Tags
@amas32, @dtwdy, @ezharai, @hakkeemCBE, @I_VR, @kaarthikarul, @maestrosworld, @manivel, @muthiahrm, @naanillai, @nom_d_plum, @prasannaR_, @RagavanG, @rajabalanm, @sagittarian82, @seevin, @sicmafia, @StallionStorms, @tcsprasan, @usharanims, @vrsaran
வணக்கம்.
என்ன தான் ஊர விட்டு போயிருந்தாலும், அட்லாண்டால உக்காந்துகிட்டே இந்தியாவில் நடக்கும் நடப்புகள பத்தி ஓரளவுக்கு தெரிஞ்சு வச்சிருப்பதில் பல வித advantages இருக்கு.
பாருங்க..மேகத்துல இந்த பாட்ட அட்லாண்டால இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி ஏத்தினது எவ்வளவு சரின்னு!
வெயில் பிச்சு உதறுது. மூச்சு உஷ்ணம் ஏறி உருகுதே மருகுதேனு எல்லாம் பாட முடியாம, அரிக்குதே, சொரியுதேன்னு பாடற அளவுக்கு செம வெயில் 😉 ஆனா, இங்க கோயம்புத்தூர் மக்களுக்கு 2 நாளுக்கு முன்னால மழை பெய்தது சுகமா இருந்துச்சு.
இசைஞானியின் இசை மழையில் நனைந்து கொண்டு வரும் நமக்கு, இன்றைய பாடல் செம ஜாக்பாட்! பாட்டு முழுவதும் நாயகனும் நாயகியும் ஒரே shower மழையிலும் மேக மழையிலும் நனைந்து கொண்டே பாடி, நிறைய Phaneesh Murthyகளுக்கே சுளுக்கு எடுத்துக் கொண்டிருப்பார்கள் 😉
ஜெய் ஆஞ்சனேயா 😉
அந்தக் காலத்தில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்க, எப்படி இப்படி ஒரு பாடல் என்று யோசிப்பதால் மட்டுமே (??) இந்தப் பாடலை இன்று தருகிறேன்.
உருகி உருகி, நனைந்து நனைந்து, இந்தப் பாடல் அகில இந்திய வானொலியில் எங்களை எல்லாம் குளிர்வித்த அளவுக்கு தூர்தர்ஷன் இதனை இருட்டடிப்பு செய்ததற்கு நம் கண்டனங்களை(?) முதலில் சொல்லிவிடுவோம்.
ஆரம்பமே வயலினில் ஜில்லென்று ஆரம்பமாகும் அம்சமான பாடல். இன்று இந்த பாடலுக்கு வரும் பின்னூட்டங்களில் இருந்து நீங்களே கண்டுகொள்வீர்கள். இன்றைய புதிருக்கு சோப்புடன் யாரும் வந்துவிடாமல் இருந்தால் சரி. அந்த அளவுக்கு showerல் நனைந்து கொண்டே டூயட் பாடியும், ஆடியும் கூத்தடிச்சிருப்பாங்க காதல் ஜோடி. இந்த நாயகி, இன்று டிவி சீரியலில் எல்லாம், செம கண்ணியமான ரோல்களில் வருவதாக கேள்விப்பட்டேன். நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி 😉 காதல் இளவரசனாக வலம் வந்த நாயகன் காதல் ரசம் கொட்ட, நாயகியோ நைட் பேண்ட், சட்டையோடு ஷவரில் நனைந்து கொண்டே சொக்குவார். Bath-tubம், Geyserம், Wallpaperம் அன்றைய காலகட்டத்துக்கு புதுசு என்றாலும், bathtubல் shower-screen இல்லாமல் படமாக்கிய டைரக்டருக்கும், ஆர்ட்-டைரக்டருக்கும் ஒரு குட்டு வைத்துவிடுவோம் 😉
தொடக்க இசையில் இருந்து, இந்த இடையிசை வரையில் ஷவரில் நனைந்து கொண்டு இருந்ததால் ஜலதோஷம் பிடித்ததோ என்னவோ, டைரடக்கர், நாயகன் + நாயகியை கடற்கரையில் ஓட விடுவார் — நீச்சலுடையில் நாயகியும், அந்தக்கால ராம்ராஜ் சங்கதியில் நாயகனையும்! ஆண்டவா..
அது சரி, நமக்கு எதுக்கு இந்த வம்பு. பாட்டை கவனிப்போம் 😉
இப்படியாக போகும் பாடலின் இன்னொரு இடையிசையில், கடற்கரையில் வரும் நீரில் நாயகனும் நாயகியும் கபடி விளையாடும் விதமாக பாடலை எடுத்திருக்கும் டைரடக்கரின் கருத்தாழத்தை என்னவென்று சொல்வது. அதாவது, காதலித்த பின்னர், மொய்யும் பொய்யுமாக திருமணம் நடந்து முடிந்த பின், அதே கடற்கரைக்கு ஜோடியாக தேனிலவுக்கு கணவனும் மனைவியுமாக வந்தாலே, அங்கிருந்தே வாழ்க்கையில் கபடி ஆட்டம் ஆடித்தானே ஆக வேண்டும் என்று இவர் கலை நயத்தோடு சொல்லியிருப்பது, செம director touch. Stroke of a genius! ஆகா…என்னெ அழகு ;))
ஆக இந்த இடையிசை வரை கடலிலேயே மேய விட்ட டைரடக்கருக்கு, இதுவும் போர் அடித்துவிடவே, ஆலங்கட்டி மாமழையாம் rangeக்கு மழையில் நனைந்து கொண்டு பாட நாயகனையும் நாயகியையும் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விட்டுவிடுவார். ;))
இப்படி பட்ட தண்ணீர் தண்ணீர் பாடல்களைத் தேடி தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்நு தலைல துண்ட போட்டுக்கிட்டு எத்தினி பேர் படத்த பாத்தாங்கனு தெரியாது, ஆனா, இந்தப் பாட்டு செம ஹிட்.
நம்ம இசைஞானி கிட்ட டைரக்டர் எப்படி இந்த சிச்சுவேஷனை விளக்கியிருப்பார்? பஞ்ச பூதங்களையும் தாண்டிய காதல் டூயட் ராஜா இது. எல்லாம் தண்ணி தான். ஷவரில் இருந்து ஆரம்பித்து கடல் வழியா மழைக்குள் போறோம். ஒரு பய புள்ள நாளையில் இருந்து குளிக்க மாட்டேன்னு அடம்பிடிக்க மாட்டான். அந்த மாதிரி ஒரு பாட்டு வேணும். பாட்ட கேட்டாலே, குளிக்கணும்னு ஒவ்வொருத்தனுக்கும் ஆசை வர்ற மாதிரி பாட்ட choreograph பண்ண போறேன் Raaja. அதனால நீங்க Guitar, Violins, மெல்லிய drumsனு எது போட்டாலும், அதுக்கு தகுந்த மாதிரி கபடி, கில்லிநு நெறைய steps ஐ கில்லியா படமாக்க நான் readyஆ வச்சிருக்கேன்.
LOL 🙂
Today is also the penultimate drum-roll for Season-3’s finale! Tomorrow will mark the conclusion of Season-3, which was special in several aspects. It was competitive, tough, but, also had more relaxed clues and more full-length clues that did not feature in earlier seasons.
Have fun 😉
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered. Encoded via Goldwave with repeated noise removal.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.S. Janaki would have paired with an unconventional singer for this duet. His name’s second syllable rhymes perfectly with the hero’s name’s second syllable 🙂
Answer: Oru Naalil Malarndhene (ஓரு நாளில் மலர்ந்தேனே) from Unnai Thedi Varuven (உன்னைத் தேடி வருவேன்) (1985)
பி.கு: தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப் படாமல் மற்றவர்களுக்கும் யூடியூப் (தொந்)தரவு தந்து உதவவும்னு கோழி கூவுது மலேசியா அண்ணன் ஸ்டைல்ல சொல்ல ஆச தான்.. இருந்தாலும்…பார்க்க துணிபவர்களின் Homework exerciseஆக விட்டுவிடுகிறேன் 😉
Anonymous said:
உன்னைத் தேடி வருவேன் (1985) – ஒரு நாளில் வளர்ந்தேனே
@manivel
Prasanna Venkatesan (@prasannaR_) said:
பாடல்: ஒரு நாளில் வளர்ந்தேனே
படம்: உன்னைத் தேடி வருவேன்
படத்தின் ஹீரோ சுரேஷ், இந்தப் பாடலைப் பாடியவர் ரமேஷ். 😀
Terrific song!
இந்தப் பாடல் எனக்கு சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகமான போது, சரி இதை எப்படி எடுத்திருக்கிறார்கள் என்று ஆர்வத்துடன் யூட்யூபில் தேடிப் பிறகு வீடியோவைப் பார்த்து நொந்து போனேன். 😉
Rex Arul said:
விவிசி. பார்த்து நொந்து போனீர்களா? நானும் தான் 😉
Kaarthik Arul said:
oru nALil malanrndhEnE from unnai thEdi varuvEn sung by SJ and Ramesh, featuring Nalini and Suresh.
Superb song. Recently discovered this album and song while listening to Raja-Suresh albums to find 281/365 (thOLin meedhu saaya), which is the best part of our Quiz. If an unknown song is given.I get many gems in the search 🙂
en anbE anbE is another superb melody in this album by SPB and SJ while Maalai mudhal kAlai is a surprise from Vani Jayaram.
Rex Arul said:
மிக்க நன்றி, அருள் 🙂 அது தான் நம் புதிரின் முக்கிய நோக்கமே. ஆழ நனைந்து முத்தை எடுப்பதில் உள்ள சுகம் எங்கே, வெறும் ஷவரில் நீரைப் பாய்ச்சி விளையாடும் சுகம் எங்கே 🙂
ஆமாம். அந்தப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
Anonymous said:
@seevin Oru Naalil Unnai Thedhi Varuven
R. Saravanan said:
பாடல் ” ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே “. படம் உன்னைத் தேடி வருவேன் (1985). ரமேஷ் & ஜானகி பாடிய அட்டகாஷ் டூயட் !
Rex Arul said:
அட்டகாஷோ அட்டகாஷ் 😉
R. Saravanan said:
பாடலை பலமுறை முன்பே கேட்டு இருந்தாலும், இந்தப் படத்தையோ, பாடலையோ நான் திரையிலோ / டிவியிலோ இதுவரை பார்த்ததில்லை.
ரெக்ஸ் மாஸ்டரின் நீண்ட விவரிப்பிற்குப் பிறகு, யூட்யூபில் கண்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன்.
அருமையான பாடல். ஆனால் படமாக்கிய விதத்தில், என்ன ஒரு அட்ராசிட்டி !!
பாடலில் நடிகரும், நடிகையும் இத்தனை அட்டகாசம் செஞ்சா, இது தூர்தர்ஷனில் எப்படி வருங்கறேன் ??
இதில உங்க (நம் ?) கண்டனம் வேறா (படம் வெளிவந்தபோது உங்களுக்கு வயது சுமார் பத்து என்பதையும் நினைவில் கொள்ளவும்).
படம் பார்க்கும்போது, யார் யார் துண்டைப் போட்டுட்டு பார்த்தாங்களோ தெரியாது.
ஆனால் இன்று இந்தப் பாட்டை யூட்யூபில் தேடிய கணவர்கள் மட்டும், இதைச் செய்திருக்க அதிக வாய்ப்புண்டு.
ஏன்னா தங்கமணி மட்டும் பாட்டை ஸ்க்ரீனில் பார்த்திருந்தால், வாஷிங் மெஷினில் அடுத்த லோட் அந்தக் கணவரே (12 மணி நேர வாஷிங் சைக்கிள் டைமருடன்).
என்னா வில்லத்தனம் !!
இப்படிக்கு, மயிரிழையில் மாட்டாமல் தப்பித்த 365 ராஜா குவிஸ் ஆர்வலன்.
Rex Arul said:
ஓஹோ…இப்படி எல்லாம் வேற டெக்னிக்கலா பேச கத்துகிட்டிருக்கீங்க..பலே…கண்டினியூ 😉
ராம்ராஜுக்கு சல்யூட்!
அப்ப அப்ப எனக்கு Mathamnesiaனு ஒரு நோய் இருக்குனு உங்களுக்கு எப்படி தெரியுது சரவணன்? விவிசி 😉
விவிசி….
அட்டகாஷ் பின்னூட்டம். தங்கமணி அவர்கள் படிக்காமல் பாதுகாக்க வேண்டும். என்ன நான் சொல்றது? விவிசி ;))))))
ஏழர said:
ஒரு நாளில் – உன்னைத்தேடி வருவேன்
Prasannaa S (@tcsprasan) said:
Oru Naalil Valarandhene – Unnai thedi varuven.
Master i have not yet seen this song. Now after your description i have to watch it. But couldnt find the Youtube link. When you publish the answer please give the link :-)))))
Rex Arul said:
ஆகா…யோவ்…இது வரை பார்த்ததில்லைங்கற கேங்கை சேர்ந்த ஆசாமியா நீர்? இருந்துட்டு போம்யா ;)))
dtwdy said:
oru naalil valarnthene – unnai thedi varuven
GiRa ஜிரா said:
ஒரு நாளில் மலர்ந்தேனே வளர்ந்தேனே… தேவனே
இந்தப் படத்தோட பேர் கூட தெரியாது. ஆனா பாட்டு தெரியும்.
நான் ஒரு விஷயம் கவனிச்சிருக்கேன். குறிப்பா மூன்று பாடகிகளின் பாட்டுகளில். பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி
இவங்க கூட பாடுறவங்க யாரா இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும். கண்ண மூடித் திறக்குறதுக்குள்ள… இல்ல இல்ல.. கண்ண மூடித் தொறக்கனும்னு நெனைக்கிறதுக்குள்ள தூக்கிச் சாப்பிட்டுப் போயிட்டே இருப்பாங்க.
ஆனா புதுப்பாடகர்கள் கூட பாடும் போது கொஞ்சம் அவங்க அளவுக்கு இறங்கி வந்து பாடுவாங்க.
மெல்ல மெல்ல என்னைத் தொட்டு பாட்டில் ராஜ் சீத்தாரமனுக்கு பதிலா பெரிய ஆண் பாடகர் யாராச்சும் பாடியிருந்தா பாட்டும் இன்னமும் நல்லாருக்கும். ஆனா அவர் குரல் ரேஞ்ச் என்னவோ அதுக்குள்ளதான் சுசீலாம்மாவும் பாடியிருப்பாங்க.
இன்னைக்குப் பாட்டையே எடுத்துக்கோங்க. ரமேஷ் குரல் கொஞ்சம் ரேஞ்ச் குறைச்சலாதான் இருக்கு. எஸ்.ஜானகி குரல் ரேஞ்சோடு பாட வேண்டிய குரலா? ஆனாலும் பாருங்க… ஜானகியம்மா கொஞ்சம் அடக்கிதான் வாசிச்சிருக்காங்க.
எஸ்.பி.பி வந்த புதுசுல குரலில் ஒரு பெண்மை தெரியும். இளவயசுல்ல. அப்போ எல்.ஆர்.ஈசுவரியோட டூயட் பாட வெச்சாரு எம்.எஸ்.வி. அந்த டெக்னிக்கை பின்னாடி ஷாகுல் ஹமீதையும் சுவர்ணலதாவையும் ரஹ்மான் பாட வெச்சாரு. அப்போ எஸ்.பி.பி குரலுக்கு ஏத்த மாதிரி ஈஸ்வரியம்மாவும் ரேஞ்சு கொறைச்சு பாடியிருப்பாங்க.
கூட பாடுறவங்க எந்த ரேஞ்சுல பாடுறாங்கன்னு தெரிஞ்சு புரிஞ்சு அதுக்கேத்தாப்புல பாடுறதும் திறமை. இதையெல்லாம் பெரியவங்க கிட்ட இப்ப உள்ள பாடகிகள் கத்துக்கனும். அது சரி.. அவங்க வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க. புதுப்பாடகர்கள் கிட்ட இருக்குறதே அவ்வளவுதான்.
Rex Arul said:
அருமையான கோணத்தில் எழுதி அசத்தி இருக்கின்றீர்கள் ஜிரா. விட்டுக்கொடுத்து நகரும் அந்த உன்னத கோட்பாடுகள் எல்லாம் சிதைந்து கொண்டு வரும் இக்காலத்து “me first” generation’s Narcissism எல்லாத் துறைகளிலும் மலிந்து உள்ள நிலையை அது உணர்த்துவதாகவே எனக்கு படுகிறது 😦
ரிஷி(@i_vr) said:
”ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே…” ஜானகியம்மா, ரமேஷ் குரல்களில் “உன்னை தேடி வருவேன்” படப்பாடல்.
ரிஷி(@i_vr) said:
சரவணன்(@vrsaran) கூறியது போல் இப்பாடலை முன்பே கேட்டிருந்தாலும் படத்தையோ பாடலையோ இதுவரை பார்த்ததில்லை.. இப்போது பார்க்ககூடிய சூழலுமில்லை… 🙂 வீட்டிற்கு சென்றதும் தங்கமணிக்கு டிமிக்கி கொடுத்து பார்க்கனும்… 😉 மாஸ்டரின் ”தண்ணீர் தண்ணீர்” சேவை மக்களுக்கு இப்போ ரொம்ப தேவை… 😉
ரிஷி(@i_vr) said:
கணொளியை “உன்னை தேடி வருவேன்” என வீட்டில் வந்து பார்த்து நோந்தேன் மாஸ்டர்… காதல் ரசம் போய் ஒரு ”சாம்பார்” கூட வடியவில்லை…., இவரை “காதல் இளவரசன்” என்று நல்லாதான் ஓட்டியிருக்கீங்க… 🙂
நடிகையும் சாரி You reached wrong shoreனு நல்லா வெறுப்பேத்திவிட்டாங்க…. கடற்கரையை தங்க கடற்கரையாக மாற்றிய அமலா, நிரோஷா, ராதா, மாதவிகள் எங்கே….ம்…ம்…இவரெங்கே 🙂
Jokes Apart :-), இந்த மாதிரி ஒரு அருமையான பாடலை கேமரா கவிஞனிடமோ “ நிஜ”காதல் இளவரசனிடமோ ராசா கொடுத்திருந்தால் இப்படி “கெடுத்திருப்பார்களா”?
Rex Arul said:
விவிசி..மிகச் சரியாக சொன்னீர்கள்.
ஹஹஹா… என்ன செய்வது… அந்தக் காலத்தில் வேறு எந்த ஊடகமும் இல்லாத காலகட்டத்தில், இப்படி ஒரு நல்ல பாடலுக்கு அருமையாக படமாக்கி இருக்கக்கூடாதா. 😉
கண்டிப்பாக கமலோ, பாலுவோ, இந்தப் பாடலை இப்படி சிதைத்து இருக்கமாட்டார்கள் 🙂
Rex Arul said:
அஹா அஹா அஹா… பாருங்கய்யா இவர்களை. இது வரை ஒலியைக் கேட்டவர்களின் கண்ணில், ஒளி தென்படவில்லையாம். நாம் விமர்சனம் எழுதியதைக் கண்டு தங்கமணிகளின் கண்ணில்படாமல், தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு பாடலின் ஒளியைக் காண்பார்களாம். இவுக பில்டப்புகளிலேயே, பல படங்கள் எடுத்துடலாம் போலிருக்கு. விவிசி ;)))
ஆஹா…மிடில…இப்படி எல்லாம் உடம்பு ரணமாக்கும் வித்தையை நம் எக்ஸ்பர்ட்ஸ் நல்லா தான் கத்து வச்சிருக்காங்கங்கற விசயத்த, நம்ம கத்துகுட்டி க்விஸ் மாஸ்டர் புரிஞ்சு வச்சிருக்கறது நல்லது ;))))
Vijay said:
Hilarious write-up Rex, laughed for a long time. :clap:
//ஜெய் ஆஞ்சனேயா ;)//
adEngappa enna oru start and munjaameen. abachaaram! ROTFL
//உருகி உருகி, நனைந்து நனைந்து, இந்தப் பாடல் அகில இந்திய வானொலியில் எங்களை எல்லாம் குளிர்வித்த அளவுக்கு தூர்தர்ஷன் இதனை இருட்டடிப்பு செய்ததற்கு நம் கண்டனங்களை(?) முதலில் சொல்லிவிடுவோம்.//
//அந்தக்கால ராம்ராஜ் சங்கதியில் நாயகனையும்//
//இப்படியாக போகும் பாடலின் இன்னொரு இடையிசையில், கடற்கரையில் வரும் நீரில் நாயகனும் நாயகியும் கபடி விளையாடும் விதமாக பாடலை எடுத்திருக்கும் டைரடக்கரின் கருத்தாழத்தை என்னவென்று சொல்வது. அதாவது, காதலித்த பின்னர், மொய்யும் பொய்யுமாக திருமணம் நடந்து முடிந்த பின், அதே கடற்கரைக்கு ஜோடியாக தேனிலவுக்கு கணவனும் மனைவியுமாக வந்தாலே, அங்கிருந்தே வாழ்க்கையில் கபடி ஆட்டம் ஆடித்தானே ஆக வேண்டும் என்று இவர் கலை நயத்தோடு சொல்லியிருப்பது, செம director touch. Stroke of a genius! ஆகா…என்னெ அழகு ;))//
//போர்க்கால அடிப்படையில் முடுக்கி விட்டுவிடுவார்//
ROTFL-MAX 🙂
Song clue innum kEkkala, evening thaan kEkkanum. 🙂
Rex Arul said:
ஹஹஹா….மிக்க நன்றி விஜய்.
அப்ப அப்ப கொஞ்சம் ஜாலி பண்ண வேண்டாமா? அது தானே ஒரு க்விஸ் மாஸ்டரின் ஜோலி? 😉
Muthiah (@muthiahrm) said:
பாடல் – ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
உனைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா?
இன்று தூங்க வில்லை தலையணை தாங்குமா?…
பாடியவர்கள் – எஸ். ஜானகி & ரமேஷ்
படம் – உன்னை தேடி வருவேன்.
Rex Arul said:
தாங்காது…தாங்கவே தாங்காது 😉
@sagittarian82 said:
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே… உன்னை தேடி வருவேன்
Wow whatay video. Sridhar’s film this right. He was in some mood in the 80s 😉
Rex Arul said:
விவிசி 😉
[μsic]மாபியா (@sicmafia) said:
Oru Naalil -Unnai Thedhi Varuven
Thanks a lot M@ster we had a ROFL time in twitter with this song
Rex Arul said:
விவிசி… அட நீங்கள் மட்டுமா? நானும் தான். என்ன ஒரு அநியாய படமாக்கல். அட பாடலில் ஒன்றும் செய்வதற்கில்லை என்றா நாயகன் கை-ஷவரில் தன் மூஞ்சியிலேயே தண்ணீரை பாய்ச்சி அடிக்கிறான்? டூ மச்! ஹஹஹாஹா
Vijay said:
oru naaLil vaLarnthEnE (first interlude) from unnai thEdi varuvEn.
seenathu pattu mEni version 2? 😀 inikki vEppala adichikka vEndiyathuthaan by singing maariyamma maariyamma. 😉 Nice song, but Ramesh sounds off-key at many places.
Rex Arul said:
பட்டு மேனி வர்ஷன் 2 ஏ தான். இம்மாதிரி ராம்ராஜ் சல்யூட்களுக்கு, நம் ராமராஜனின் கியூட்களே மேல் 😉
Sholavandan (@Naanillai) said:
oru nazhlil malarthane – Unnai Thedi varuven.
amas32 said:
உன்னைத் தேடி வருவேன் படத்தில் இருந்து ஒரு நாளில் வளர்ந்தேன் 🙂
amas32
Arun Rajendran said:
பாடல்: ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே
படம்: உன்னைத் தேடி வருவேன்
ட்ரம்பெட்ஸ் ஆரம்பிச்சதுலயே கண்டுப்பிடிச்சாச்சு..ஆனா வீடியோவ கண்டையரதுக்குதான் ரொம்பவே மெனக்கெட வேண்டியதா இருந்தது..ஒரு நல்ல காதல் பாட்ட காமப்பாட்டா மாத்தி கொடுமப்படுத்தி இருக்காங்க..தலைவர் கண்ல இதெல்லாம் பட்டு இருந்தா கொதிச்சுப் போய் இருப்பார்..
ஆனாலும் மாஸ்டர் நீங்க ரொம்ப குறும்பு…இப்படியெல்லாம் விவரிச்சு ஆவல ( 😉 😉 ) தூண்டிவிட்டு வேடிக்கப் பார்க்கப்படாது…இந்தப் படத்தோட டைரடக்கர் C.V. Sridhar-னு திரைப்பாடல்.காம் சொல்லுது..உண்மையா இருந்தா காலக்கொடுமை-னு தான் சொல்லனும்…
Rex Arul said:
உங்கள் பின்னூட்டத்தைப் படித்து விவிசி ;)) நான் குறும்புங்கறத 299வது நாளிலாவது கண்டு கொண்டது குறித்து மகிழ்ச்சி. மற்ற படி நமக்கு ஹெட்-ஷவர் தான். ஹேண்ட்-ஷவர் எல்லாம் இல்லை. விவிசி ;))
காலத்தின் கொடுமையே தான். காதலிக்க நேரமில்லை எடுத்த அதே ஸ்ரீதர் ஷவரில் பல மணித்துளி நேரத்தை நாஸ்தி செஞ்சுட்டார் 😉
plum said:
“தலைவர் கண்ல இதெல்லாம் பட்டு இருந்தா கொதிச்சுப் போய் இருப்பார்..
ha ha rerecording paNNum bOdhu kanNula patturukumE? avar pAvam by 80s ipdi pala kodumaigaLa pArthu pazhagi maratthu pOyiruppAr.
Thai Pongal & Rishi Moolathula koodai thalai chakravarthy, Radhika dance for manjolai kilidhano, Thengai pongal for Chinna puraa ondru, Ravikumar fully utilising the one chance he got with Sridevi in Pagalil or iravu – idhaiyellAm thANdi dhanE indha padathukku vandhuruppAr?
Anonymous said:
@hakkeemCBE Unnai Thedi Varuven Ore nallil
Usharani M (@usharanims) said:
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே… – எஸ். ஜானகி & ரமேஷ் – உன்னை தேடி வருவேன்.
ராஜா said:
உன்னைத் தேடி வருவேன் படத்திலிருந்து ஒரு நாளில் வளர்ந்தேனே பாடல்.
இந்தப் பாட்டை இதுக்கு முன்னாடி கேட்டு இருந்தாலும் இந்தப் பட பாடல்கள் எதுவும் நம்மகிட்ட இல்லாததுனால அடிக்கடி கேட்டதுல்ல. இந்தப் பாட்டை இதுக்கு முன்னாடி பாத்ததும் இல்லங்கிறதுனால நீங்க இவ்வளவு டீடெய்ல் குடுத்தும் கண்டுபிடிக்கிறதுக்கு கொஞ்சம் சிரமப்பட வேண்டியதாப் போச்சு :).
சீரியல்ல நடிக்கிற நடிகைனதும் ராதிகாதான் முதல்ல ஞாபகத்துக்கு வந்தாங்க. ஆனா லைஃப்லைன் க்ளு படி எந்தப் பாட்டும் அவங்க படத்துல இல்ல. சீரியல்ல நடிக்கிற வேற எந்த 80s படத்துல நடிச்ச நடிகையும் உடனே ஞாபகத்துக்கு வரல.
வழக்கமா ஊர்ல இருக்குறப்ப தெரியாத பாட்டு வந்தா அம்மாவும் தங்கச்சியும் கண்டுபிடிக்கிறதுக்கு உதவி பண்ணுவாங்க. இன்னைக்கு அதுக்கும் வழி இல்லாம பண்ணிட்டீங்க ;). அப்புறம் ஜானகி பாடுன பாடல்களா தேடி ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு (ரமேஷ்-சுரேஷ் 😉 ).
பாட்டைக் கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் வீடியோவை பாக்கலாம்னு பாத்தா மொபைல்ல இருந்து பாக்க முடியல. ஒரு வேள அந்தப் பாட்டைலாம் பாத்து ஜென்ம சாபல்யம் அடைய நமக்கு குடுப்பினை இல்லையோ என்னவோ ;).
நமக்கும் ‘சாமி’ பாட்டுக்கும் என்ன ராசியோ தெரியல, ரொம்ப கஷ்டப்பட்டுதான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. இதுக்கு முன்னாடி தழுவாத கைகள், இன்னைக்கு இந்தப் பாட்டு. சின்னப் பையனா இருக்குறதுல இவ்வளவு கஷ்டங்களா ;).
@rajabalanm
Rex Arul said:
அப்படி ஒரு ஜென்ம சாபல்யம் கிடைக்காம போய்விடக்கூடாது என்ற உன்னத(??) நோக்கத்தோடு தான், காணுங்கள் வெண் திரையில்ங்ற ரேஞ்சுல ஏத்திவுட்டேன் 😉
ஒரு சின்ன பையனோட கஷ்டம், இன்னொரு சின்ன பையனுக்குத் தான் தெரியும் என்ற புரிதலில், உங்கள் வேதனையை பகிர்ந்துகொள்கின்றேன்.
எப்படி? 😉
விவிசி…
plum said:
after going through elaborate youtube related discussions on TL., I think I am able to guess this one. Youtubela oru nALil romba prasiththam.
S Janaki singing wiht unusual singers, maharajan, deepan-nu yOsichEn. Then remembered Ramesh sung this one, Guessing hero is Suresh, and heroine is Nalini who is famous in TV serials
CorrecA?
Rex Arul said:
கரீட் 🙂