Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்று இரவு, நீர்ப்பறவை என்ற படத்தை பார்த்தேன். அருமையான படம். அதில் இருந்து மீள உதவிய இந்த பாடலே, இன்றைய க்ளூ 🙂

இந்த பாடல் வெளிவந்த சமயம், தமிழ் திரை இசையின் நாட்டம் வேறு பக்கம் இருந்த சமயம். புதிய விதமாக இருந்த இசையமப்பிலும், நுட்பமான ஒலிகளின் உயர்தர ரெக்கார்டிங்கிலும், மக்களின் ரசனைகள் மாறிக்கொண்டிருந்த சமயம். இருந்தாலும், இசைஞானியின் இசையில், அதே ஸ்டைல், அதே பாவம் நிறைந்த பாடல்களும் வந்துகொண்டிருந்த சமயம். அந்த சமயத்தில், வந்த இந்த பாடல், செம ஹிட். எந்த அளவுக்கு ஹிட் என்றால், பள்ளி மாணவர்களில் இருந்து, கல்லூரி மாணவர்கள் வரை. கோயம்புத்தூரில் நான் இதை கண்ணால் கண்ட முறையில் பதித்து வைக்கிறேன்.

இந்த பாடலுக்கு, இன்னொரு முக்கிய சிறப்பம்சம், இதில் நடித்த ஹீரோவும் ஹீரோயினும். அருமையான கெமிஸ்ட்ரி. அதற்கேற்றாற்போன்ற கதையம்சம் கொண்ட படத்தில் வரும் டூயட் இது. இதை கேட்டாலே, பசும் புள்வெளிகளில் நம் மனம் அலைபாயத் தொடங்கிவிடும்.

என்னவொரு எனர்ஜி, என்னவொரு பெப்-அப்! ஆஹா. இந்த குறிப்பிட்ட இடையிசையை நான் தேர்ந்தெடுக்க காரணம், இதில் அடங்கி வரும் சந்தூரின் இசையை குறியிட்டுக் காட்டத்தான். நன்கு கவனித்து கேட்டால் மட்டுமே, சந்தூரின் ஒலியை ரசிக்கலாம். எப்பவும், சந்தூரின் ஒலி, மற்ற எல்லாவற்றையும் ஓரம்கட்டிவிட்டு ஓங்கி ஒலிக்கும். இல்லையா? இங்கே பாருங்கள். ஷெனாய், புல்லாங்குழல், கிடார், தபலா, வீணை மற்றும் வயலின்கள் கூட கேட்கலாம், ஆனால் சந்தூரை கவனித்து கேட்டாலே அன்றி முடியாது. ஏன் இப்படி ஒரு அருமையான இசைக் கருவியை ராஜா வேண்டுமென்றே அடக்கி வாசித்து இருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அந்த அழகு என்னை மிகவும் கவர்ந்தது. அதை பகிர்ந்துகொள்ளும் விதமாக தான் இன்றைய க்ளூ 🙂

இந்த பாடலின் ஆரம்ப இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அது தெரியாதவர்களும் இருக்க முடியாது. அதனால் தான் அதை கொடுக்காமல், இந்த இடையிசையை கொடுத்துள்ளேன் 🙂

சற்றே மூட் அப்செட் என்றாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, இந்த ஆரம்ப இசையும், இந்த இடையிசையையும் ஒரே ஒரு முறை கேட்டால் போதும், மனம் எங்கோ பறந்து உயர, உயர சென்றுவிடும். 🙂

சுலபமான க்ளூ தான். கண்டுபிடியுங்கள்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Director for this movie has the same name of a veteran, famous, Hindi movie director. Movie title has Sanskrit-based words in it.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Intha Maamanoda (இந்த மாமனோட மனசு) from Uthamma Raasa (உத்தம ராசா) (1993)