Tags
@AishwaryaGovindarajan, @anandhame, @appandai, @baraneee, @dtwdy, @ezharai, @gopi37, @hakkeemCBE, @I_VR, @kaarthikarul, @maestrosworld, @mavurundai, @muthiahrm, @naanillai, @nchokkan, @npodiyan, @prasannaR_, @raaga_suresh, @rajabalanm, @rmdeva, @r_inba, @sagittarian82, @seevin, @sicmafia, @soberanddrunk, @StallionStorms, @tcsprasan, @tekvijay, @usharanims, @vrsaran
நன்றி.
நேற்றைய புதிரில் வந்த ஒரு புதுமையைத் தொடர்ந்து, இன்றைய பாடலிலும் அந்தப் புதுமை தொடர்கிறது. நாளையும், அவ்வித புதுமை தொடர்ந்து hat-trickஉடன் முடியும். 🙂
ஆம், இன்றைய பாடலின் பாடலாசிரியரும் இசைஞானி இளையராஜா தான்.
இன்றையப் பாடலைப் போல ஒரு பாடலை எவரேனும் நிகழ்காலத்தில் இசைக்க தயாரா என்று ஒவ்வொரு முறையும், இந்தப் பாடலைக் கேட்கும்போது, என்னையும் மீறி ஒரு வினா எழும். முதலில் துணுக்கைக் கேட்டுவிடுகின்றீர்களா?
Be prepared for the roller-coaster ride. This piece will be nothing close to the serene opening it has. Wait until the traditional rhythms take you out of this world. Please set high volume 🙂
இதில் என்ன புதுமை என்று கேட்பவர்கள், சற்று நிதானமாக பின்வருவனவற்றைப் பார்த்துவிட்டு பின்னர் சொல்லுங்கள், இது rara avis அல்லது sui generis என்று வழங்கக்கூடிய வகையில் உள்ள பாடலா இல்லையா என்று.
- இந்தப் பாடல் மிக, மிக நீளமானப் பாடல். சற்றேரக் குறைய 10 நிமிடங்களைத் தொடும் ஒரே பாடல்!
- இந்தப் பாடல் பல சுழற்சிகளைக் கொண்டது. வண்டியின் சக்கரம் போல, பல நிலைகளையும், உணர்ச்சிகளையும் கடந்து, மாறி மாறி, பாட்டு பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கும். 🙂
- இந்தப் பாடலை இசைப்பது எவ்வளவு கடினமோ, அதை விடக் கடினம், இந்தப் பாடலுக்கு பாடல் வரிகளை எழுதுவது.
- ஏனென்றால், இந்த முழுப்பாடலில், படத்தின் முழுக்கதையைச் சொல்லிவிட வேண்டும்.
- பாடல் ஒரு வாழ்க்கை வரலாறையே தொகுத்து வழங்குவதால், பாடலில் வரும் மெட்டும், தாளமும், இசையும் transformationsஐ சிதைக்காமல் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு கூடு விட்டு கூடு தாண்டி segue ஆக வேண்டும். உதாரணத்திற்கு, இங்கு ஒரு சோக நிகழ்வில் இருந்து அப்படியே மாங்கல்ய இசைக்கு தாவும் லாவகத்தைப் பாருங்கள்…அதாவது கேளுங்கள்.
- என்ன? பார்த்தீர்களா? சோகம்..அதைத் தொடருந்து பயங்கர சீற்றம்…அந்த சீற்றத்தின் முடிவில் பெரும் சோகம் என்று ஆரம்பித்த ஷெனாய், மங்கல ஷெனாயாக ஒரு நொடியில் மாறி பயணித்துக்கொண்டே இருக்கிறது! எப்படி, பாருங்கள். இப்படி தான் பாடல் முழுக்க வரும்.
அகில இந்திய வானொலி, கோயமுத்தூரில் ஒரு காலத்தில் உடுக்கடிப் பாட்டாக வெளிவந்த வரலாறு சார்ந்த பழங்கதையை ஒட்டி புனையப்பட்ட ஒரு சரித்திரக் கற்பனைக் (historical-fiction) கதையின் திரைவடிவத்தில் வந்த பாடல் தான் இது. அதனால், பாடல் முழுக்க வெவ்வேறு உணர்ச்சிகளை நிரப்பி இருப்பார் இசைஞானி.
பிறப்பு முதல் மனிதனின் இறப்பு வரையிலான பல்வேறு கட்டங்களுக்கு இசைஞானி இளையராஜா இசைத்துள்ள பாடல்கள் பல ஆயிரம் உண்டு என்று சிலாகிக்கும் நம்மில் பலரும், இந்த ஒருப் பாடலிலேயே அத்துணைக் கட்டங்களையும் காட்டிவிடும் இசைஞானியின் சாமர்த்தியத்தை மெச்சிப் பேசாமல் இருக்க முடியுமா? அந்த செல்லாண்டி அம்மனுக்கே அடுக்காமல் போய்விடும், இல்லையா? 😉 அதனால், இந்தப் பாடலைப் பற்றி சிலாகித்து, கீச்சவும், பின்னூட்டம் இடவும் தயாராகிவிட்டீர்கள் என்று நான் நம்பிக்கையுடன் இதை முடிக்கலாமா? Please note, this is NOT an ordinary song. This is what I called earlier: sui generis 🙂
Also, can you do me a small favor? Can you briefly say, in one word or sentence as to what #365RajaQuiz means to you?
Thanks 🙂
Have a nice day.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Please listen to the TWO tracks. 2nd track is the lifeline-clue.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.Musical Clue is the lifeline clue:
Answer: Annanmaar Kathaya (அண்ணன்மார் கதைய சொல்லப்போறேன்) from Ponnar Shankar (பொன்னர் சங்கர்) (2011)
அண்ணன்மாரு கதையை சொல்லப்போறேன் from பொன்னர் சங்கர்
பாடல் ” அண்ணன்மாரு கதைய சொல்லப்போறேன் அண்ணன் தம்பிமாரே “. படம் பொன்னர் சங்கர் (2011). மது பாலகிருஷ்ணன், ஹேமாம்பிகா, அனிதா மற்றும் கோரஸ் குழுவினர் பாடிய பாடல் !
பாடல் – ஏ தன்னே தன்னே தானே தன்னே தானே தன்னே தானே
ஏ தன்னே தன்னே தானே தன்னே தானே தன்னே தானே
பூஞ்சரங்க சரம் சரமா மஞ்சளும் மாவிலையோட
ஏ பொன்னரு சங்கரு பூசைக்காக பொன்னாளில் ஒன்னு கூட
ஏ தன்னே தன்னே தானே தன்னே தானே தன்னே தானே
ஏ தன்னே தன்னே தானே தன்னே தானே தன்னே தானே
ஏ காஞ்ச மண்ணில் பேஞ்ச மழையில் சாஞ்ச கருக அறுத்து
ஏ வாங்கடியோ பொண்டுகளா பொங்க வைச்சு படைப்போம்…
அன்னமாரு கதைய சொல்லப்போறேன் அண்ணன் தம்பி மாரே
சொல்லக் கேட்டு புண்ணியம் வந்து சேரும் சொல்லுறத கேளேன்…
கட்டிவிட்டு சொன்ன கட்டு கதையும் இல்ல
நம்ம மண்ணில் நடந்தது சத்தியம் பொய்யும் இல்ல
நெஞ்சு நிமிந்து நில்லு அன்னம்மாரே கும்பிட்டு கூடி நில்லு…
பாடியவர்கள் – மது பலகிருஷ்ணன், ஹேமாம்பிகா & அனிதா
படம் – பொன்னர் சங்கர்
இந்த RajaQuiz ன் சுமார் 250 நாட்கள் பயணத்தில் பல அற்புதமான நாட்கள் அவற்றில் இன்றும் ஒரு பொன்னாள்!
தொடர்ந்து 200வது சரியான விடை இன்று!
Congratulations, @muthiahrm. That is a superb feat! Awesome 🙂
Annanmaar Katharine from ponnar Sankar.amazing song and I was watching moving for this song but was not there in the movie but te relevant scenes were there.
May be director faced difficulties to bring this in visual. 🙂
One of the best album of iron in recent times but did not get Suharto opening Sue to other factors
Yes, Deva. This is one of the best albums of all times and yet, I am not sure, why not many seemed to be aware of it.
“convent boy..umakku kalvettu vechuduvOm”-nu nEthu solRachavE innikku Appu edhirpArthEn, oru Audio clue-va LL cluevA vechu adhai confirm paNNttInga 😦
Anyway, avLO sulabamA vitturuvOmA? Going by tweets of @vrsaran @nchokkan etc, that Malaysia’s voice is needed rather than the weak voice of this song, and that a superb album wasted plus your description of life history in the song, it is easy to guess that it is most likely the song from Devadai – andangidugidukka…sung by some natuppura paattu researching professor types.
sellANdi amman reference probe paNNA therinjudum 🙂
Yes :))
Annamaar Kathai
Ponnar Sankar
@tekvijay
அண்ணன்மார் கதை – பொன்னர் சங்கர்.
அற்புதமான அனால் இந்த இணைய காலத்திலேயே அதிகம் கண்டுகொள்ளப்படாத ஆல்பம். எனக்கு டுவிட்டரில் நண்பர்கள் பகிர்ந்திராவிட்டால் இப்பேர்பட்ட முத்துக்களை இன்றுதான் தெரிந்துகொண்டிருப்பேன். மிக்க நன்றி அண்ணே
Thanks a lot, @ezharai 🙂
Annanmar Kathai – Ponnar Shankar
‘annanmaar kadhai’ from ‘Ponnar Shankar’
பாடல்: அண்ணன்மாரு கதைய சொல்லப்போறேன்
படம்: பொன்னர் சங்கர்
இது எப்படிப்பட்ட பாடல்னு கேட்டீங்க, ஒரே வரியில்தான் பதில் சொல்லணும்.
Only mottai possible.
பிரசாத் ஸ்டுடியோல அதிகபட்சமா பத்து அல்லது பதினைந்து நிமிசத்துல போட்ட இந்தப் பாட்டெல்லாம் எந்த வெளிநாட்டுக்குப் போனாலும், cruise கப்பலில் போய் ட்யூன் போட்டாலும், ஹி ஹி ஆயுசுக்கும் வரவே வராது 😉
இந்த ‘பொன்னர் சங்கர்’ இன்னொரு underrated album. எல்லாமே பிரமாதமான பாடல்கள்.
கலைஞர் எழுதிய நாவலை பல காலமா ரொம்பப் பேர் படமா எடுக்குறேன்னு கிளம்பி சரிப்படாமல் கடைசியா தியாகராஜன் ஒருவழியா அவர் பையன் பிரசாந்துக்கு ஒரு பிரேக் வேணும்னு எடுத்தார்.
கொங்குநாட்டுக் கதைக்கு வடஇந்தியக் கதாநாயகிகள், ஏதோ ஜோதா அக்பர் ரேஞ்சுக்கு காஸ்ட்யூம், செட் என்று கொஞ்சம் கூட ஒட்டாமல் படத்தை எடுத்தார்.
#365RajaQuiz பத்தி சுருக்கமாகச் சொல்லச் சொல்றீங்க.
எத்தனையோ பாடல்களின் அறிமுகம், பல நட்புகளின் தொடக்கம், limitless fun என்று இந்த ஒரு வருடமும் மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே நிரம்பி வழியுது.
ஒரே வரியில் சொல்லணும்னா, என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை 🙂
That sums it up, @prasannar_ 🙂 Agreed.
LOL. Brilliant sarcasm, buddy.
Unfortunately, I haven’t seen this movie yet.
Wow!!! Thanks a lot, @prasannar_
I am so glad you feel it that way. Salute 🙂
Ananmar kathai – Ponnar Sankar
Annanmaar kadhai – Ponnar Shankar
annanmAr kadhai from ponnar shankar, Today I learnt that the brothers belong to our kongu nAdu! Have to watch the movie.
Yes, Arul. It was an oral legend with deep Kongu connections.
annanmaar kathai
Whattay Fantastically Awesome Entry M@ster
If not for @mayilsk I would’ve never known about this album at all.
Oh really? Thanks, @sicmafia.
அண்ணன்மார் கதைய சொல்லப்போறோம் அண்ணந்தம்பிமாரே
(பொன்னர் சங்கர்)
Not a fan of MB singing 😦
Fantastic percussion work, of course!
Absolutely, fantastic, of course 🙂 Thanks.
One of my favorite; Did not even read the clues. (Recent song , so has stayed I guess) Annamaar Kadhaiya from PS.
An Amazing song. I had explained the Same exact things to a friend of mine when this track was released. Co incidence, Nostalgic , call it whatver Rex. Ovvuru bit um Unardhu potturuppan manushan!
Absolutely. No doubt about it nga. One of the best.
This is the Updated version !
கேள்வியின் நாயகனே
ராஜாவின் இசை உனக்கு மூச்சு
வலைத்தளம் எங்கிலும் உள்ள கீச்சு
எல்லாமே உன்னை பற்றிய பேச்சு
உன் இசைச்சேவை
365க்கும் மேல் தேவை
ஆசிரியர் கையில் இருக்கும் கோல்.!
ஆனால், ஆசிரியா நீயோ ,
விஸ்வத்திருக்கு(எல்லாருக்கும்) துளசி போல் !!
மகரந்தம் உண்டு !
அரு மருந்தும் உண்டு
அசை போட வைத்தாய்!
ராஜ இசை தேடி ஓட வைத்தாய்!
நீ செந்தமிழ் ராஜ பாட்(டு)டைக்கு கட்டியம் கூறும் சேவகன் !
ஒவ்வொரு பாட்டுக்கும் மெல்ல திறந்தாய் கதவை!
ஒவ்வொரு முறையும் எட்டி பார்த்தது உன் அகவை!! 🙂
நீ ஒரு விடாகொண்டன் தான்!
365 உனக்கு ஒரு தூசு !
கேள்வி பதில் அரங்கத்திற்கு நீ ஒரு பாஸ்(U )!!
இந்த ஒரு யாத்திரையில் உன் மொழி
சில முறை எங்களை எரியும் கனல் காட்டில் விட்டது தான்! 🙂
ஆனால் கருவேலம் பூக்கள் மத்தியில் எங்களுக்கு
நல்ல காலம் பிறக்குது ;தொல்லையெல்லாம் பறக்குது!
நீ (வ)படித்த சங்கதி எல்லாம் கேட்டு!
தொடரட்டும்!
இந்த வே(கே)ள்வி படரட்டும்!
உனக்கு இளையனின் இசை கோர்த்த பாமாலை சூடலாம்
என்று தான் முதலில் நினைத்தேன்
விஸ்வநாதன் இல்லா ராஜ இசை இல்லை!
அவன் வழி வந்த இவன் பா
அவன் தான் இவனுக்கு இசை(அ)ப்பா!
அதனால் தான் உனக்கு இளையவனுடன் அவன் சேர்ந்த (அப்)பாமாலை
நன்றி உனக்கு அல்ல!
உன்னை ஈன்ற அன்னைக்கு!
+1000
@SoberAndDrunk — முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இத்துணை அழகாக, உடனே கவிதை வரையும் அளவுக்குத் திறமையை வைத்துக்கொண்டு, இத்துணை நாட்கள் எங்கே இருந்தீர்கள் நீங்கள்? 🙂 கவிதையின் நாயகனாகவும் இசைஞானியின் இலட்சோப இலட்ச ரசிக சிகாமணிகளில் ஒருவராகவும் இங்கே வந்து அவ்வப்போது கவிதைப் பின்னூட்டங்களைக் கீச்சி இருக்கலாமே என்று இப்போது நினைக்கின்றேன்.
மிக்க நன்றி சகா.
இசைஞானியின் இசை, இளையவர்களையும் சென்று சேரும் என்பதில் என்றுமே எனக்கு சந்தேகம் இருந்ததில்லை. சூரியனைப் பற்றி யார் சொல்லி யாருக்குத் தெரிய வேண்டும்? இல்லையா? 🙂
ஆனால், சூரியனின் கதிர்களால் இப்படி எல்லாம் நாம் நன்மை அடையலாம் என்று ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக நாம் அறிந்த வண்ணம் தானே இருக்கின்றோ. அதே போலத் தான், இங்கும்.
அந்தக் காலத்தில் வானொலியிலும், இன்ன பிற வழிகளிலும் கேட்டது. அதைப் பகிர்ந்து கொண்டு, புதிர் என்ற அளவில் ஒரு வித பரபரப்போடு வழிநடத்திக்கொண்டு வந்ததில் மகிழ்ச்சியே.
எனக்கு கவிதையை ரசிக்கத் தெரியும். வரையத் தெரியாது. அதனால், வந்தனம் கூறி மீண்டும் ஒரு முறை என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Thanks a lot 🙂
“பூஞ்சாரங்க சரஞ்சரமா மஞ்சளும் மாவிலையோட……அண்ணன்மாரு கதைய சொல்லப்போறேன் அண்ணன் தம்பிமாரே..” மது பாலகிருஷ்ணன்,அனிதா & ஹேமாம்பிகா குரல்களில் ராசாவின் வரிகளில் “பொன்னர்-சங்கர்” படப்பாடல்.
நேற்று ட்விட்டரில் நீங்கள் PEEK கீச்சியதும் ஊகித்தப்பாடல் இதுவல்ல..வேறு நிறைய sea-beltடன் வேகத்தில் பயணிக்கும் “கதை கேளு” பாடல்களிருக்கே.. 🙂 வழக்கம்போல் எனக்கும் பல்புதான்..ஆனால் அட்டகாஷ் பாடலிது மாஸ்டர்…இப்பாடலுக்கு good to get bulb!! 🙂 இப்படத்தை பார்த்ததில்லை…பாடல்களையும் கேட்டதில்லை..[2 வேறு aversions படத்திலிருப்பதால் 🙂 )
என்னடா AIR கோயம்புத்தூர் பற்றி எல்லாம் வருதேனு பார்த்தால்…”கோடி கொட்டி கொடுத்தாலும் எங்க கொங்கு நாட்டுக்கு இணையேது..” class பாடல் மாஸ்டர்…கோவையின் கீதம் 🙂
சரியான விடை. ஆனால், தங்கள் பெயர் தெரியவில்லையே… டேகிங் செய்ய உங்கள் பெயர் வேண்டுமே 🙂
ஆஹா… என்னுடைய காணமல்போன வடை இங்கே அநாமதேயாக சுடப்பட்டிருக்கிறதா..?! 🙂 என்னே wp.comன் திருவிளையாடல்!! 😉
பாடல்: அண்ணன்மார் கதை
திரைப்படம்: பொன்னர் சங்கர்
Searched the LL clue lyrics in Thamizh text to find the song
#365RajaQuiz ராஜா பாடல்களின் தேடலை ஒரு வருடத்தில் அடக்க முயன்ற பேராசைப் பயணப் போராட்டம்… அது தோல்வியில் முடியும் என தெரிந்தும், போராடிய வரையில் மாபெரும் வெற்றியே… தலை வணங்குகின்றோம் உங்களுக்கும் இசை ராஜாவுக்கும்!!!
மிக்க நன்றி ஆனந்தமே! உங்கள் புகைப்படங்களின் உதவியால் சில க்ளூக்கள் இங்கு வந்ததில் எமக்கும் பேரானந்தமே. அதை மகிழ்வுடன், “எடுத்துக்கோங்க சார்” நு நீங்க கொடுத்து உதவியதற்கும், மிக்க நன்றி 🙂
aNNanmaar kathai – Ponnar Shankar
Lovely narration Rex on this phenomenal composition. Masterpiece is just an understatement for this song (and for this soundtrack). I adore all the songs from this movie. I am terribly pissed off when people don’t even listen to these soulful compositions (leave alone appreciate) while they hail some of the worst songs with absolutely no flourish either in the tune or in arrangements or singing. How can our music scenario can fall into such a deep irrecoverable pit? It is highly market driven rather than music driven. I can’t digest this.
As @vrsaran pointed out, these kind of compositions can never be dreamed of, leave alone composing. Frequent change in moods and tempo, like very minute Maestro is starting afresh song while keeping the continuity and links throughout.
Most of all, as you mentioned, it is very difficult to narrate a story in a song and keep the interest sustained for whole 9 minutes. If the melody is not good we might lost interest mid-way, Maestro also keeps the melody in-check while narrating the story. Superb control over melody and the pace of the song. Singers did a great job in supporting him, especially the female choir, noteworthy.
Maestro starts going western classical route with haunting choir and arrangments, but the next second he switches dramatically to unconventional folk percussion and wind instruments and then he reduces the pace to start the pre-pallavi with ‘thaanEthannEthaanE’ phrase with his exquisite trademark. There is no structure in this song, but we can feel how each phase is carefully structured. Violin arrangements followed by nadhaswaram at the end of first phase is just gorgeous. Normally Madhu Balakrishnan is mostly known for singing classical numbers, but he he shines bright with this folk number and proving his versatility.
Lyrics is too difficult to write, Hats off to Maestro for conceiving such a great lyrics and for keeping it to himself, so that we got a perfect composition on all fronts. This song also reminds me of Sri Rama Rajyam where Maestro composed three 6 minutes songs (dEvuLLe mechindi, sitaaraama charitam, raamaayanamu), narrating the whole Raamayana in those three songs. It is really a wonder how he gets to the core of the song within seconds.
2011 was a superb year for Maestro and music as we got tons of brilliant masterpieces from Maestro. As you this is not an ordinary song, but not even extra-ordinary song, much more than that. Maestro in supreme form, only deserved ones will see that.
These are the kind of songs which keeps me addicted to #365RajaQuiz, to put it simply. To be honest, there is never going to be another #365RajaQuiz like this, but this one year of treasure-trov’ing of Maestro’s music is more enough to relish for the rest of my lifetime. Thanks a lot Rex for making this happen 😀
My pleasure, Vijay. With you, we always get a 360-view of things. This comment is no different. I appreciate your kind words about our quiz.
I must thank people like you — because, you stepped-in, you wrote, you explained, you were ecstatic and very analytic in how every song had its own subtle nuances. But, for “expert” commentary from folks like you and our other friends, we wouldn’t have had this level of engagement.
I agree with every single comment you have on this song and this album in particular.
Thanks a lot, Vijay.
பொன்னர் சங்கர் – அண்ணன்மார் கதை.
IMHO, ponnar shankar will rank one among the best of IR’s post 2000 era works. A completely overlooked album.
இப்பாடல், தேடி வந்த தேவதை மற்றும் மலர் வில்லிலே மூன்று பாடல்களும் நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
“நிலாசோறு” திரும்பி பார்க்க வைத்த அளவுக்கு கூட இப்படப்பாடல்கள் கவனம் பெறவில்லை 😦
When every damn melody today is slow (snail) paced, IR time and time repeatedly beats it. Malar Vizhilile is as fast a melodious song can be!
I agree with you 100%. Absolutely.
அன்னமாரு கதைய சொல்லப்போறேன்… – மது பாலகிருஷ்ணன், ஹேமாம்பிகா & அனிதா – பொன்னர் சங்கர்
ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. பல வருடங்களுக்கு பிறகு என்னையும் இளையராஜாவின் இசையை கேட்க வைத்தது இந்த 365 RajaQuiz.
நான் மறந்தே போன பல பாடல்களை மீண்டும் ரசித்து கேட்க வைத்து விட்டீர்கள். இந்த 365Rajaquiz ல் பல தெரியாத பாடல்கள் கேட்க முடிந்தது, சமீபமாக உமாரமணனின் “சந்தன கும்பா….” கேட்டதில் இருந்து உமா ர்மணணின் பாடல்களை தேடி தேடி கேட்கிறேன்.
இந்த புதிரில் பாடல்களை பற்றியும் குறிப்பாக இசையை நீங்கள் விவரிக்கும் விதம் நன்றாக இருக்கும். உங்கள் விவரிப்பை கேட்ட பிறகு இதுவரை கேட்டிருந்த அந்த பாடல் ஒரு புதிய உணர்வை கொடுக்கும்.
சமீப காலங்களில் சினிமா பாடல்களை கேட்பதே அரிதாக இருந்த எனக்கு இந்த 365RajaQuiz ல் பங்கெடுத்த பிறகு தான் மீண்டும் திரைப்படப் பாடல்களை கேட்க ஆவல் உண்டாயிற்று.குறிப்பாக 80களின் இளையராஜா பாடல்களை மீண்டும் கேட்பதில்…
+1000
மிக்க நன்றிங்க. “சந்தனக் கும்பா” உங்களுக்கு புதுமையான ஒரு புதிராக இருந்தது என்று தெரிந்தது. ஆனால், இந்த அளவ்க்கு உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவில்லை. எனக்கு அந்தப் பாட்டு மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தினாலேயே அந்தப் படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக இறக்கினேன்.
இறக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
ஏனென்றால், உங்களுக்கு உமா ரமணனின் பாடல்களைக் கேட்க ஒரு தூண்டுகோளாக அது அமைந்துள்ளதே 🙂
மிக்க நன்றிங்க. இந்த அளவுக்கு இந்த புதிர் நிகழ்ச்சி உங்களை கவர்ந்திருக்கிறது என்று அறிந்துகொள்ள மகிழ்ச்சியாக இருக்கிறது.
பாடல்: ஏ தன்ன தன்னே தானெ தன்னெ..பூஞ் சலங்கை..(அண்ணன்மார் கதை)
படம்: பொன்னர்சங்கர்
What a composition…. i saw this film only because of our God’s music otherwise a lame and boring film… As usual God’s music was in different league altogether…this album is still fresh in my mind..thanks for this pick Master…beautifully written piece.
Thanks a lot, Arun. Unfortunately, I haven’t seen the movie yet. 🙂
படம் – பொன்னர் சங்கர்
பாடல் – அண்ணமாரு கதையை…(தொடக்கம் பொன்னர் சங்கர் பூஜைன்னு வருது)
இந்த மாதிரி கதை சொல்ற பாடல்கள் எல்லாம் இசை தெய்வத்திற்க்கு அல்வா மாதிரி…விருமாண்டியிலும் முழுகதையும் ஒரே பாடல்ல சொல்லியிருப்பாரு. மைகல் மதன காமராஜன்ல கூட….
எனக்கு மிக அர்ச்சியமான விஷயம் தியாகராஜன் + இசை தெய்வம் கூட்டணி தான்…முதலில் பெருசாக நான் கவனிக்கவில்லை…ஒருமுறை பாடல்கள் கேட்ட பிறகு தான்..ஆஹா…செம கூட்டணிடா டேய்ன்னு தோணுச்சி.
படத்தின் பாடல்களை எல்லாம் தியாகராஜன் மிக அற்புதமாக எடுத்திருபார்.
குறிப்பாக இந்த பாடலில்…பாடலை (கட்டுன்னா மாமானை தான் கட்டுவேன்) பாடிவயவர்கள் குறிப்பாக லஷ்மன்ஸ்ருதியில் வருவாங்களே…அந்த பெண்மணியின் பெயர் தெரியல அவுங்களை குத்து பாட்டுல கேட்டுவிட்டு இப்படி ஒரு இடத்தில் பாடலில் கேட்கும் போது மிக பெருத்தமாக இருந்துச்சி
அதே போல “திங்களை போல தென்றலை போல”லில் இருந்து அப்படியே உக்கிரமாக வரும் பாடல் மிக அற்புதமான ஒரு தாலாட்டாக மாறும் பாருங்க தல..ஏன்னாத்த சொல்ல நம்ம இசை தெய்வத்தை…காட்சியே வேண்டாம்ன்னேன்….அம்புட்டு உயிரு…
இதுக்கு தான் பலபேர் (மிஷ்கின்) இவரு எல்லாத்தையும் பாட்டுல சொல்லிடுறாருங்கன்னு பயப்படுறாங்க…;)))))
ரொம்ப அற்புதமான ஒரு பாடலை மீண்டும் உங்க புண்ணியத்துல கேட்டேன் ரொம்ப நன்றி தல ;))
Wow! அருமையான பின்னூட்டம். மிக்க நன்றி, கோபி.
அடிக்கடி நான் சொல்வது போல, இவர், இசையமைப்பாளர் மட்டுமல்ல. இசையாலேயே திரைக்கதையை நகர்த்தும் இசை திரைக்கதை ஆசிரியர். 😉
முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்யன் போல்… ஐந்தாவது முறை சுடுகிறேன்….பார்ப்போம் வருகிறதா என.. 🙂
”பூஞ்சரங்க சரம்சரமா மஞ்சளும் மாவிலையோடு……..
அண்ணன்மாரு கதைய சொல்லப்போறேன் அண்ணன் தம்பிமாரே…” மது பாலகிருஷ்ணன்,ஹேமாம்பிகா & அனிதா குரல்களில் ராசாவின் வரிகளில் “பொன்னர் சங்கர்” படப்பாடல்.
சத்தியமாக வேறு எந்த கொம்பனாலும் இப்படி ஒரு இசையை பாடலை கற்பனை செய்யவே முடியாது… ஜீவசத்தியமிது!! ஜெகஜால இசை பிரவாக roller-coaster ride!! இன்று முழுக்க இப்பாடல்தான் CLல்…
இப்படத்தை பார்த்ததில்லை (இரு வேறு aversionகளினால் 🙂 ), பாடல்களையும் கேட்டதில்லை. நேற்றைய ஊகம் பொய்த்து பல்பு வாங்கினாலும் இது போன்ற அற்புதமான பாடலுக்கு உங்ககிட்டயிருந்து எத்தனை பல்பு வேண்டுமானாலும் வாங்கலாம்.. 🙂 ராகதேவன் மட்டுமல்ல…அற்புத கதைச்சொல்லி நம்ம ராசா என்பதற்கு இது போன்ற முத்துகளே சாட்சி…
AIR கோயமுத்தூர் படம் போட்டிருங்கிங்களே..என்ன விசயமுனு பார்த்தா…”கோடி கொட்டி கொடுத்தாலும் எங்க கொங்கு நாட்டுக்கு ஈடேது..? பாடுபட்டு உழைப்பதிலே எங்க மக்களுக்கு இணையேது..?” பாடல் இப்படத்தில் 😉 ….அருமையான கோவையின் கீதம் 🙂
என்றென்றும் நன்றி மாஸ்டர் அறிமுகத்திற்கும் அருமையான விவரிப்பிற்கும்…! A true ardent FAN you are !! 🙂
முன்பு எழுத மறந்தது… // ஒரு காலத்தில் உடுக்கடிப் பாட்டாக வெளிவந்த வரலாறு சார்ந்த பழங்கதையை ஒட்டி புனையப்பட்ட ஒரு சரித்திரக் கற்பனைக் (historical-fiction) கதையின் திரைவடிவத்தில் வந்த பாடல் தான் இது// மிக அருமையான க்ளு இன்று..பாடலை கேட்டதில்லையென்றாலும் இதைப் படித்தவுடன் சட்டென “பொன்னர் சங்கர்”தான் நினைவில் வந்தார் 🙂
That is the reason, why I gave that as a clue, Rishi.
Besides, I also wanted folks to deduce the answer, by paying attention to this fact. In fact, Kalaignar Karunanidhi had to rely on All India Radio, Coimbatore’s folklore program on “Annanmaar Stories” in order to write this historical-fiction story as a serial-story in Kunkumam Magazine 🙂
That is why AIR, Coimbatore was featured exclusively in this clue.
And I also wanted to hide an overarching theme: This “Udukkadi Paatu” theme for folklore was brilliantly captured in spirit by Maestro Ilaiyaraaja’s own song in this clue. That is what I wanted to drive home with this clue 🙂
சத்தியமான உண்மை 🙂
ரசிக்கத்தான் தெரியும் ரிஷி. நம் அறிவுக்கு எட்டியது, அது மட்டுமே 🙂 மிக்க நன்றி :))
@seevin Ponnar Sankar Annanmar Kathai
@hakkeemCBE Annamar Kathai.Ponnar Shankar
#365RajaQuiz – ராசாவின் 4500+ பாடல்களில் பிடித்தப்பாடலாக ஒரே ஒரு பாடலை தேர்ந்தெடுக்கச் சொன்னால் எவ்வளவு சிரமமோ அதே சிரமம்தான் #365RajaQuizப் பற்றி ஒரு வார்த்தை/வாக்கியத்தில் சொல்வதற்கு.. 🙂
தினம் காலையில் எழுந்தவுடன் ”எல்லா” கடமைகளுக்கும் முன் செல்பேசி உயிர்ப்பித்து பார்ப்பது அன்றைய இசைத்துணுக்கு என்ன என்பதுதான்.விடை தெரிந்தவுடன் பாடலின் முழு வடிவத்தை ஒலிக்கவிட்டுதான் கடமைகளை தொடங்குவேன்.விடை தெரியவில்லை என்றால் அதைத் தேடும் சிந்தனையிலேயே கடமைகள் முடிந்துவிடும்.
சில சமயம் காலை உணவு முடிந்தவுடன் வடையை பதித்து நிம்மதியுடன் வேலைக்கு புறப்படுவேன்…இல்லையேல் மதிய உணவு வேளை அல்லது மாலை தேநீர் வேளையில்…வெகு சொற்ப சமயங்களில் அவ்வேள்வி இரவு உணவு வரைத் தொடரும்..ஆனால் இதுவரை உறங்குவதற்கு முன் சுட்டு விடுவேன். ஆக சில நாட்களில் #365RajaQuizல் விடியும் நாள் #365RajaQuizயுடனே முடிந்திருக்கிறது என் வாழ்வில்..
இது ஒரு அற்புதமான பயணம் மாஸ்டர்…இடையே சில வேறு பயணங்கள் போனாலும் விடிந்தவுடன் இசைத்துணுக்கை கேட்டு வடை சுட வில்லையெனில் அன்றைய பொழுதும் பயணமும் சுணக்கமாகத்தானிருக்கும்.
300க்கும் குறைவான ராசா பாடல்களே என்னிடமிருந்தன, அதுவும் மிக பரவலாக தெரிந்த புகழடைந்தப் பாடல்கள் மட்டுமே.தினம் அதை கேட்டே நான் ராசாவின் மிகத் தீவிரமான ரசிகன் என என்னையும் என்னைச் சுற்றியுள்ளவரையும் ஏமாற்றி கொண்டிருந்தேன்..
#365RajaQuizல் பங்குப் பெற்று இங்கு கண்டு எடுத்த முத்துக்களை கேட்டவுடன் மிக மிக வெட்கமாக இருந்தது. ராசாவின் இசைக்கடலில் நீந்தாமல் கரையிலேயே நின்று சில நுரைப்பொங்கும் அலைகளில் கால் நனைத்து இன்புற்றிருந்திருக்கிறேன், ராசாவின் இசை மேதமையை மேலோட்டமாக ரசித்திருக்கிறேன் என மிகத் தெளிவாக புரிந்தது.
நீங்கள் ஒவ்வொரு இசைத்துணுக்கையும் விவரிக்கும் விதமும் பாடல்களை ரசிக்கும் விதமும் எனக்கு ராசாவின் இசையை ரசிக்க பல கதவுகளைத் திறந்து விட்டது 365% உண்மை!!. நிதம் நிதம் நிறைய கற்று கொண்டிருக்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை மாஸ்டர் என்று உங்களை அழைத்து கொண்டிருப்பதற்கு அதுவும் ஒரு மிகப் பெரிய காரணம் மாஸ்டர்!!! 🙂
இந்த #365RajaQuiz பயணம் இவ்வளவு சிறப்பாக நடக்க முக்கிய காரணங்கள் என நான் நினைப்பது: க்ளுக்களை நீங்கள் ஒளித்து வைக்கும் அழகு, ஊர்ப்பாசம், தீம்களை நீங்கள் தெரிவு செய்யும் விதம் அதை அழகான வார்த்தைகளில் கோர்த்து சுவரசியமாக பதிக்கும் விதம், ஆங்கில vocabulary, ”பேரழகுகளை” தீவிரமாக ரசிக்கும் தன்மை ;-), சமூக பொறுப்புணர்வு, சட்ட ஞானம், என அடுக்கி கொண்டே போகலாம்…மாஸ்டர்!!
கண்டிப்பாக நீங்கள் ஒரு role model எங்களுக்கு, எடுத்த காரியத்தை எத்தனை இடர்கள் வந்தாலும் என்றும் குறையாத passionனுடன் செய்து கொண்டிருப்பதால்…. 🙂
எங்கள் எல்லாவருக்கும் ஒரே கவலை இன்னும் 18 நாட்களில் இந்த அற்புத பயணம் எல்லாம் முடிந்து விடுமே என்றுதான்… ;-(
இன்னும் நிறைய எழுத வேண்டும்..365ஆம் நாளில் தொடர்வேன்…. 🙂
ரிஷி — மிக்க நன்றி. உங்களின் பின்னூட்டத்தின் ஆழத்தில் இருந்தே, எந்த அளவுக்கு இது உங்கள் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்பதை இவ்வளவு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, ரிஷி.
ஒரு பாயிண்டையும் விடாமல் நூல் பிடித்து இருக்கின்றீர்கள், 300/365ல் அழகாக 300 பின்னூட்டங்களைத் தொகுத்து கொடுத்து அசத்தி இருந்தீர்கள்.
உங்களைப் போன்ற நண்பர்கள், இசை ரசிகர்கள் தான் இசைஞானிக்கு மட்டுமல்ல, அவர் வழியில் நடையைப் போடும் நம்மைப் போன்றோருக்கு பெரும் சொத்து!
மிக்க நன்றி, ரிஷி.
நீங்கள் 365/365ல் தொடரப்போகும் அந்த பதிவிற்காகவே காத்துக்கொண்டு இருக்கிறேன்.
🙂
அண்ணன்மார் கதை – பொன்னர் சங்கர்
#365rajaquiz ஒரே வரியில் சொல்வதென்றால் – The biggest celebration of Raaja music ever. Period.
Wow! Thanks a lot for that candid opinion, @sagittarian82. Glad you are enjoying it that way. 🙂
Annanmar Kathai from Ponnar Shankar.
there is also kadha kelu kadha kelu from Karimedu Karuvayan. But TP says tahts only 4 minutes
Even andangidugidukka is only 5 minutes…ivaru engE Appai vechArunnE theriyalayE…
ROFL 🙂
Karagattakari has an entry with 8:38 – Kovai Kamala and Mano singing thanthanthom (from TP, vERa oNNum theriyala). Length vechu pArthA idhuvA irukkumO?
Chellandi Amman links also talk about madura veeran idol in the kovil premises. madura veeran enga samyA irukkumA? adhula 4:30 nimhsathukku mEla pAttE illaiyE?
Just realized that I haven’t submitted my answer
ANnanmaaru kadhayai – ponnar shankar
@Tcsprasan
அண்ணன்மாரு கதை -பொன்னர் சங்கர்
tcsprasan
Karagattakari song has the best credentials as per the clues. So will have to go with the villupattu song thandhanathom from karagattakari
பொன்னர் சங்கர் படத்திலிருந்து அண்ணன்மாரு கதைய சொல்ல போறேன் பாடல்.
என்னா அடி, உண்மையிலயே ரோலர் கோஸ்டர்தான் :).
இந்த க்விஸ் பத்தி சொல்றதுக்கு நிறைய இருக்கு. மொபைல் இன்டெர்நெட் யூஸ் பண்றதுனால (இன்னும் 7-10 நாளைக்கு அப்படித்தான் 🙂 ) ரொம்ப பெரிசா டைப் பண்றது கஷ்டம் அதனால சுருக்கமா முடிச்சிடுறேன். இந்த க்விஸ் அட்டென்ட் பண்ண ஆரம்பிச்சதுல இருந்தே அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாவே ஆயிடுச்சு. நைட்டு தூங்க போறதுக்குள்ள என்ன பாட்டுனு கண்டுபிடிச்சாதான் நிம்மதியான தூக்கம். எத்தனையோ நாட்கள் இதனாலயே லேட்டா தூங்கிருக்கேன் :). அப்புறம் இந்த க்விஸ் நான் பாட்டை ரசிக்கிற விதத்தை மாத்திருக்கு, நிறைய இசைப் புதையல்களை தந்திருக்கு. சொல்றதுக்கு இன்னும் நிறைய இருக்கு, அத இன்னொரு சந்தர்ப்பத்துல சொல்றேன் :).
@rajabalanm
தங்கள் உணர்வுகளை தங்களுக்கே உரிய பாணியில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, ராஜபாலன். கண்டிப்பாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லுங்கள். மிக்க நன்றி 🙂
Annanmaar kadhai – Ponnar shangar
It can’t be said in one word like to choose one IR song 🙂
Ha ha. OK. Understood 🙂 Thanks a lot, Arul.
அண்ணாமார் கதை பொன்னர் ஷங்கர்