Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

புது வாரம் மலரும் இத்தருணத்தில், #365RajaQuizன் 365 நாள் பயணத்தில், இன்று இறுதி வாரமும் தொடங்குகிறது. இது வரை #365RajaQuizன் ஆதரவாளர்களாக வலம் வந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன். இன்னொரு வாரம் புலர்ந்துவிட்டது என்று இனிமேல் இந்த #365RajaQuizன் தளத்தில் இருந்து வாழ்த்த முடியாவிட்டாலும், என்றும் மனதளவில் வாழ்த்திக்கொண்டு தான் இருப்பேன். 🙂 தமிழும் இசைஞானியின் இசையும் உள்ள வரையில் முடிவு என்பது ஏது.சரி தானே?

Pulavar Pulamaipithan

இன்று வரும் பாடலும், 358/365 போல என் வாழ்வோடு ஒன்றிவிட்ட பாடல். It is deeply and intensely personal. அதனால், இதனை நேற்றைய பாடலை விடவும் சிரத்தை எடுத்துக்கொண்டு encode செய்து முடித்தேன். நீங்கள் இந்தப் பாடலை YouTubeலோ, இணையதளத்தில் வேறு இடங்களில் கேட்டிருந்தாலும், இந்தப் பாடலின் கொடுமையான இரைச்சலில் மூழ்கிப் போன அருமையான சந்த ஒலிகளை ரசிக்கமுடியாமல் போய் இருக்கலாம் 😦 . அதனால் இதை encode செய்ய இன்னும் challengingஆக இருந்தது. என்னுடைய இந்தத் துணுக்கில், இந்த இடையிசையில் வரும் சந்தூர் டிங்டிங்டிங்ங்ங்ங்ங்ங் என்று ஆழமாக ஒலிப்பதைக் கவனிக்கலாம். அதே போல, தபேலா மற்றும் மத்தளம் வரும் இடங்களில் டும்டும்டும்டும் (~ 13 to 30 second marker) தெளிவாக கேட்கலாம். அதே போல நாயனத்தையும், நாகஸ்வரத்தையும் முன்னிலைப்படுத்தி வரும் பாடலில் இவர் எங்கே bass guitar எல்லாம் உபயோகித்திருக்கப்போகிறார் என்று நினைப்பவர்கள், சற்றே நிற்க. Encoding செய்துள்ள இந்த ஒலிப்பேழையைக் கேளுங்கள்……என்ன…bass-guitar clearஆ இருக்கா? இப்ப போய் வேறு எங்க வேணும்னாலும் கேளுங்க.

My point? Do NOT avoid old, ‘period’ songs! 🙂 With additional effort and careful noise-removal, such songs can give an out-of-the-world experience to a modern, headphones generation! That is the simple message, I want to submit to the audience, in this final week of our 365-day journey! 🙂

இந்தப் பாடலை என் மகளுக்கு 2 முதல் 3 வயது வரை தாலாட்டு பாடலாக ஒவ்வொரு இரவும் இசைத்ததுக் காட்டியது உண்டு. என்னுடைய iPhoneல் இருந்த ஒரே பாடல், அப்போது, இது மட்டும் தான். இதில் நகைச்சுவையான விசயம் என்னவென்றால், என்னை அறியாமல் இரண்டாம் சரணம் வரும்போதே நான் உறங்கிவிடுவேன். மகளோ, அப்பா…அப்பா..once more என்பாள். இந்தப் பாடலை நான் சிறுவயதில் நிறைய ரசித்துக் கேட்டது உண்டு.

அகில இந்திய வானொலி, கோயம்புத்தூர் வானொலி நிலையத்தில் அடிக்கடி இதை ஒலிபரப்புவார்கள். நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி நாட்களில் எல்லாம், இதை வெகுவாக ரசித்து, உள்வாங்கி internalize செய்தே விட்டேன். இந்தப் பாடலைக் கேட்டால் பிணத்துக்கு கூட தமிழ் மீது ஒரு பற்று வரும்! பாடல் வரிகளையும், இசையையும் பிரிக்க முடியாத organic கலவையான இந்தப் பாடலுக்கு அம்மாதிரியான inspirational power உண்டு 🙂 அந்தக் காரணத்தினால், எப்போதுமே இந்தப் பாடல் எனக்கு கொள்ளைப் பிரியம்.

அதை ஒரு நாள் தனியாக நான் கேட்டுக்கொண்டிருக்க மகளுக்கும் இந்தப் பாட்டு பிடித்துவிட்டது. தனிக்காட்டு ராஜாவில் I want அக்கா song என்று எப்படி ராசாவே உன்னத்தான் எண்ணித்தான் பாடலை கேட்டு ரசிப்பாளோ, இந்தப் பாட்டை, I want தம்பி song (பாடலில் ஒரு இடத்தில் “தம்பி” என்று ஒரு சொல் வரும் :)) என்று கேட்டு ரசிப்பாள். அதுவே தாலாட்டு பாடலாக மாற, அவளுக்குள்ளும் இந்தப் பாடல் ஒருவித சுகத்தையும், ஆறுதலையும் தந்து இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். என்ன விந்தை இது என்று. அதுவும், ஒரு முறை இந்தப் பாடல் பாடி முடிக்கும் முன்பே என்னையும் அறியாமல் அது என்னை உறங்க வைத்துவிடும். என் மகளோ, இந்தப் பாட்டை repeatல் கேட்டே ஆகவேண்டும் என்று பல முறை பாட வைப்பாள். அப்போது தான் முதன்முறையாக iPhoneல் எப்படி அந்த loop modeல் பாட வைப்பது என்று கூட கற்றுக்கொண்டேன். (I do not listen to songs on mobile and PC devices, normally :))

Music may be in the genes. Does musical-appreciation also flow through the genes? That is what my daughter made me realize, at several levels. 6 years after, when I played the original CD that was recorded for her as a 3-month old baby was Kuyil Paatu (Ilaiyaraaja version). She immediately latched on to it. She did NOT want to play any other song. When I played the joyful version of Swarnalatha, she asked me to just keep playing IR’s version in repeat mode. இம்மாதிரி பல அனுபவங்கள். சுகமானதும் கூட.

அப்படி என் வாழ்வில் ஒரு தகப்பன் – மகள் பாடல் என்ற அந்தஸ்தைப் பெற்ற பாடல் தான் இது, albeit, it has nothing to do with filial theme 🙂

Today’s song is pedagogical in nature!

பாடலில் குருவாக ஒருவர் பாட, சிஷ்யர்(or சிஷ்யை) பாடிக்கொண்டே வருவது போல முழு பாடலும் போகும். இதில் நாகஸ்வரம் வருகிறதே….இது ஏதோ, போட்டு ஆகவேண்டும் என்று இசைஞானி போடவில்லை. படத்தைப் பார்த்தோருக்கு இது ஏன் என்று நன்கு விளங்கும்! ஒவ்வொரு இசைக்கருவியையும் அளந்து அளந்து போட்டிருப்பார். ராகமும், இசையும்,மெலடியும், தாளமும், இந்தப் பாடலை evergreen classicஆக ஆக்கி இருக்கிறது.

நிற்க.

இசை எந்த அளவுக்கு ஒரு ரசிகனை கட்டி இழுத்துப்போடுமோ, அதே அளவு, அருமையான பாடல் வரிகளைக் கொண்ட பாடல்கள் பாடலாசிரியர்களை முன் கொண்டு வந்து நிறுத்திவிடும்.

இந்தப் பாடலை எழுதியவர், சந்தக் கவி என்று சொந்தம் கொண்டாடும் அளவுக்கு சந்தத்துக்கு சிறப்பாக எழுதக் கூடிய புலவர் புலமைப்பித்தன்.

இந்தப் பாடலைக் கேட்டால் தமிழ் மொழி மீது பீடும், பெருமையும், உவகையும், காதலும், அன்பும், பற்றும், ஏன் வெறியே கூட வந்தே விடும். தமிழ் இசையின் பெருமையையும், தமிழின் அருமையையும், இரண்டே சரணத்தில் அணுகுண்டு அளவுக்கு ஆற்றலை ஒளித்து வைத்தாற் போல எழுதி தள்ளிவிட்டு போய் இருப்பார் புலவர் புலமைப்பித்தன். அதற்கு ஏற்றவாறு இசைஞானியின் 2nd half of each Saranamஐ கவனியுங்கள்…உச்ச ஸ்தாதிக்கு இழுத்துக்கொண்டு போக போக, அதற்கு பதிலடியாக புலமைப்பித்தனின் strong words of love for Tamil அங்கு வெளிப்படும்.

சுருக்கமாக சொன்னால், பாடலைக் கேட்டு உவகை அடையலாம். மகிழலாம். பெருமைப் படலாம். ஆனால் நான் குறியீடு செய்துள்ள இடத்தில் வினவியது போல, இரண்டு இடையிசையின் இறுதியில் வரும் அந்த சொற்ப வினாடிகளில், புல்லாங்குழலும் சந்தூரும் இசைக்கும் அந்தத் தருணங்களில் உங்களையும் அறியாமல் கண்கள் பனிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் பார்ப்போம். 🙂

அது தான் இந்தப் பாட்டின் சிறப்பே.

அது தான் இந்தப் பாட்டின் சந்தத்துக்கும், இசையின் மெலடிக்கும் உள்ள சிறப்பே.

A song like this, that is palatable to a child, clearly vouches for its pristine purity.

Soulful!

தமிழும் இசை(ஞானி)யும் இருந்தால் மரணம் ஏது?

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Very extensively noise-removed, as the original sound for this track is very limited in its quality. Several passes at multiple locations had to be done before noise-gate could be applied. Audio quality on YT and other sites are poor for this entire album. Please let me know, if a better source exists.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Nathaswaram legends M.P.N Sethuraman and M.P.N Ponnuswamy played the Nadhaswaram for this song, while Pulavar Pulamaipithan penned all the lyrics for this movie!

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Amudhe Thamizhe (அமுதே தமிழே) from Koyil Puraa (கோயில் புறா) (1981)