Tags
@antonyKovai, @aravindmano, @arivpr, @baraneee, @dhanasekharjp, @dtwdy, @ezharai, @gksankari, @hakkeemCBE, @its_my_wish, @JMR_CHN, @kaarthikarul, @kmathan, @maestrosworld, @manivel, @mavurundai, @mnkavitha, @mrajaiah, @msathia, @muthiahrm, @narendhirank, @nchokkan, @nemkals, @nradhakn, @paval, @prasannaR_, @RagavanG, @rajabalanm, @rmdeva, @rozavasanth, @rrslm, @seevin, @senshaman, @sivaramang, @soundparty, @StallionStorms, @sundar140, @tcsprasan, @thachimammu, @tsureshkumar, @vasdeep, @vigneshram, @vrsaran, @vsandhiyaa
Before we move to today’s quiz — 7th in Season-2, please take a look at the Ranking position for Season-1 (Clues 1 to 100). Please write to me, if there are any issues.
I am sure, you will be excited to throw your lot behind Season-2 as @rozavasanth avows here 🙂
https://twitter.com/rozavasanth/status/267690984018677760
இது தான் சூளுரை! Super! வாழ்த்துக்கள் நண்பரே! நீங்களும், இறங்கி கலக்குங்கள் :))
இன்றைய புதிருக்குள் போவோம்.
வணக்கம் அன்பர்களே. நேற்றைய க்ளூ மிகவும் சுலபம் என்றும், எனது கணினியை hack செய்யவேண்டும் என்றும் இருவேறு கருத்துகள் நிலவியது ஆச்சரியம்தான். இருந்தாலும், பெரும்பான்மையானோரின் கருத்து, புதிர் சுலபமாக இருந்தது என்பதே. மகிழ்ச்சி 🙂
பண்டிகை நேரம் என்றாலே, சொந்த ஊருக்குப் பயணம் செய்வது, அண்டை அயலாரிடம் பலகாரப் பரிமாற்றம், புது உடை, பட்டாசு, மத்தாப்பு, வெடி, நண்பர்களுடன் விருந்து, etc., etc.,
சரியா?
ஆனால் சிலருக்கு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என்பதெல்லாம் தனிமையிலேயே கழியும். எத்துணை முறை நாம் அவர்களை நினைத்துப் பார்த்திருக்கிறோம்? அது நம் எதிர் வீட்டு Flatல் வசிப்பவராகக்கூட இருக்கலாம். வேறு ஒரு மாநிலத்திலோ, நாட்டிலோ குடும்பத்தை விட்டுவிட்டு வயிற்றுப் பிழைப்புக்காக வந்தவராக இருக்கலாம். அல்லது, உடல்நலமில்லாமல் தனிமையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு நம்பிக்கை என்னும் ஒரே ஊன்றுகோலில் வாழ்கையை நகர்த்திக்கொண்டு இருப்பவராக இருக்கலாம். அல்லது, சிறையில் வாடுபவராக இருக்கலாம். அல்லது, மகன், மகள், பேரன், பேத்தி, ஒருவரும் இல்லாமல் தனிமை இருளில் வாடும் வயதானவர்களாக இருக்கலாம். அல்லது, terminal-condition என்று மருத்துவரால் அதிர்ச்சி diagnosis வாங்கியவராக இருக்கலாம். அல்லது, தாய் தந்தையரை விட்டுவிட்டுத் தனியே வேறு மாநில / நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தனிமையில் வாடும் மாணவராக இருக்கலாம். அல்லது, பல படங்களில் வருவதுபோல, வீட்டை விட்டு ஓடிய காதலன் / காதலியாக இருக்கலாம்…
எது எப்படியோ, தனிமையில் உழன்று வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த தீபாவளி இன்பத்தையும் சந்தோஷத்தையும் கொண்டுவரவேண்டும் என்பதே நம் #365RajaQuizன் விருப்பம். யாரையும் சென்டிமெண்டில் மூழ்கடிக்கவேண்டும் என்பது நம் எண்ணம் அல்ல. ஆனால், ஒவ்வொரு பண்டிகையின்போதும், நமக்குத் தெரிந்து இம்மாதிரி யாரேனும் தனிமையில் இருந்தால், நம்மால் இயன்ற அளவுக்கு reach-out செய்வது மனிதாபிமானமான செயல்மட்டுமல்ல, சரியான செயலும்கூட. சரியா?
சரி. இப்போது புதிருக்கு வருவோம். இந்தப் புதிரில் வரும் பாடலும், நாயகன் தனிமையில் பாடும் ஒரு பாடல்தான். குழந்தைகள் தினம் வேறு இந்த வாரம் வருகிறது. எனவே, தீப ஒளித் திருநாளாம் இந்த பண்டிகை நாளிலே, தீபத்தின் ஒளியாக விளங்கும் நம் குழந்தைகளுக்காக இந்தப் பாடல் வருவதாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்ப இசை, குழந்தைகளின் அந்த innocenceஐப் படம்பிடித்துக் காட்டும் இசை. அதற்குப் பக்கபலமாக வருவது, violin இசை. தனிமையின் இருளை உணர்த்தும் flute அதைப் பின்தொடர்ந்து நிறைய நேரத்துக்கு வருவது சிறப்பு. இறுதியில், ஆரம்பித்தமாதிரியே, அந்த childlike interlude வருகிறது.
இந்தப் பாடலை பாடிய பாடகருக்கு, நேற்றும், இன்றும், நாளையும், என்றென்றும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கவே செய்வார்கள். ஒவ்வொரு உணர்வையும் செதுக்கிப் பாடும் அன்னார்க்கு வந்தனம்!
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.Lyricist for this song is Kavignar Vairamuthu. Director for this movie is SP. Muthuraman.
Answer: Vaa Vaa Vasanthame (வா வா வசந்தமே) from Puthu Kavthai (புதுக்கவிதை) (1983)
இராதாகிருஷ்ணன் said:
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே… இதுவும் தீவாளி பாட்டு மாதிரிதேன். 😉
Muthiah (@muthiahrm) said:
பாடல் – வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே…. தெருவெங்கும் ஒளி விழா, தீபங்களின் திருவிழா
படம் – புதுக்கவிதை
பாடியவர் – மலேசியா வாசுதேவன்.
என். சொக்கன் said:
Vaa Vaa Vasanthame from Puthukkavithai
R. Saravanan said:
பாடல் ” வா வா வசந்தமே, சுகம் தரும் சுகந்தமே “. படம் புதுக் கவிதை !
prasannaa said:
வா வா வசந்தமே. படம் புதுக்கவிதை.
@tcsprasan
Mathan (மதன்.க) (@kmathan) said:
Vaa vaa vasanthamey – pudhu kavidhai
sivaramang @sivaramang said:
’வா…வா…வசந்தமே சுகம் தரும் சுகந்தமே…. ’ –
’புதுக்கவிதை’ திரைப்படத்திலிருந்து –
மலேஷியா வாசுதேவன் பாடியது.
Antony said:
@antonykovai
பாடல் : வா வா வசந்தமே
படம் : புதுக்கவிதை
Kaarthik Arul said:
Vaa Vaa Vasanthame from Pudhu Kavidhai wonderfully sung by Malaysia Vasudevan. Perfect quiz for Diwali 🙂
The song is based on one of the beautiful ragas – Vaasanthi
Ariv said:
@arivpr Vaa Vaa Vasanthame
Vignesh (@vigneshram) said:
பாடல்: வா வா வசந்தமே
படம்: புதுக்கவிதை
@vigneshram
Kamal said:
Va Va Vasanthame from Pudhu Kavithai
Anonymous said:
புதுக்கவிதை (1982) – வா வா வசந்தமே
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
@manivel
Prasanna Venkatesan (@prasannaR_) said:
பாடல்: வா வா வசந்தமே
படம்: புதுக்கவிதை
இந்தப் பாடலைப் பற்றியெல்லாம் ஏதாவது சொல்லணுமா என்ன?
மலேசியா கல்வெட்டுகள். அவ்வளவுதான்! 🙂 🙂
Maheswaran Rajaiah (@mrajaiah) said:
வா வா வசந்தமே – புது கவிதை
Baranee (@Baraneee) said:
Vaa Vaa vasanthamey – Puthukkavithai
ராஜா said:
புதுக்கவிதை படத்திலிருந்து வா வா வசந்தமே பாடல்.
ஆடியோவ கேக்க ஆரம்பிச்சதுமே என்ன பாட்டுனு தெரிஞ்சிடுச்சி.
இந்த மாதிரி மனசை கட்டி இழுக்கிற பாட்டுகளா பாடினா எப்படி சார் வெறித்தனமான ரசிகர்கள்லாம் இல்லாம இருப்பாங்க 🙂
@rajabalanm
Vijay said:
Vaa Vaa VasanthamE (first interlude) from Pudhu Kavithai. MV Annan at his best. The way he pronounces ‘sugantharum sungathamE’ is something very special. Very sweet song to start the fresh week. What to tell about this song? MV sir can you come back please?
ஏழர said:
வா வா வசந்தமே – புதுக்கவிதை
sankari said:
va va vasanthame from PUTHUKAVITHAI.
Subtle_Sandya (@vsandhiyaa) said:
தெருவெங்கும் திருவிழா தீபங்களின் திருவிழா 🙂
வா வா வசந்தமே சுகந்தரும் சுகந்தமே! – புதுக்கவிதை 🙂
Subtle_Sandya (@vsandhiyaa) said:
*ஓளிவிழா.
Kavitha said:
Vaa vaa vasanthame sugar tharum!
Anonymous said:
@seevin Pudhu Kavithai Vaa Vaa Vasanthame…..Thank you
Anonymous said:
@hakkeemCBE pudhu kavithai Vaa Vaa Vasanthame
Anonymous said:
@hakkeemCBE pudhu kavithai Vaa Vaa Vasanthame Rajnikanth
dtwdy (@dtwdy) said:
Va Va Vasandham.
Just checked in my closet, the cassette tape is still with me, safe in a shoe box. Thanks to my wife saving it in each move. I need to get a player just to show my son, whose current firstworld problem is that his netflix movies don’t play in the van 🙂
dtwdy (@dtwdy) said:
Va Va Vasandhame – Typo fix 🙂
sundar (@Sundar140) said:
புதுக்கவிதை படத்தில் அண்ணன் மலேஷியா வாசுதேவன் பாடிய ‘வா வா வசந்தமே என்கிற மறக்க முடியாத பாடல். ரெக்ஸ் நடத்துகிற க்விஸ் போட்டிகளில் முதல் இடமா, கடைசி இடமா என்கிற தற்காலிகக் கவலை அல்லது சங்கடங்களைத் தாண்டி சுகமாக ரசிக்க வைக்கிற பாடல். தெருவெங்கும் ஒளி விழா தீபங்களின் திரு விழா அடடா கவிஞர் வைரமுத்து அவர்களின் வைர வரிகள் மலேஷியா அண்ணனின் குரல் துணைக்கு ராசைய்யாவின் மனசைத் தொடுகிற இசை…
Senthil said:
Pudhu Kavithai – Vaa Vaa Vasanthamey
@senshaman
RR said:
@@RRSLM
வா வா வசந்தமே – புது கவிதை – மலேசியா வாசுதேவன்
@paval said:
வா வா வசந்தமே – புதுக்கவிதை
Udhayakumar Durai (@soundparty) said:
vaa vaa vasanthame – Puthu kavithai
Nemkal Sanjheevi said:
Vaa Vaa Vasanthame from Pudhu Kavithai – Thalaivar padam ————- @nemkals
Arun Rajendran said:
Vaa Vaa vasanthamae…from Pudhu Kavidhai..again MV sir pattu…yenna oru feelings…appadiyae andha Rajni character-oda sogatha uLvaangi veLi paduthi irupar….solla vaarthaigal illai…
@rmdeva said:
Va va vasanthame from pudhukavithai. Iniya kuralonin iniya paadal. Today took more time for me to conclude as some how i thought the clip is not from va va vasanthame song even thout it strikes slightly on my mind.
msathia said:
வா வா வசந்தமே… புதுக்கவிதை.
Anonymous said:
புதுக்கவிதை – வா வா வசந்தமே
mavurundai said:
புதுக்கவிதை – வா வா வசந்தமே
tsureshkumar said:
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே – புதுக்கவிதை.
“நீயாவது நல்லாயிருக்கியா?” 🙂
tsureshkumar said:
@tsureshkumar
Naren said:
Song : Va Va Vansanthame , Sugama tharum suganthame
Film : Pudhu Kavithai
dhanasekharjp said:
vaa vaa vasanthame – puthu kavithai
GiRa ஜிரா said:
எஸ்.பி.முத்துராமன்… தமிழ் திரைப்படங்களில் மறக்கப்படவே முடியாத இயக்குனர். அவர் கடந்து வந்த பாதைகளையும் எடுத்த படங்களையும் உடன்பணிபுரிந்த கலைஞர்களையும் நினைத்துப் பார்க்கப் பார்க்கப் பரவசம்.
குடும்பம் ஒரு கதம்பம் படம் இவர் இயக்கியது என்று பலருக்குத் தெரியாது. கதையும் வசனமும் விசு. ஆனால் இயக்கம் எஸ்.பி.எம்.
கருப்பு வெள்ளையில் தொடங்கியது இவர் பயணம். இவர் எத்தனை நகைச்சுவைப் படங்களை எடுத்திருக்கிறார் தெரியுமா? அந்தப் படங்களைத்தான் இன்றைய நகைச்சுவைப் படங்கள் ரீமிக்ஸ் செய்கின்றன என்பது உண்மை. அதிலும் குறிப்பாக சீதையின் கணவனையும் திருமகளின் கணவனையும் இணைத்த பெயர் கொண்ட இயக்குனரின் படங்கள்.
இவர் பணிபுரியாத இசையமைப்பாளர்களே இல்லை. மெல்லிசை மன்னர் ஒரு படத்துக்கு இசையமைப்பார். அடுத்த படத்தில் இளையராஜா இருப்பார். ஆனால் எல்லாரிடமும் நல்ல பாடல்களை வாங்கிவிடும் திறமை இவருக்கு உண்டு.
புதுக்கவிதை… இது ஒரு காதல் கதை. படத்தில் சில சண்டைக்காட்சிகள் இருந்தாலும் இது ரஜினி படமே அல்ல. கமல் வகைப் படம்.
ஆனாலும் ரஜினியை வைத்து ஒரு காதல் படம் கொடுக்க முடியும் என்று நிரூபித்தார். கேபி ரஜினியை வைத்து தில்லுமுல்லு என்னும் நகைச்சுவைப் படம் கொடுத்தது போல.
பண்டிகைகள் கொண்டாடப்படுவதற்குதான். நம் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கி அந்த மகிழ்ச்சியை மற்றவர்களோடு.. அதுவும் உற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதுதான் பண்டிகை. வாழ்க்கை.
எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. இந்தக் கதாநாயகனும் அப்படிதான். மனதைத் தொட்ட உறவுகளும் உறவையே விட்ட உறவுகளும் அவன் நிலை. எதிர்பார்த்த உறவுகள் பாராமல் போனால் எதிர்பாராத உறவுகள் பார்க்கும். இங்கு பார்த்தது ஒரு குழந்தை.
பட்டுச் சட்டையிட்டு மினுக்கும் பாவாடையில் காலில் கொலுசொலிக்க கையில் வளை சிரிக்க நெற்றியில் திலகம் துலங்க… அனைத்துக்கும் மேலாக உதட்டில் சிரிப்போடு வந்த குழந்தை.
இருப்பதை நினைத்து இழந்ததை மறப்பது நியாயம். அதுதான் முறை. அதுதான் நல்லது.
அந்த நல்லதுக்காகவே வந்தது தீபாவளி. அது குளிர்காலத்தில் வரும் பண்டிகையானாலும் அதுதான் அவனுக்கு வசந்தகாலம்.
வந்த வசந்தத்தை வரவேற்கிறான்…
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளிவிழா
தீபங்களின் மணிவிழா!
இந்த வசந்தம் இனிய வசந்தமாகட்டும். இனியென்றும் நிலைக்கும் வசந்தம் வசமாகட்டும்.
வாழ்க. வளர்க. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
mavurundai said: