you tears, but the ludes bringing tears? A very very rare phenomenon. Maestro even excels there. Crystal clear encoding, can appreciate the beauty in the ludes more. Again a big thanks for the hard-work. The result is extra-ordinary.
தமிழுக்கு பெருமை சேர்க்கும் பாடல். Song in Rasika Ranjani raagam, a very rare raagam. I haven’t heard anyone else composed a film song in this raagam. I am not sure who that male voice is. Is it T V Gopalakrishnan? Please confirm.
Pulamaipithan has written a special line for Maestro which in turn addresses us. What else do we need?
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
Even though every bit of song is so special, where Maestro stands tall is in this line. Student makes a mistake at this line. தமிழே நாளும் நீ பாடு and the teacher corrects him. Even that mistake is not a mistake until he corrects it as it sits to the sandham so effectively that it is another way to sing that line. What a beautiful thought! Maestro shows his genius there to show how to vary the words to fit the same sandham. :noteworthy: As they say தப்பக்கூட கரெக்டா பண்ணனும் so that it nullifies the mistake.
Here comes the killer of the tune and words in charanam
தேனூறும் தேவாரம் இசை பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனி இசையே தரணியிலே முதல் இசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் (I literally break-down hearing this line!)
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
You can observe how each line increases in its length from the previous lines, until it hits the last line. When you hear the first line in charanam, imagine how the second line would be. Same way when listening to the second line imagine how the third line would be. Maestro defeats all our imagination in these three lines. These three lines absolutely has no connection between them. That second line cannot be the continuation to the first line Same way the third line cannot be the continuation to the third line how hard we try to put these three together. But Maestro put those three lines together with enormous ease. I still scratch my head how this is even possible. This is like trying to mix water, oil and mercury. I have never heard such a composition at all. The melody construction required a daring composer like ILaiyaraaja, who believes that he can join these lines without difficulty. I still get goosebumps all over when I write this.
If this is not over, see how he connects to pallavi as the third line he take way higher unable to connect to pallavi from there. He makes a trick by sneaking in ‘பூங்குயிலே என்னோடு’ to connect to anu-pallavi தமிழே நாளும் நீ பாடு and connects to pallavi. Like a backdoor entry. LOL Masterclass!
A very rare composition, composed in a rare raagm, the melody construction is something beyond anyone’s reach, the divine interludes (with nadhaswaram, flute, santoor, tabla and that bass guitar holycow!) starting from nowhere but how it progresses, converses to connect to charanams is all something we don’t hear any often, nowadays not any more. No mortal can do this, as this is தேவ கானம்!
Rex Arul said:
Thank you very much, Vijay. As you have rightly observed, I really wanted to bring out those bass chords and the santoor’s tintinnabulation ringing noise as much as possible. It can be made possible, only if the noise is removed to the maximum. I am glad it came out well. After 365/365, please do continue to propagate the idea that even old period songs have quite a bit of nuances, which when heard with proper sound-engineered tracks, can really help with the overall experience.
Thanks for your detailed comments. As always, appreciate it 🙂
ஸ்ரீ (@sriivl) said:
அமுதே தமிழே 🙂 – படம் கோவில் புறா
plum said:
easy clue in text amudhethamizhe from kovilpura.
mavurundai said:
கோயில் புறா – அமுதே தமிழே
Prem Anandh P (@anandhame) said:
பாடல்: அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
படம்: கோவில் புறா
தேவா.. said:
Hi,
This is one of THE BEST grabber of raja. The Song which used to play many time almost in the past 6 years. before that also I knew about this song but somehow I had melted with this just 6 years back and I dont know the reason..I was listening this one night and repeatedly listening for the whole night…
Amudhey Tamizhey… form Koil Pura. I predicted the song from title but hold my curiosity and read complete post then listened the clip too..to understand your feel about this song.
Rex Arul said:
Thanks a lot, Deva 🙂
VenkateswaranGanesan (@_Drunkenmunk) said:
Oh what a song! Amudhe Tamizhe Azhagiya Mozhiye from Koil Pura.
Rex Arul said:
Yes 🙂
கோபிநாத் said:
இசை தெய்வமே……!
அமுதே…தமிழே…அழகிய மொழியே எனதுயிரே…கோவில் புறா
இந்த பாடல் எல்லாம் என்ன சொல்றதுன்னே தெரியல….அம்புட்டு பிடிக்கும்..
இதே போல ஒரு பாடல் ஸ்ரீராகவேந்திரா படத்தில் உள்ளது…ஸ்ரீ ராமாநாமம் தொடங்கும் பாடலும் இதே சாயல் உண்டு ;))
Rex Arul said:
கலக்கீட்டீங்க தல. மிக்க நன்றி.
Sholavandan (@Naanillai) said:
Amudhae tamilae from Koil Pura.
என்ன ஒரு அருமையான பாடல். இந்த படத்தில் எல்லா பாடல்களும் அற்புதமான பாடல்கள் இதை ராஜா படங்களின் அனைத்திற்கும் பொருந்தும் என்றாலும் இதை சொல்லவே வேண்டி இருக்கிறது. ராஜாவின் பாடல்கள் எப்போதும் கதையையும் கதாபத்திரங்களை ஒட்டிய இருப்பதால் உணர்வோடு ஒன்றிய ஜீவன்களுக்கு சட்டென்று ஒட்டி கொள்கிறது.
தமிழும் தமிழ் இசையும் அருமையாக அரங்கேறும் பாடல்களில் இதுவும் ஒன்று
Rex Arul said:
ஆமாம், ஜெகா. மிக்க நன்றி :)))
Arun Rajendran said:
பாடல்: அமுதே தமிழே
படம்: கோயில் புறா
அடடா… அருமையான பாடல்… அநேகமா இந்த வாரம் முழுக்க இந்த மாதிரி முத்துகள தான் கோர்க்கப் போறீங்க… தலைப்ப படிச்சப்ப இந்தப் பாட்டு தானானு தெளிவில்லாம தான் இருந்தேன்..விவரணங்களப் படிக்காம் ஒலித் துணுக்க கேட்க ஆரம்பிச்சதும் பதில் போட்டாச்சு… இனிமே மெதுவா உங்க பதிவ படிக்கணும்…
I have to confess something here.. when i started to hear God’s “songs”, the first thing i was looking for is lyrics… that was the impact of KVM /TKR-MSV Era..anything that attracted me lyrically were good songs to me…but slowly i was drawn into the musical aspect of the song…impact of God’s music… 🙂 the priority has shifted more towards musical aspect than the lyrical part in spite not knowing what musical form it is or what raaga the song is based upon…i can not stand sub-par lyrical quality but able to heed only because of our God’s music..
Given this, if i get to hear these songs, which have wonderful lyrics which are in a competition with the musical part, it is a feast…
இந்தப் பாட்டெல்லாம் எத்தனைத் தடவ கேட்டிருப்பேன்.. எனக்கே தெரியாது…இசையறிவோ, இராக / தாள ஞானமோ இல்லமயே நெக்குருகி இரசித்ததுண்டு…”என்னமோ இருக்குயா, இந்தப் பாட்டுல”..அப்படினே இரசிக்கறது..தப்பு தப்பு..இரசிக்க வைகறார் இசைக்கடவுள்….
brilliant selection Master…so jus proving your below tweet…
“சில பாடல்கள், @rozavasanth போன்ற அன்பர்களின் எண்ண அலைகளை சுழலவிடும் 🙂 ”
Thank you so much…
Rex Arul said:
இது வரைக்கும் எப்படி இருக்கு, அருண். அதே மாதிரி தான் முடிவு வரைக்கும் creme de la creme ஆ வரும். முதலில் இருந்தே, “அய்யோ, கடினமா தராதீங்க… 70-80லாம் வேணாம்”னு அதிகமா ஒலி எழும்பாவிட்டிருந்தால், இன்னும் நிறைய கொடுத்திருக்கலாம். But, no regrets. Any quiz-master, must be willing to negotiate with himself, based on what the audience’s perception is. Otherwise, nobody will have the flair to come along on the journey. So, I have absolutely no regrets. In fact, that willingness to assess the audience’s pulse and make suitable adjustments, throughout — every single day — is what has kept the engagement level pretty high. His music is all it is. At the same time, an unimaginative perfunctory selection of clues can ruin that. Glad, that never happened here 🙂
Anonymous said:
”ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்”
கோவில் புறா – அமுதே.. தமிழே.. அழகிய மொழியே.. எனதுயிரே..
@manivel
Rex Arul said:
:))
@sagittarian82 said:
அமுதே தமிழே – கோவில் புறா. வாவ் மாஸ்டர், இன்று ட்விட்டரில் என்னடா என்றும் இல்லாத அளவு ஒரே புகழாரமாக இருக்கிறதே என்று சற்று மலைத்துத்தான் போனேன், க்ளூவை கேட்டதும் தான் தெரிகிறது. இந்தப் பாடல் யாருக்குத்தான் பிடிக்காது.
நேற்று தான் உங்கள் உச்சம் என்று நினைத்திருந்தேன், அதை இன்றே முறியடித்து விட்டீர்கள். இன்னும் ஆறு நாட்களுக்கு தலை வாழை விருந்து தான் போலையே. பின்னறீங்க, சொல்ல வார்த்தை இல்லை
இந்தப் பாடலின் ராஜா வெர்சன் 😉
Rex Arul said:
வாழை இலையே தாங்க….வேற என்ன 🙂 மிக்க நன்றி :))
Vasukrishnan said:
Amuthae tamilae azhagiyae mozhiyae enadhuyire from kovilpura
Rex Arul said:
சரியான விடை 🙂
GiRa ஜிரா said:
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
என்னவொரு தமிழ்த்தாய் வாழ்த்து!
புலவர் புலமைப்பித்தன் தேசியவிருது வாங்கியவர்களை விட மிக இயல்பான உயர்ந்த கவிஞர். தன்னைத்தானே விற்பனை செய்துகொள்ளத் தெரியாத நிறைகுடம்.
தமிழ்த்தாய் வாழ்த்துகள் திரையில் இடம் பெற்றால் அந்தப் பாடல்கள் இசையரசியிடம் போவதற்கு என்ன காரணம் என்றே யோசிக்க வேண்டாம்.
தமிழுக்கும் அமுதென்று பேர்
சங்கே முழங்கு சங்கே முழங்கு
என்று மெல்லிசை மன்னர் அவரது ஆஸ்தானப் பாடகியைப் பாட வைத்ததில் வியப்பில்லை. அதை இசைஞானியும் தொடர்ந்ததுதான் பெருமை.
இதையெல்லாம் விட தமிழகத்தின் ஒவ்வொரு பள்ளியிலும் நாள்தோறும் பாடப்படும் “நீராரும் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்தை மெல்லிசை மன்னர் இசையில் சுசீலாம்மா டிஎம்எஸ் அவர்களோடு இணைந்து பாடிய பெருமை வேறு யாருக்கும் இனிமேல் கிடைக்கவே முடியாத பெரும் பேறாகும்.
கோயில் என்றால் வேள்விகள் நடக்கும். கோயில்புறா படத்தில் ராஜா செய்தது இசைவேள்வி. ஏ.பி.நாகராஜன் போன்ற இயக்குனர்களோடு ராஜா இணைந்து பணிபுரியும் வாய்ப்பு உருவாகியிருந்தார் நாம் இயலும் இசையும் முறையாக இணைந்த மாபெரும் இசைக்கடல்களில் மூழ்கியிருக்கலாம். ம்ம்ம். திரைக்கதையின் தொய்வு கோயில்புறாவை வீழ்த்திவிட்டது.
Rex Arul said:
அருமையான பின்னூட்டம் ஜிரா. மிக்க நன்றி. ”வேதம் நீ, இனிய நாதம் நீ”யும் செம பாட்டு. எல்லா பாட்டும் முத்து தான் :))
ரிஷி(@i_vr) said:
கான கந்தர்வனின் trademark ”கர்னாடக” பாடல்…அற்புதம் என்பது சின்ன வார்த்தை இப்பாடலைப் (வேதம் நீ) பற்றி சொல்ல..
@r_inba said:
சுசீலாவின் அருமையான “தம்பி” குரலில் “அமுதே தமிழே அழகிய மொழியே” (கோவில் புறா).
உமா ரமணன் பெண் குரல் 🙂
ஆமா, அந்த “தம்பி எவ்வளவு அழகா / நல்லா”ன்னு சொல்றவர் பேர் என்ன? ரொம்ப நாளாத் தேடிக்கிட்டிருக்கேன்
😳
Rex Arul said:
டி.கோபாலகிருஷ்ணன் அல்லவா அது? :)))
Ajay (@vicks__) said:
Amudhe Thamizhe – Anyone who’s heard this song even once will be able to identify this – avalo impact.. thanks!
Rex Arul said:
That is very true, Ajay. Thanks 🙂
Rahini (@R_Rahini) said:
Brilliant song sir for today and your efforts in encoding completely show! It’s Amudhae Thamizhae from the film Kovil Pura 🙂
Rex Arul said:
Thanks a lot, Rahini. I am glad you enjoyed it 🙂